CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Thursday, September 20, 2007

ஒரு ஏழைப்பெண்ணின் அறைகூவல்

நாங்கள் ஆட்சிக்கு வந்தால்

நல்லதே செய்வோம்-உங்கள்

ஓலைவீடுகள்

ஒளிமயமாகும் என்றீர்கள்- ஆனால் உங்கள்

ஓட்டுச்சண்டைக்கு எங்கள்

ஓட்டைவீடுகளுக்கு

அள்ளிக்கொடுப்போம் என்று

கொள்ளிவைத்து விட்டீர்களே

எங்கள் வீட்டு

அடுப்பெரிய தானே வழிகேட்டோம்

இடுப்புகுழந்தையை எரித்தீரே..

உம்முடைய சதிக்கு எமக்கு

நிவாரணநிதி எதற்கு

கட்சிக்காக

தட்சணை கூட வாங்காமல்

உழைத்த என் கணவனுக்கு

குவாட்டர் வாங்கிகொடுத்து

குடிகாரனாக்கி விட்டீர்.

ஆயினும் அவன் செய்த

குறும்பால்

குழந்தை ஒருவன் வளர்கிறான்

வளர்க்கிறேன் அவனை

வல்லவனாக.உம்

வலிமையை

வலுவிழக்கச்செய்து

வாரிசுகளை வதைத்தெடுப்பான்

0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..: