நினைவஞ்சலி.
பெற்றவள் துடிதுடித்து..
மகனிடம் கண்ணீர் சிந்தி
கஞ்சிக்கு கையேந்த...
மகனோ..
மாற்றாம் தாய்
இறந்த செய்திகேட்டு
தாய்மையைப் போற்றி
அனுதாபக் கவி அச்சிட்டு
மக்கள் மத்தியில் புகழ்..
தேடுகின்றான்.
இல்லம்--
பெயரோ
அன்னை இல்லம்
அன்னையோ
முதியோர் இல்லத்தில்...
Thursday, November 29, 2007
இதயம் வலித்த வரிகள்-கவிதைகுயிலிடமிருந்து
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 9:44 AM 1 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க.. Links to this post
Friday, November 23, 2007
என் காலையிலே.....
அழகான காலைப்பொழுதில்
அங்கமெனது சோம்பலுறிக்க
அடியெடுத்து வைத்தேன் வெளியே
அடுத்தவீட்டு வாசலிலே
அரிசிமாவெடுத்து
அதிசய தேவதையொன்று
அழகிய கோலம் வரைய
அங்கேயே மெய்மறந்தேன்.....
நிஜமதை மறந்து
நிழல்கனவு கண்டேன்
நித்திரையது கலைந்தும்...
சில்லென்ற பனித்துளியது
புல்லின்மீது படுத்துறங்கும்
ரம்மியமான இயற்கைக்கும்
போட்டியாய்
முத்தான வேர்வைகள் உன்
முகம் உதிர்த்தகாட்சி....
எத்தனைமுறை
இடம் மாறி மாறி
வரைவாய்...
உன் கால்கள் நினைத்து
என் மனது வலிக்கிறது...
நீ வைத்த
புள்ளிகளது என் நெஞ்சமதை
அள்ளி சென்றதை
எப்படி உரைப்பேனடி
கள்ளி உனக்கு.....
உன் ஈரக்கூந்தலது
இலேசான முடிச்சோடு
இடைவந்து மோதும் போது
சிக்கெடுக்காத கூந்தலில்
சிக்கிவிட்ட இதயத்தை
திரும்ப கேட்க முடியவில்லை....
உன்
கால் கொலுசொலியின்
ஓசையிலே
நாள் முழுதும் நிற்கதுடிக்குது
ஆசையிலே.....
அட..
ஒருவழியாய்
கோலம் முடித்து என் நிகழ்
காலத்துக்கு அழைத்துவந்தாய்...
பிரம்மனின் படைப்பையே
பிரமித்து பார்த்தவனின்
கரம்பிடித்து என்ன என்றாயே?
நரம்புகள் சிலிர்த்து
கிறங்கிபோனேனே.......
அடிகள்ளி
உனக்கும் ஆசையா
என உன் கரம் பற்றியவை
உதறிவிட்டு
சிரித்துக்கொண்டே
சித்திரமாய்
ஓடி உன் வீட்டின் கதவினில்
ஒளிந்துகொண்டு
ஓரவிழியால் பார்த்து
வெட்கபட்டாயே....
ரவிவர்மனின்
ஓவியத்தைவிட
கவித்துவமான
கவிதையா????
சிலையா நீ
பிரம்மனின் கலையது
வரம்பில்லா உன் அழகினால்
திணறிப்போனேன் நான்
தவமிருக்க துணிந்தேன்
வரமாய் உன்னை பெற.........
நீயே
என் வாழ்க்கைதுணயாய்
வருவாய் என்ற
ஆவலோடு.....
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 3:33 AM 1 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க.. Links to this post
வகை கவிதை