ஓடி விளையாடி
சிட்டென பறந்து நானுமே
பட்டென பறக்கும்
பட்டாம் பூச்சியின்
வண்ணம் ரசித்து
அதை கையில் பிடித்து
என் அருகில் வைத்து
கொஞ்சிவிட ஆசை..
எல்லோரும் போல்
நானும் அனைவரையும்
கண்டே கரம் அசைத்தே
மலர்ந்த முகத்துடன் வரவேற்க
அளவில்லாத ஆசை..
அன்னை அவளின் முகம்
பார்த்து அவள் ஊட்டும்
நிலாச்சோறை நிலவை
பார்த்தே உண்ண ஆசை..
ஆசைகள் அத்தனையும்
அழகான முடிச்சுகளாய்.
ஆண்டவன் படைப்பிலே
குருடாய் பிறந்ததனால்
அறுவை சிகிச்சையாலும்
அவிழாத முடிச்சுகள்
என் ஆசை முடிச்சுகள்...
Thursday, December 20, 2007
அவிழாத முடிச்சுகள்-2
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 2:00 AM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
வகை கவிதை
அவிழாத முடிச்சுகள்-1
சிறுபிள்ளையாய் திரிந்து
குறும்புகள் பல செய்து
ஐந்து வயது முதல்
ஆரம்பமானது பள்ளி வாழ்க்கை
அன்னைதந்தை என்னை
வெளி உலகோடு முடிச்சு
போட்டார்கள் அன்றுமுதல்.
முடிச்சுகள் தொடர்ந்தே
பள்ளி முடிந்து கல்லூரிக்குள்
கல்வியோடு சேர்த்து
காதலாய் அடுத்த முடிச்சு.
அவளுடன் பழகிகொண்டே
இன்பகனவுக்குள் கோட்டை
கட்டியே நானும் செல்ல
உயிரையும் எனக்காய் தரும்
எனக்காய் எதையும் செய்யும்
நண்பர் கூட்டம் இன்னும்
அதிகமான பிணைப்போடு
கூடிய அடுத்த முடிச்சுகளாய்
சந்தோசமான நிகழ்வுகள்
அத்தனையுமே நட்பு
காதல் என எனை மாறி மாறி
மகிழ்வித்த வேளையிலே
மனமொடிக்கும் நிகழ்வொன்று
பிரிவென்னும் வலி முடிச்சு.
அடுத்த சில வருடங்கள்
வேலைதேடி பயணித்து
பயணத்தின் முடிவில்
நல்லதொரு வேலை
வாழ்வின் ஆணித்தரமான முடிச்சு
இம்முடிச்சுகளின் அழகிய
குழந்தையாய் வசதி வாய்ப்புகள்
பெருக ஆசை கொண்டவளையே
அரசியாக்கினேன் முடிச்சுகள் போட்டு
எம் அரண்மனைக்கு..
அழகான குழந்தைகள்
அவர்களுக்காய் உழைப்பு
நடுவிலே கொஞ்சம் ஓய்வு
நானும் வாழ்ந்தேன்
நல்ல கணவனாய் மட்டுமல்ல
தந்தை என்னும் முடிச்சோடு
தன்னம்பிக்கையோடு வாழ்ந்தேன்
தன்னம்பிக்கை முடிச்சின்
தலைபிள்ளையாய் கடமைகள்
முடித்தேன் தந்தையாய்..
கட்டிலறை காதலி என்
கலியுக மனைவி அவளும்
காலன் கை பிடித்தே
சுமங்கலியாய் போன பின்னும்
இத்தனை முடிச்சுகள்
மனதில் கனமானாலும்
மறக்காத சுகமாகவே
அழிந்து போகும் மனிதனுக்குள்
அவிழாத முடிச்சுகள்..
முடிச்சுகள் தொடரும்..
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 1:57 AM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
வகை கவிதை
Wednesday, December 19, 2007
கனவே கலையாதே-2
சலவைசெய்த வெள்ளைதுணி
அளவான கால்சட்டை
அணிந்தே பள்ளிக்கு சென்றேன்
காலை ஆரம்பம் நண்பர்களுடனே
விளையாடி மகிழ்ந்தே மணி
அடித்த கணம் வரிசையில் நின்றே
கடவுள் வாழ்த்தோடு தேசிய கீதமும்
பாடிமுடித்தே வகுப்பறைக்குள்
ஆசிரியரின் பாடம் கற்றே
பள்ளி முதல் மாணவனாய்
பரிசு பெற மேடைக்கு சென்ற
நேரம்...
எட்டி உதைத்ததே
எஜமானனின் காலுமே
வேலை நேரத்தில் என்னடா
தூக்கம் என்று..
நிலைமைக்கு வந்தே கனவையும்
வேண்டினேன்
உன்னிலாவது நான் மாணவனாய்
இருந்துவிடுகிறேன்..
கனவே கலையாதே.
இக்கவி குழந்தைதொழிலாளருக்கு சமர்ப்பணம்
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 3:33 AM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
வகை கவிதை
கனவே கலையாதே.
பள்ளிபருவமது முடிந்தே
கல்லூரிக்குள் காலடிவைத்த முதல்நாளே
கால்முளைத்த சிற்பமாய்
கரம்கொடுத்து பெயர்சொன்னாய்...
நட்பாய் ஆரம்பித்த பழக்கம்
புரிதலின் காரணமாய்
பேசிமுடித்தோம் நாம்
காதலர்களாய் இருப்போமென..
கல்லூரிமுடிந்தே கனவோடு
வெளியே வந்தோம்.
காலமும் வழிவிட்டது..
அதிக சம்பளம் அழகான வீடு
வசதி வாய்ப்புகள் எல்லாமே.
வந்தது .நீயுமே கரம்பிடித்தாய்
மனவியாய்..
இல்லறவாழ்க்கையில் அன்றுமுதல்
நல்லறவாழ்க்கையே வாழ்ந்தோம்
ஆசைகொன்னும் ஆஸ்திக்கொன்றுமாய்
உன்னைபோலவே செதுக்காத சிற்பங்களாய்
இரு குழந்தைகளும் நமக்கு..
இதுநாள்வரை ஒரு சின்ன ஊடலும்
இல்லாமல் சளிப்பில்லாத வாழ்க்கை.
புரிதலின் காரணமாய் நமக்குள் இருந்த
பகிர்தலும் பாசத்தோடு காதலும்
கலந்தே காலமும் கடந்ததே..
கட்டிலில் அருகில் படுத்திருந்த நீ
காலமும் வருமோ காதலோடே
இறப்பேனே என்று கவிதை சொல்லி
கொண்டிருந்த நேரம் காலன் உன்
கைபிடித்து அழைக்க மறுகையை
நாணும் பிடித்தே இருவருமாய்
சென்றோமே. இனிய சொர்கத்தினுள்.
அந்நேரம் தட்டி எழுப்பியதே
அம்மாவின் கரமொன்று.
அலுவலகத்து நேரமானதென்று..
கண்டதெல்லாம் கனவா என
என் நினைவை நொந்து கொண்டே
கனவுக்கு வேண்டுகோள் விடுத்தேன்
கனவே கலையாதே ...........
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 3:12 AM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
வகை கவிதை
சுடும் நிலவு
இரத்தம் அதை பாலாக்கி
பசியில் எனக்கு
ஊட்டிவளர்த்த அன்னை..
நடைபழக என் விரல்பிடித்து
அழகாய் ரசித்தே
ஓட்டபந்தயத்தில்வெற்றி பெற்று
முதல்பரிசோடு வந்ததுவரை
அன்பாக தலை கோதி
அணைத்த அப்பா...
ஊர்சுற்றி திரிந்து
தாமதமாய் வந்தாலும்
ஓடிவந்து உபசரிக்கும்
செல்ல அக்கா...
இன்பமான சுகங்களும்
சோகமான வலிகளும்
என்னுள்ளே இருந்தாலும்
நான் சிரிக்கும் போது சிரித்தும்
எனக்காய் அழுதும்
எப்போதும் எனக்காய்
சிந்தித்த நண்பன்...
பார்த்த நாளிலிருந்து
பறவையாய் என் மனமெங்கும்
இன்பமாய் இருக்க
என்னுள்ளே எனக்காய்
வாழ்ந்த காதலி....
இத்தனை உறவுகள் எனக்காய்
இருந்த போதிலும்பணம்தேடி
அயல்நாடு வந்த போது
பணம் தவிர பாசமும்கிட்டாத
பொழுதும்உடல் நலமின்றி
கிடக்கும்பொழுதும்
உங்கள் நினைவாலே
வாடி தவிக்கும் நெஞ்சத்தோடு
தனிமைக்காய் அமர்ந்திருந்தேன்
நிலவை பார்த்தவண்ணம்...
நிலவும் சுடுதே
என்நெஞ்சமும் வாடுதே.........
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 3:08 AM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
வகை கவிதை
Tuesday, December 18, 2007
நிலவில்லாத வானம்
அன்பாய் கைகோர்த்து நடந்த
அந்தி மாலைப்பொழுது
அவசரமாய் பணிமுடித்து
உனக்காய் காத்திருந்த
பேருந்து நிறுத்தம்
முதல்முறையாய் உன்னுடன்
சென்று வந்த மெரினாகடற்கரை
என் உடல் நனைத்து மனம் தொடும்
அதிசய அலைகள்
சின்னக்குழந்தையாய் நீ
விரும்பி தின்ற ஐஸ்கிரீம்
இயற்கையின் அழுகையாய்
வியக்கவைக்கும் மழையில்
நாமிருவரும் நனைந்தே சென்றது..
குலுங்கி குலுங்கி செல்லும்
பேருந்தின் கடைசி
ஜன்னலோர இருக்கையில் உன்னை
மடியில் கிடத்தி நான்..
பிறந்தநாள் பரிசாய் நீ
எனக்களித்த ஜோடிபுறா.
முதலாய் நான்வாங்கி தந்த
மணம்வீசும் மல்லிகை..
இவையெல்லாம்
இன்றும் நான் கடந்துகொண்டு
தான் இருக்கிறேன்..
நீ இல்லாமல் நினைவுகளை
மட்டும் சுமந்துகொண்டு
நிலவில்லாத வானமாய்.......
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 4:01 AM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
வகை கவிதை
Friday, December 14, 2007
கனவுக்குள் நினைவு
சிவா ஒரு சிறந்த ஓட்டபந்தய வீரன்.அவன் இன்றுதான் இந்தியாவே எதிர்பார்க்கும் அளவிற்கு
ஒலிம்பிக்கில் தங்கபதக்கம் வென்று பெருமை சேர்த்தான்.
அவனுக்குள் ஏகத்தும் மகிழ்ச்சி.அவனுக்கு பாராட்டுகளும் பரிசுகளும் குவிந்த வண்ணம் உள்ளது.
ஓரெ பரப்பரப்புக்குள் அவன் மனம் அங்கில்லை.அவன் எதிர்பார்த்த பாராட்டு வரவில்லை.அவன் மனம்
ஏங்கி தவிக்க அனைவரும் பாராட்டி விட்டு சென்றனர்.தனிமை வேண்டி தன் வீட்டு தோட்டத்தில்
போய் இயற்கையை வெறித்து பார்த்து கொண்டிருந்தான்..
ஜல் ஜல் என கொலுசு சத்தம் அவன் காதுகளில் சங்கீதமாய் நுழைய அவன் காதலி ஜோதி
வந்து அருகில் நின்றாள்..சிவாவுக்கு ஒரே சந்தோசம்.என்ன செய்வதென்றே புரியாமல்
மேலுக்கும் கீழுக்கும் பறந்த அவன் மனதை கட்டுபடுத்தி கொண்டு ஹாய் சொல்லவே
சில நாழிகை ஆனது..
ஹாய் ஜோ உன்னை தான் நான் எதிர்பார்த்துகொண்டே இருந்தேன் தெரியுமா- சிவா
டேய் சிவா உன்னை எல்லாரும் இருக்கும் போது வந்து பார்த்தா மனம் விட்டு கூட பேசமுடியாதுடா
அதான் இப்ப வந்தேன் -ஜோ
சரி நீ எனக்கு என்ன பரிசு தரப்போற சீக்கிரம் சொல்லு- சிவா அவசரமாய்
நீ அடிக்கடி கேட்பியேடா முத்தம்.அது தாண்டா.முதல் முத்தமே உனக்கு இதழோடு சுவைக்க போறேண்டா
என்று அவள் பார்த்த பார்வையே சிவாவை ஏதோ செய்து விட்டது
சிவா எனக்கு என்னவோ பயம்.நான் கண்ணை மூடிக்கிறேண்டி என்று கண்ணை மூடிக்கொண்டான்..
ஜோதி அவன் கன்னத்தில் இரு புறமும் கையை வைத்து அவனை முன்னுக்கு இழுத்து
அருகில் வரும் போது அவ்ளின் மூச்சு காற்று பட்ட இன்பம் சிவா திக்கு முக்காடி இன்னும் ஆவலாய்
ஜோதி இன்னும் நெருக்கமாய் வந்தாள்..
டேய் தண்ட சோறு.படிச்சு நாலு வருசமா ஊர சுத்துற மணி பத்தாச்சு.எழுந்து அந்த சோறு கூட சாப்பிடமுடியாதோ துரைக்கு..இவரை எழுப்பி போடணுமோ..என்று தூக்கத்தில் இருந்த சிவாவை
புரட்டினாள்..
சிவா எழுந்திருக்கவே இல்லை.அருகில் இருந்த விஷபாட்டில் சிவாவை இரவோடு இரவாக எப்போதோ
அழைத்து சென்றிருந்தது..
அவ்வளவு தான் சிவாவின் அம்மா கதறல் ஊரையே கூட்டிவிட்டது.என்னை மட்டும் எழுப்பாமல் இருக்குமா
என்ன? நானும் எழுந்து விட்டேன் தூக்கத்தில் இருந்து
கனவு கலைந்து ஒரு நிமிட அமைதிக்கு பிறகு மீண்டும் அசந்து தூங்கிவிட்டேன்..
கனவுகள் தொடரும்
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 1:15 PM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
வகை சிறுகதை
நானும் அனிதாவும்-சிறுகதை
ஒரு நாள் நைட் 12 மணிக்கு வேலை முடிச்சுட்டு பைக்கில் பறந்து வீட்டுக்கு போய் கொண்டிருந்தேன்..
வீட்டுக்கு ஒரு மூண்ரு கிலோமீட்டர் தொலைவில் தான் நான் படித்த பள்ளி.அழகான மரங்களுடன் பூங்கா போன்ற அமைப்பு அந்த பக்கம் திரும்பி பார்க்கவைக்காமல் இருக்காது..அதே மாதிரி தான் இன்னைக்கும்
திரும்பி பார்த்தேன்..
அட என் தோழி அனிதா வெளிய வருகிறாள்..ஒரே ஆச்சர்யம்.இந்த ராத்திரி நேரத்தில் இவ இங்க என்ன பண்றான்னு..
ஹாய் அனி இங்க என்ன பண்ற இந்த நைட்ல..நான்
அட சும்மாடா எப்ப பாரு உங்ககூட விளையாடின ஞாபகம்.உங்களை வந்து பார்க்க முடியலை.அதான் இங்க வந்தேன்..அனி
ஆமாம் நம்ம பார்த்து ஏழு வருசம் ஆயிடுச்சு இல்ல.எனக்கு கூட அடிக்கடி உன் ஞாபகம் வரும் தெரியுமா.
நான்
அட போடா வாழ்க்கையே வெறுப்பா இருக்கு..பிரண்ட்ஸ்,அம்மா எல்லாரையும் பிரிஞ்சி தனியா இருக்கவே முடியலை..அதான் இப்படி வந்து பார்த்துட்டு போகலாமுன்னு வந்தேன் -அனி
ஏழு வருசமாச்சு இன்னும் அப்படியே தான் இருக்க.இன்னும் மாறலை நீ.. இப்ப நல்லா இருக்கியான்னு கேக்க தான் ஆசை ..ஆனால் முடியலை.உன் கூட யாராச்சும் பேசுவாங்களா நீ இருக்கர இடத்தில் என்றேன்
அப்படியே என் தோளில் சாய்ந்து 'டேய் யாரு என்ன தான் பேசினாலும் நம்ம லாம் விளையாடிட்டு இருந்த மாதிரி இருக்குமா ..எப்படிலாம் பேசுவோம்டா நாம..ஆண் பெண் மாதிரியா டா பழகுவோம்..அப்படிலாம் இன்னும் யாரும் வரலைடா..என்றாள்..
நான் எதுவுமே பேசமுடியாமல் ம்ம் கொட்டினேன்..
சரிடா ஆமாம் நீ லவ் பண்ணிட்டிருந்தியே அவளையே மேரேஜ் பண்னிட்டியான்னு கேட்டாள்.
எங்க எல்லாம் ஊத்திகிச்சு ஏதோ நானும் வேலைக்கு போனேன். வந்தேன்னு இருக்கறேன்.என்ன பண்ண..என்று வழக்கம் போல் அவகிட்டயும் இராமயணம் பாடி முடிச்சேன்..
ஏண்டா எனக்கு தான் எதுவும் சரியா அமையலை..உனக்குமா???????- அனி
ம்க்கும்..போடி லூசு நீ மட்டும் அவசரபடாம இருந்திருந்தா எல்லாமே நல்லபடியா நடந்திருக்கும்..நீயும் இப்ப உன் பையனோட வந்து என் வீட்டில் விருந்து சாப்பிட்டிருப்ப..இப்ப பாரு எத்தனையோ வருசம் கழிச்சு சந்திக்கிறோம்..என்றேன் நான்
சரி விடுடா.நான் தான் அவசர பட்டுட்டேன்.இப்ப யோசிச்சு என்ன பண்றது..-அனி
போடி லூசு..லைப்ப அனுபவிக்க தெரியாம தப்பு பண்ணிட்டு இப்ப புலம்புற- நான்
சரி சரி விடு .இன்னும் புராணம் பாடுறத விடலையா நீ...போற வழியில் தான சுடுகாடு அங்க இறங்கிக்குறேன்.கொஞ்சம் ட்ராப் பண்ணிடுடா- அனி பேசி முடித்தாள்..
ஆமாம் அனி செத்து ஏழு வருசமாயிடுச்சில்ல..கனவு கலைஞ்சு நாணும் எழுந்து ஒரு நிமிசம் உட்கார்ந்து மீண்டும் பழைய நினைவுகளை அசை போட்டுகிட்டு இருந்தேன்..
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 1:13 PM 3 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
Thursday, November 29, 2007
இதயம் வலித்த வரிகள்-கவிதைகுயிலிடமிருந்து
நினைவஞ்சலி.
பெற்றவள் துடிதுடித்து..
மகனிடம் கண்ணீர் சிந்தி
கஞ்சிக்கு கையேந்த...
மகனோ..
மாற்றாம் தாய்
இறந்த செய்திகேட்டு
தாய்மையைப் போற்றி
அனுதாபக் கவி அச்சிட்டு
மக்கள் மத்தியில் புகழ்..
தேடுகின்றான்.
இல்லம்--
பெயரோ
அன்னை இல்லம்
அன்னையோ
முதியோர் இல்லத்தில்...
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 9:44 AM 1 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
Friday, November 23, 2007
என் காலையிலே.....
அழகான காலைப்பொழுதில்
அங்கமெனது சோம்பலுறிக்க
அடியெடுத்து வைத்தேன் வெளியே
அடுத்தவீட்டு வாசலிலே
அரிசிமாவெடுத்து
அதிசய தேவதையொன்று
அழகிய கோலம் வரைய
அங்கேயே மெய்மறந்தேன்.....
நிஜமதை மறந்து
நிழல்கனவு கண்டேன்
நித்திரையது கலைந்தும்...
சில்லென்ற பனித்துளியது
புல்லின்மீது படுத்துறங்கும்
ரம்மியமான இயற்கைக்கும்
போட்டியாய்
முத்தான வேர்வைகள் உன்
முகம் உதிர்த்தகாட்சி....
எத்தனைமுறை
இடம் மாறி மாறி
வரைவாய்...
உன் கால்கள் நினைத்து
என் மனது வலிக்கிறது...
நீ வைத்த
புள்ளிகளது என் நெஞ்சமதை
அள்ளி சென்றதை
எப்படி உரைப்பேனடி
கள்ளி உனக்கு.....
உன் ஈரக்கூந்தலது
இலேசான முடிச்சோடு
இடைவந்து மோதும் போது
சிக்கெடுக்காத கூந்தலில்
சிக்கிவிட்ட இதயத்தை
திரும்ப கேட்க முடியவில்லை....
உன்
கால் கொலுசொலியின்
ஓசையிலே
நாள் முழுதும் நிற்கதுடிக்குது
ஆசையிலே.....
அட..
ஒருவழியாய்
கோலம் முடித்து என் நிகழ்
காலத்துக்கு அழைத்துவந்தாய்...
பிரம்மனின் படைப்பையே
பிரமித்து பார்த்தவனின்
கரம்பிடித்து என்ன என்றாயே?
நரம்புகள் சிலிர்த்து
கிறங்கிபோனேனே.......
அடிகள்ளி
உனக்கும் ஆசையா
என உன் கரம் பற்றியவை
உதறிவிட்டு
சிரித்துக்கொண்டே
சித்திரமாய்
ஓடி உன் வீட்டின் கதவினில்
ஒளிந்துகொண்டு
ஓரவிழியால் பார்த்து
வெட்கபட்டாயே....
ரவிவர்மனின்
ஓவியத்தைவிட
கவித்துவமான
கவிதையா????
சிலையா நீ
பிரம்மனின் கலையது
வரம்பில்லா உன் அழகினால்
திணறிப்போனேன் நான்
தவமிருக்க துணிந்தேன்
வரமாய் உன்னை பெற.........
நீயே
என் வாழ்க்கைதுணயாய்
வருவாய் என்ற
ஆவலோடு.....
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 3:33 AM 1 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
வகை கவிதை
Wednesday, September 26, 2007
கல்லறை என் பார்வையில்
நெஞ்சம் முழுக்க
நிம்மதியுடன்
நிறைவான தூக்கம் இங்கே...
கண்கள் நிறைய
கனவுகள்
கருகிகிடக்கும் இங்கே...
சேராத காதல்கள்
சேர்ந்துவிடும் இங்கே...
சாதனையாளனும்
சதிகாரனும்
சங்கமாமிங்கே...
சாதனைகளின் முற்றுப்புள்ளி
சரித்திரங்கள் கற்கும் பள்ளி...
ஆம்
கற்றுக்கொடுக்காமல்
அனைவரும்
கற்கும்
கல்வி......இந்த
கல்லறை....
(அழியாத கவிபடைக்க ஆசைகொண்டே நினைவில் கொண்டு வந்தேன்...அழியும் மனிதவாழ்வை..அழியாத கல்லறையை)
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 10:46 AM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
வகை கவிதை
Tuesday, September 25, 2007
என் பார்வையில் இயற்கை
மழை
மேக ஒற்றுமையில்
காற்றின் ஒற்றடம்
மழை....
காற்று
ஒட்டுமொத்த மரத்தின்
ஒட்டார சினுங்கல்
காற்று....
வானம்
அழகிய அண்டத்தின்
அழியாத
அதிசயப் போர்வை
வானம்....
சூரியன்
சுறுசுறுப்புக்கு எடுத்துகாட்டாய்
சுற்றி வரும்
நெருப்புக்கோளம்
சூரியன்....
நிலவு
நெருப்பின் நிழலாய்
நெஞ்செங்கும் அழகாய்
கனவெல்லாம்
உலாவரும்
சூரியனின் பிரதிபலிப்பு
நிலா........
(அழியாதகவி படைக்க ஆசைகொண்டு அழகான அழியாத அதிசய இயற்கை என் பார்வையில்
எடுத்துவந்தேன்...தொடரும்)
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 1:43 PM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
வகை கவிதை
Saturday, September 22, 2007
உண்மைகள் பல விதம்
நான் அவளை பார்த்தது உண்மை
அவள் சிரித்ததும் உண்மை
நான் காதல் சொன்னது உண்மை
அவள் ஏத்துகிட்டதும் உண்மை
நான் திருமணம் செய்யநினைத்தது உண்மை
அவள் வேறொருவனை மணம் செய்தது உண்மை
என் மனம் இறந்தது உண்மை
அந்த கிளி பறந்ததும் உண்மை
தோழியவள் வந்ததும் உண்மை
தைரியமவள் தந்ததும் உண்மை
நான் அவளை மறுத்தது உண்மை
நான் இன்னும் சிறந்தது உண்மை
சமூகம் நோக்கி பார்த்ததும் உண்மை
சதி கண்டு வேர்த்ததும் உண்மை
பசிகொண்ட வாழ்க்கை உண்மை
பழம் கொண்ட உணவு உண்மை
ஆறுநாளைக்கு அரைவேளை கஞ்சி உண்மை
ஒரு வேளைக்கு நூறு டாலர் உணவு உண்மை
பார்வையாளன் பணக்காரன் ஆவது உண்மை
வேர்வைசிந்துபவன் கூலிக்காரனாய் இருப்பதுண்மை
வசதிகொண்ட வாழ்வும் உண்மை
வலிகொண்ட ஏழை உண்மை
மரணமும் உண்மை
ஜனனமும் உண்மை
காலம் இருப்பது உண்மை
கருப்பன் ஜெயிப்பது உண்மை
காக்கிற கடவுள் உண்மை
அழிக்கிற காலன் உண்மை
இதிலெல்லாம் எது உண்மை
இதில் எதுவெல்லாம் ஏற்பாடு
இதை அறிவது உங்கள் பாடு
நான் எழுதியது இந்தஏடு
உயர்வை தேட உண்மையை நாடு
உடனே உயரும் உன் நாடு
உண்மை சொல்ல வந்தேனுங்க
தண்மையான வார்த்தை கொண்டு
வெண்மையான உள்ளங்கொண்டு
வன்மை எதிர்த்து போராடு
நன்மைவரும் உன்னோடு
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 12:27 AM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
Thursday, September 20, 2007
ஒரு ஏழைப்பெண்ணின் அறைகூவல்
நாங்கள் ஆட்சிக்கு வந்தால்
நல்லதே செய்வோம்-உங்கள்
ஓலைவீடுகள்
ஒளிமயமாகும் என்றீர்கள்- ஆனால் உங்கள்
ஓட்டுச்சண்டைக்கு எங்கள்
ஓட்டைவீடுகளுக்கு
அள்ளிக்கொடுப்போம் என்று
கொள்ளிவைத்து விட்டீர்களே
எங்கள் வீட்டு
அடுப்பெரிய தானே வழிகேட்டோம்
இடுப்புகுழந்தையை எரித்தீரே..
உம்முடைய சதிக்கு எமக்கு
நிவாரணநிதி எதற்கு
கட்சிக்காக
தட்சணை கூட வாங்காமல்
உழைத்த என் கணவனுக்கு
குவாட்டர் வாங்கிகொடுத்து
குடிகாரனாக்கி விட்டீர்.
ஆயினும் அவன் செய்த
குறும்பால்
குழந்தை ஒருவன் வளர்கிறான்
வளர்க்கிறேன் அவனை
வல்லவனாக.உம்
வலிமையை
வலுவிழக்கச்செய்து
வாரிசுகளை வதைத்தெடுப்பான்
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 1:28 AM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
வகை கவிதை
Wednesday, September 19, 2007
என் தோழி.
குறிக்கோளுடன் பயணித்தவன்
குரங்குமனக் காதலியால்
கிறங்கடிக்கப் பட்ட போது
மரணத்தின் வாசல் சென்றவனை
கரம் பிடித்து
காரணம் கேட்டவள் என்னிடம்
நிவாரணமாய் பேசினவள்-நீ
சந்திக்க உறவுகள் உண்டு
சிந்திக்க உரிமைகள் உண்டு என என்
சிந்தனைக்கு உணர்த்தியவள்..
ஆரோக்கியம் பேணுபவள்
அன்னை என்றால்
அவளும் என் அன்னை.
அறிவுரை தருபவர்
அப்பா என்றால்
அவள் தான் என் அப்பா
அறிவு புகட்டுவார்
ஆசானென்றால்
அவள் என் ஆசான்
காப்பது தெய்வமென்றால்
அவளன்றோ தெய்வம்.
தோழியால் மட்டுமே
அனைத்துமாய்
தோன்ற முடியும்....
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 2:51 AM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
வகை கவிதை
Tuesday, September 18, 2007
மரணமே உன்னை மறுதலிக்கிறேன்
மரணமே உன்னை
மறுதலிக்கிறேன்
மங்கிய என் வழ்வில்
மங்காத ஒளி போல்
மங்கையவள் நுழைந்ததும்
மகிழ்ச்சியில் நான்- அவள் என்
மணவாட்டியானாலும்
மரணமே உன்னை
மறுதலிக்கிறேன்...
என்
கண்ணகி அவளோடு
கள்ளமில்லா காதலோடு
கட்டிலின்பம் துய்த்து
கருவறைசிசு தரித்து
கண்ணன் அவன் பிறந்தாலும்
காலனே உன்னை
மறுதலிக்கிறேன்.
கைக்குழந்தை அவன்
கரம் பிடித்து
கால்நடை பழகி
கல்லூரி முடித்ததும் என்
கண்ணனுக்கோர் ராதையை
கரத்தினுள் கொடுத்தாலும்
மரணமே உன்னை
மறுதலிக்கிறேன்.
என்
பதுமையவள்
பல்லிழந்து முதுமையாய்
படுக்கையில் கிடந்தாலும்
பலமிழக்காத காதலோடு
பத்தினியவள் சுமங்கலியாய்
உன்னடி சேரும் போது
மரணமே என்னை
உனக்கு
விருந்தளிக்கிறேன்....
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 8:27 PM 1 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
வகை கவிதை
Friday, September 14, 2007
என் அழகிக்கு சமர்ப்பணம்
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 12:38 PM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
வகை கவிதை
எதுகைக்காக ஒரு கற்பனை
காலை எழுந்தவுடன்
சேலைப்பூவாம் உன்னை கண்டவுடன்
பாலைமனதாம் எனது
சோலைப்போலாகி விடும்..
ஆலைத்தொழில் முடித்து மறையும்
மாலைச்சூரியன் கூட மனமில்லாது
தான் மறைவான்
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 8:29 AM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
என் காதலே.....
அய்யராத்து பொண்ணு நீயும்
ஒய்யாரமா நடந்து வந்த
மெய்யாகவே காதலிச்சோம்
உயிரைவச்சி மணம்முடிச்சோம் -எனக்காக
அயிரைமீனு குழம்புவெக்க பக்கத்துவீட்டு
மயிலக்காவை நீ கேக்குறீயே -உனக்காக
உயிரைக்கூட தருவேனடி
தயிரைத்தானா உண்ண மாட்டேன்..என்
தங்கமே
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 7:46 AM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
வகை கவிதை
Wednesday, September 12, 2007
மாற்றம் வருமே இம்மாயை உலகில்
மாற்றங்கள் வந்துவிட்டால்
தோற்றங்கள் உருவெடுக்கும்
தோற்றங்கள் உருவானால்
ஏற்றங்கள் வந்துவிடும்
ஏற்றங்கள் வந்துவிட்டால்
சீற்றங்களும்
தோற்றுப் போகும்.
போற்றி வளர்ப்போம்- நம் புகழ்
பெற்ற வம்சத்தை
தேற்றிடுவார்கள் உலகத்தை...
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 11:37 AM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
மோனைக்காக ஒரு உண்மை
நெஞ்சம் எல்லாம்
நெருப்பாய் கொதிக்கும் வேளையில்
நீ வந்ததும் மனம்
நெகிழ்ச்சியில்
நிறைந்து கிடக்க
நிழல் கூட
நிஜங்களாய் தெரிய
நீ வந்து
நீட்டினாய்
நின் திருமண அழைப்பிதழை....
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 10:11 AM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
வகை கவிதை
சமூக நிலை
சாதாரண விசயங்கள் தான்
சகலத்தையும் ஆட்டி படைக்கும்
சக்தியாய் மாறிவிட்டது..
சர்வேஸ்வரன்
சக்தியற்று போய்விட்டான்
சடையப்பன் தானே
சர்வமும் படைக்கும்
சக்தியை பெற்றுவிட்டான்
சாதீயமும்
சடங்குகளும்
சரிபாதி இங்கிருக்க
சதிசெய்யும் மானிடரோ
சங்கூத காத்திருக்க
சகதி நிறைந்த
சமூகம் வேறன்றி
சமத்துவம் தான் எங்கு வரும்
சந்தனம் தான் எங்கு வீசும்
சாதனை தான் எங்கு பிறக்கும்
சரித்திரம் தான் எப்படி படைக்கும்
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 10:08 AM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
நண்பண் நீ இருக்க
தடங்கள் மாறினாலும்
தன்னம்பிக்கை மாறவில்லை
இன்னல்கள் வந்தாலும் என்
ஜன்னல்கள் மூடவில்லை
பிளவுகள் வந்தாலும் என் அறிவு
களவு போகவில்லை
நடைபாதை மறந்தாலும்
நல்வழிகாட்ட
நண்பண் நீ இருக்க
நானும் இருப்பேன்
நன்றி மறவாமல்
உனக்காக...
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 10:06 AM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
மண்ணின் மைந்தனே-நீ தானே மன்னவன்
வாரிச் சுருட்டும்
வக்கிர மந்திரிகளிருக்க
வழிமொழிய
வகைதெரியா மக்களிருக்க
வாரிக்கொடுக்கும்
வள்ளல்களும்
வலுவிழக்க
வசதியில்லா ஏழை வாழ்வில்
வசந்தம் தான்
வந்திடுமா?
உதவிக்கு அலைந்தவன் கூட
பதவிக்கு வந்துவிட்டால்
கதவடைப்பான்
கதம் என்று சொல்லியே
மதம் பிடித்து
- ஆயினும் எம்மக்கள்
அகம் முழுக்க அவனை நினைத்து
யுகம் முழுக்க உழைத்தாலும்
நகமளவு கூட நினைக்காமல்
சுகமான வாழ்க்கை அவனுக்கு
சோகமான வாழ்க்கை எம்மக்களுக்கு
வெளிச்சம் வேண்டி
பளிச்சிடும் சின்னங்களில்
அளித்திடும் வாக்குகளால்
பகட்டான வாழ்வு உனக்கு
இக்கட்டான நிலை எமக்கு
பாவணை செய்வோன் உன்னிடம்
ஆவணத்தை அளித்துவிட்டு
கோவணத்தோடு
அவலமாய் எம்மக்கள்.
அவர் சார்பாய் அறை
கூவல் விடுகிறேன் உனக்கு....
-கேள்
மஞ்சத்திலே
கொஞ்சிக்கொண்டிருப்பவனே
பஞ்சத்தில் அடிபட்டு
மிஞ்சிய எம்மக்கள்
அஞ்சாமல் உனக்கு
நெஞ்சம் கொதித்தால்
தஞ்சம் புகுவாய் நீ
தரைக்குள்...
பாதகம் செய்வோனே
ஆதவன் அஸ்தமிக்கும் காலம்
அருகில் தான் உள்ளது.
எம்மக்களே
ஆதவன் உமக்கு
உதயமாக வேண்டுமானால்
மாதர் பின் அலையாதே
சோதனை முறியடிக்க
சாதனத்தை கையில் எடு
சரித்திரம் படைக்க சாமியை தேடாதே
தரித்திரம் ஒழி -உன்
விழித்திர முதலில்
தனித்திறம் வளர்
உயர்வுக்காக
ஊன் பலி கொடுக்காதே
உன் பலியாம் திறமையை கொணர்
ஊமையாய் இருந்துகொண்டு
ஆமையை குறை கூறாதே
தீமையை சுடு
வேசிபின் அலையாமல்
பாசிகளை களைய முற்படு
தூசிகளை துடைத்து
நேசிப்பாய் சமத்துவத்தை.
யோசிப்பாய் ஒரு நிமிடம்
வேர்வை சிந்துவது நீ
போர்வை தூக்கம் அவனுக்கு
சோர்வை காணும் நீ -தொலைநோக்கு
பார்வை பார் சரியான
தீர்வை காண்..
இனியும் பொறுக்காதே
அணி திரள்வீர்
பணி முடிப்பீர்
கனி நம் கையில்
மண்ணின் மைந்தனே
மன்னவன் என்று நம்
முன்னவன் வினவினான்
உன்னவன் நானும்
வழிமொழிகிறேன்
நீ
இம்மண்ணின் மைந்தனென்றால்
நீ தான்
மன்னவன்...
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 10:03 AM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
வகை கவிதை
Thursday, September 6, 2007
நான் ரசித்தவை
சிநேகிதியே....!!!!
நீ எனக்கு தோழியாக கிடைக்க
நான் ஏது தவம் செய்தேனோ?
கலகலவென நகைக்கும் வயதில்
சலனமில்லாமல் இவ்வளவு சோகமா?
உனக்குள் இருக்கும் சோகத்தை
எனக்குள் இன்றே புதைத்துவிட்டு
கள்ளமின்றிச் சிரித்திட
உல்லாச வானில் பறந்திடு
உன் இலட்சியங்களை நிறைவேற்ற
என்றும் உனக்கு துணையாவேன்
இன்றே விரைந்து புறப்படு
நன்றே நடக்கும் உன்வாழ்வில்
பழையனவற்றை மறந்திடு
புதியதை தேடி விரைந்திடு
சோகத்தை தூக்கி எறிந்திடு
தோழன் என் தோளில்
தலை சாய்த்திடு
ஆயிரம் உறவுகள் தோன்றியும்
அன்பில்லையே என சலிக்காதே
நட்பைவிட வேறேது இன்பம்
நானிருப்பேன் கலங்காதே
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 1:53 AM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
Monday, April 30, 2007
01-06-06
*இன்று
என்னவளுக்கும்
எவனோ ஒருவனுக்கும்
நிச்சயதார்தமாம்
*இன்னுமொரு
பெரிய திருப்பம்
என் வாழ்வில்.
*இழந்தது போதவில்லை
போலும்
பிரிந்துவிட்டாள்
அவளும்
*குமுறுகிறது மனம்
அழுகிறது மனக்கண்கள் -மூட
மறுக்கிறது நிஜக்கண்கள்
*கனவிலே நினைவாகி
நின்றவள்
நிஜத்திலே கனவாகிப்
போனாள்
*கண்களில் காதலாய்
வந்தவள்
கண்ணீரில் கரையவிட்டுப்
போனாள்
*பவுர்ணமி என்று வர்ணித்தேன்
அவளை- நிலவு தேய்ந்து விடும்
என்பதை
மறந்து - ஆம்
மறைந்துவிட்டாள்
*எத்தனை
இன்னல் வந்தாலும்
இணைவோம் என்றாள்.
இணந்துவிட்டது இன்னல்
என்னோடு
இணைந்துவிட்டாள் அவள்
இன்னொருவனோடு
*அவன் எழுதியது நடக்கும்
என்றாள் அன்றே
அவள் அறியாமல் போனால்
தவறில்லை
அவள் மனம் மாறுமென்று
அறியாளோ?
அறிந்தும் கூறாமல் போனதன்
காரணமென்னவோ.
*மாற்றான் கண்பட்டது போலும்
என் வாழ்வில்
மாறியது அவள்
மனம் சட்டென்று
*மாற்றத்தால் அவளறியாள்
என் இன்னலை
மாற்றம் கண்டுதான்
எனக்கும் புரியலை
*காலத்தை காரணம்
காட்டுகிறாள் அவள்
கடந்துவிட்ட வாய்ப்பை
தேடுகிறேன் நான்
*தாய் தந்தை கஸ்டம்
என்கிறாள் அவள்
என்னித்தனைக்கால நஸ்டம்
புரியவில்லை அவளுக்கு
*இன்னலை தேடிப்போனேன்
நானே -இனியவளே என்று
இன்னமும் ஆறலையடி மனது
வடுவாகிப்போனதடி உன் நினைவு
*கால் போனதிசை போகிறது
உடல்
மனம் போனதிசை போகிறது
உயிர்
*உயிரெங்கே தேடினால்
உனதருகே
நீ எங்கே தேடினால்
அவனருகே
*நினைக்க மறுக்குதடி மனமும்
சகிக்க முடியலையடி அதையும்
இறக்க நினைக்குதடி உயிரும்
மறக்க சொல்லுதடி நண்பர் கூட்டம்
*அவரும் அறிவார் காதல்வலி
ஆயினும் தருவார் ஆறுதல்
*இதயத்தில் உன்னை சுமந்ததால்
நானும் ஆனேன் தாயாய்
நீயும் ஆனாய் தாரமாய்
அவனுக்கு
வலிக்குதடி
எனக்கு
*நானும் சுமக்கிறேன்
குழந்தையாய் உன்னை
நீயும் சுமப்பாய்
குழந்தையாய் அவன் வித்தை
நெஞ்சம் கூசுதடி நினைத்தால்
தூக்கமும் வரலையடி படுத்தால்
*இன்பம் போல் தெரிந்து
துன்பம் மட்டும் தந்தவளே
இனியாவது இன்பம்
தருவாய் அவனுக்கு
*உன் மனம் ஒரு
குரங்கு
தயவு செய்து
இரங்கு
என்
ஆணினம் பாவம்
ஆக்கிடாதே சவம்
*தவமிருந்தேன் வரமாய்
உன்னை பெற
கடவுள்தான் இல்லையடி
வரம் தர
*வெளியே சிரிக்கிறேன்
உள்ளே அழுகிறேன்
நானும் ஆனேன் என்னவோ
*என்
பிறை நிலவே
குறை தவமே
அறை மனமே
அகல் விளக்கே
பகல் கனவே
நகல் பொருளே
மொத்தத்தில்
நிரந்தரமில்லாதவள்
நீ
நிலைகுலைந்து போனேன்
நான்.
*சிந்தும் தூரலில்
சிறகடித்து வந்தாள்
- காண கண்கோடி தேவை என்றேன்
கொட்டும் மழையில்
நொறுங்கடித்து போனாள்
- நிற்க தெருக்கோடி கிடைத்தது தான்
அழகு
கோடியை கொடுத்தவன்
கேட்டதை கொடுக்கலையே
*அழகு
ஆபத்து என்றான்
அன்றே கவின்ஞன்
அப்போது கண்டித்தேன் நான் அவனை
இப்போது துண்டித்தாள் இவள் என்னை
*அலசியதில் புரிந்தது
அழிவு தான்
அழகு என்று.....................
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 12:04 AM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
வகை கவிதை
Sunday, April 29, 2007
வரம்.
* என்னவளே
நான் இதுவரையில்
காணாத பெளர்ணமி
உன் முகம்
*நான் என்றுமே
காணாத ஈர்ப்பு
உன் விழி
*நான் உன்னிடம்
பெறாத வரம்
உன் காதல்..
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 11:58 PM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
வேண்டுகோள்.
ஓ! பிரம்மனே
செய்வன திருந்த செய்
என்னவளுக்கு
இதயம் இல்லை
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 11:57 PM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
காதலை வாழவைப்போம்...
*உலகமே வியக்குமினிய காதலை
நாம் வாழ்ந்து கொண்டே
வாழவைப்போம்
*உடல்களின் தேடல்கள் அல்ல- காதல்
இரு உள்ளங்களின் சேரல்
என்பதை உணர்த்துவோம்
*முத்தங்களின் பரிமாற்றமல்ல-காதல்
இரு இதயங்களின் இடமாற்றம்
என்பதை இயற்றுவோம்
*கட்டிப்பிடிப்பதில் இல்லை - காதல்
மனம் விட்டுக்கொடுப்பதில் உண்டு
என்பதை கற்பிப்போம்.
*தற்கொலை செய்வதை ஒழித்து
தன்னம்பிக்கை வளர்ப்போம்.
*எதிர்ப்புகளை
ஏணியாக்குவோம்
*ஆம் அன்பே
உலகமே வியக்கும் இனிய காதலை
நாம் வாழ்ந்து கொண்டே
வாழவைப்போம்..
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 11:46 PM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
காதலை சொல்லி........ காத்திருக்கிறேன்..........
. இனியவளே
உன்னிடம் உதிர்த்த
ஓரிரு வார்த்தைகளுக்கு
என் மனம்
எத்தனை ஒத்திகை
பார்த்திருக்கும்..
.அவற்றை எல்லாம்
போற்றி
பாதுகாக்குமே
என் சிந்தை
.நீரின்றி மீன்களா?
அன்பே
உன் நினைவுகளின்றி
என் கவிதைகளா?
.வடிவமின்றி
நிழல்களா?
.ஆம் அன்பே
இந்த நிழலுக்கு
வடிவம் கொடுக்க
நீ உதிர்க்கும்
வார்த்தைகளுக்கு
காத்திருக்கிறேன்....
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 11:37 PM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
Saturday, April 28, 2007
காதல் சொல்ல வந்தேன்.....
என்னவளே!
நான்
கண்களை திறந்து
வைக்கையில் -நீ
காட்சிகளாய் வந்து
போகிறாய்.........
நான்
கவிதைகளை எழுதி
வைக்கையில் -நீ
மொழிகளாய் தோன்றி
மறைகிறாய்........
நான்
நித்திரையை தழுவி
இருக்கையில் -நீ
கனவுகளாய் தோன்றி
மறைகிறாய்.......
நான்
தனிமையில் நின்று
தவிக்கையில் -நீ
நினைவுகளாய் நெஞ்சை
நிறைகிறாய்...........
- ஆனால்
நான்
காதல் சொல்ல வந்தால்
மட்டும் - ஏன் அன்பே
காட்சிகளை மறைத்து
மொழிகளை மறநந்து
கனவுகளை கலைத்து
நினைவுகளை நீக்கி
மவுனத்தை மட்டும்
எனக்கு
பரிசளிக்கிறாய்......................
தணிகை
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 3:39 AM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
நான் ரசித்தவை
நீ வாழ்வதற்கு பிறந்தவன் வீழ்வதற்கல்ல
யாரது மெளனமாய்
ஏனடா விழிகள் நீருடன்
என்ன!
தோல்வியால் தோய்ந்து போனாயா
கலங்காதே வீரனே!
விழிநீர் துடைத்து
நெஞ்சினை நிமிர்த்து
நீ வாழ்வதற்கு
பிறந்தவன்
வீழ்வதற்கல்ல
உன் அகத்தீயினை
அனைக்க வேண்டாம்
தோல்விக்கு கொல்லியிட
தேவைப்படும் நமக்கு.
உன்னை சுற்றி
புறம் சொன்னோர்நெற்றி
நிலம் காணவைப்போம் வா!
வெற்றியின் விலாசம்
வேண்டாம் இனி உனக்கு
வெற்றி உன்னை தேடட்டும்
அதுதான் என் கணக்கு
புலம்பலை விடுத்து-லட்சியத்தை
புருவத்தின் இடை நிறுத்து
தோல்வி ஓர் கோழையடா!
தோற்றுப்போகும் உன்னிடத்தில்
ஆத்திரமும் அவசரமும்
தோல்வியின் ஒற்றர்கள்
அவர்கள் இனி நமக்கெதற்கு?
கடந்ததை சிதறடித்து
கவனத்தை முன் நிறுத்து
ஆதவன் இனி உனக்கு
அஸ்தமிக்க போவதில்லை!
சாதனை புரியும் வரை-நீ
சாகவும்போவதில்லை
சுறுசுறுப்பு சுடர் ஏற்றி
சோம்பலை சாம்பலாக்கு
திட்டமிடு பக்குவமாய்
திருத்திக்கொள் தவறுகளை
உன்னை விடு என்னை விடு-உன்
உழைப்பிற்க்கு முதன்மை கொடு
உழைப்பென்னும் வாளெடுத்து
முயற்சிப்பாதையில்
நம்பிக்கை குதிரை ஏறி
உலகை வெல்வோம் வா!
வெற்றி நமதே!
--யாழ் பிரபு
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 2:39 AM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
Thursday, April 26, 2007
தோல்விகள்
.முத்தமிழ் மன்ற போட்டியில்
முதல் பரிசு பெற்றவன்
முதல் முறையாய் தோற்றேன்..
சந்தனச்சிலையாம் உன்னை
சந்தித்த முதல் நாள்..
. உடற்பயிற்சி போட்டியில்
முதல் பரிசு பெற்றவன்
இரண்டாம் முறையாய் தோற்றேன்
கண்ணழகியாம் உன்னை
காதலித்த முதலாய்........
. ஆண்டுத்தேர்விலும்
அதிக மதிப்பெண் பெற்றவன்
மூன்றாம் முறையாய்
முழுதும் தோற்றேன்
பதுமையாம் நீ - என்மேல்
பாசம் வைத்த முதலாய்.......
பள்ளி முடிந்தது
பயணம் தொடருமா ?.- என்றதற்கு
. கல்லூரிக்கு போகாதே
கல்யாணம் பண்ணிக்கலாம்.
கம்பெனிக்குப்போ- என்றாய்
காலூன்றமுடியாமல் நான் பட்ட
கஸ்டங்கள் நீ அறிவாய்...
.உன் உள்ளம் போல் வாழவைக்க
உன்னவன்
உழைத்தேன்
உயர்ந்தேன்
உன்னை கண்டபின் முதல் ஏற்றம்
என்னில்.....- மகிழ்ச்சி
.மகிழ்ச்சியுடன் வாழ்ந்தவனை
மணம் முடிக்க அழைப்பாய்
-என்றிருந்தேன்
மாமனோடு திருமணம்
மறக்காமல் வந்துவிடு என்று
மனம் கூசாமல் சொன்னாய்.......
.ஏழரை வருடம் காதலித்து
எட்டு வார இடைவெளியில்
எப்படீயடி
என்னை மறந்தாய்....
.ஜெயிக்க மட்டுமே
ஜனனம் எடுத்தவன் உயிருள்ள
ஜடமாய் இந்த
ஜகத்தினில்..........
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 9:38 PM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
Wednesday, April 25, 2007
என் செல்ல லூசு................
ஏப்ரல் 26 ,2007 என் வாழ்வில் மறக்கமுடியாத நாள்
பேகம் என்னோட தோழி கல்லூரி முடிந்து வீட்டுக்கு போகிறாள்.
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 8:53 PM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
இணைவோம் என்றாள்
எத்தனை
இன்னல் வந்தாலும்
இணைவோம் என்றாயடி -நீ
இணைந்தாய்
இன்னொருவனோடு....- நான்
இணைந்தேன்
இன்னலோடு................
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 3:21 AM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
ஒத்திகை
ஒத்திகை
உன்னிடம்
உதிர்த்த முதல் வார்த்தைக்கு
எத்தனை ஒத்திகை
பார்த்திருக்கும் என் மனம்
- நீ மட்டும்
ஒருமுறை கூட யோசிக்காமல்
வந்துவிடு என்றாய்
உன் திருமணத்திற்கு.................
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 3:20 AM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
இயற்கையும், நீயும்
இயற்கையும், நீயும்
சலனமே இல்லாத
ஓடை - உன் மெளனம்
எழில்மிகு நந்தவனத்தில்
மான் துள்ளல் - உன் கண்கள்
பொட்டல் காட்டில்
மழை - என் மீதான உன் முதல் பார்வை
அழகு தோட்டத்தில் பூத்ததாம்
அத்திப்பூ - என் உடனான உன் முதல் வார்த்தை
சுட்டெரிக்கும் கோடையில்
தென்றல்- என் மேல் உனக்கு காதல்
காலங்களில் சிறந்ததாம்
வசந்தம் - நம் காதல் பயணம்
அழகான அலை அதிலொரு
சுனாமி - என் மேல் உன் கோபம்
பரந்த பூமி பதறும்
நிலநடுக்கம்- உன் திடீர்
திருமணம்.........
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 3:16 AM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
எதிர்பார்ப்பு
என்னவளே!
என் தூக்கத்தை கலைத்தது
எதிர்பார்க்கின்றேன்........
உன் இதழ்களின் இயக்கம்
என் துக்கத்தை கலைக்கும்
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 3:12 AM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
என் தோழி.........
எங்கேயோ தூரமாய்
இருந்து கொண்டு
தொலைபேசியில்
ஹாய் சொல்லிப் பழகி விட்டோம்
"ஹாய்"க்கும் "பை"க்கும்
நடுவில் சிக்கித் திணருகிறது
நம் வாழ்வு
நாம் பேசிய பேச்சுக்கள்
மட்டுமே நம் நினைவுகளின்
எச்சமாய் என்
செவிப்பறைகளில்
எதிரொலிக்கிறது
அலுவலக தொலைபேசியும்,
அருண் ஐஸ்கிரீம்களும்,
இரயில் நிலையங்களும்",
கவிதைகளும்
அடிக்கடிஉன்னை நினைவுபடுத்துகின்றன
சீக்கிரம் வா உன்னைச் சந்திக்கவேண்டும்
காதலியின் பிரிவுகூட
என்னை இப்படி
வாட்டியதில்லையடி
என் தோழி...
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 1:51 AM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
இரவுகளின் பிடியில்..........
எனக்கென்று
இருந்த சில இதயங்கள்
என்னை விட்டு
எங்கெங்கோ பறந்து செல்ல
பரிதவிக்கும் நான் மீண்டும்
இரவின் பிடியில்
இதம் தரும்
இதயங்களைத்தேடி..............
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 12:52 AM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
Tuesday, April 24, 2007
தியாகம்
அம்மாவின் மறைக்கப்பட்ட பசி
அவள் பிள்ளைக்கு
அடுத்தவேளை உணவாய்.........
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 11:07 PM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
உயிர்
ஆண்டவன் அருளால்
அன்னை தந்தையின்
அரவணைப்பில்
அரும்பும்
அற்புதம்......
உயிர்
அற்புதமாய்
தணிகை
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 9:25 PM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
உயிர்
ஆண்டவன் அருளால்
அன்னை தந்தையின்
அரவணைப்பில்
அரும்பும்
அற்புதம்......
அற்புதமாய்
தணிகை
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 9:25 PM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..