CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Thursday, January 3, 2008

அசந்தர்ப்பம்..2

அச்சந்தர்ப்பம் அசந்தர்ப்பமாய் போனாலும்
அடுத்த சந்தர்ப்பத்துக்காய் தயாராக
ஆரம்பித்தே அடியெடுத்தேன்..
உன் கல்லூரி வாசலுக்கே தவம் புரிய
தொடங்கினேன் தொடர்ந்தே வந்தேன்.
தொடர்தலின் முடிவாய் தொட்டு விட்டேன்
கீழே விழுந்த உன் கைகுட்டையை.
எடுத்து கொடுத்த முதல் ஆரம்பமானது
என்னுடனான உன் முதல் வார்த்தை.
சிறிதாய் ஆரம்பித்த வாதாங்கள்
சிரிக்கும் அளவிற்கும் தொடர்ந்தது
நாள்களும் கடந்தது. வந்த வேலை
மறந்தே நானும் வழிய தொடங்கியது
தாமதாய் புரிந்தே தயாரானேன்..
காகிதமும் பேனாவும் போர் புரிய
தொடங்கின அன்று முதல்..
காகிதங்களின் கசக்களுக்குள்
கடைசியாய் கவிதை வடித்தேன்
கண்ணழகி உன் பேரையே எழுதி
வேறெதுவும் அழகான கவிதையாய்
தோன்றவில்லை எனக்கு..
எழுதிமுடித்த கவிதையோடே
எழுந்துவந்தேன் எழிலரசி உனைகாண
எடுத்துகொடுக்குமுன்னே நீ
எடுத்தாய் எனக்கு திருமணம் என்று
உன் திருமண அழைப்பிதழை..
கண்களில் நீர் வர கலங்கி
குனிந்தேன்.சந்தர்ப்பமே இல்லா
அசந்தர்ப்ப வாழ்க்கை நினைத்து..

0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..: