CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Wednesday, January 9, 2008

தேடிக்கொண்டே இருக்கிறேன்........

தேடிக்கொண்டே இருக்கிறேன்....

பரந்து விரிந்த பாலையிலே
சிறகுகள் விரித்தே பறவையது
இரைதேட செல்வதுபோல்
தேடிகொண்டே இருக்கிறேன்..

பசியில் அழுதுகொண்டே
பாலுக்காய் ஏங்கி தவிக்கும்
பச்சிளம் குழந்தையை
குப்பைதொட்டியில் வீசிஎறிந்த
அன்னை தந்தையை தான்
தேடிக்கொண்டே இருக்கிறேன்..

இனவெறி பிடித்து மனிதநேயம்
மறந்து மனிதனுக்கு மனிதன்
இழைக்கும் கொடுமைகளை
கண்டு இரக்கம் என்பதை
தேடிகொண்டு தானிருக்கிறேன்..

வேகமாய் ஓடியே முதலாய்
வரும் குதிரைக்காரனுக்கு
முதல்பரிசு என்பதாய்
உழைத்தே உருக்குலையும்
உழவனுக்கல்லாது எஜமானனுக்காய்
சென்றடையும் ஊதியத்தை தான்
தேடிக்கொண்டிருக்கிறேன்..

பலசரக்கு கடைகளில்
கலப்படமாய் பொருள்விற்று
யாருக்கு என்ன ஆனால் எனக்கென்ன
என்று இருக்கும் கடைக்காரனை போல்

ஏற்றதாழ்வுகளாய் உலகம்
படைத்து மனிதமில்லா மனிதன்
படைத்து வேடிக்கை பார்க்கும்
விந்தை மனிதன் கடவுளைதான்
தேடிக்கொண்டே இருக்கிறேன்

0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..: