CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Saturday, January 19, 2008

நினைவுகளின் வலிகள்

அழகுபூங்காவில் அமைதிதென்றலின்
மெல்லிய ஸ்பரிசங்களாய்
எனக்குள் உன் இதமான
ஆரம்பங்கள் எல்லாம்மூடிகிடந்த
அறையின் சேர்ந்துவிட்ட
குப்பைகளாய் மனதினுள்
நினைவுகளாய் குவிந்தே கிடக்கின்றன.

செல்லரித்த ஓலைகள்
சொல்லிவிடும் வாழ்வியல்விதிகளாய்
இன்னமும்விரும்பியே ஏற்கிறேன்
விலையில்லா உன்னுடனான
நினைவுகளோடு வலிகளையும்..
நாம் நடந்த இடங்களை
நான் மட்டும் தனியாய்
கடக்கும் போதும்

அடர்ந்த காட்டுபாதையின்
தனியான பயணியாய்
பள்ளம் நோக்கி பயணிக்கும்
வண்டல்மண்ணோடு சேர்ந்த
நதியாய் உன் நினைவுகளை
சுமந்துகொண்டே பயணிக்கிறேன்
மரணமில்லா வாழ்வுக்காய்
மரணத்தை தேடி..

1 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..:

ILA (a) இளா said...

//மரணமில்லா வாழ்வுக்காய்
மரணத்தை தேடி..//
அருமையான வரிகள்.