CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Thursday, January 17, 2008

காணாமல் போனவர்கள்

தேடிகிடைத்த இரையை
தன் குஞ்சுகளுக்கு கொடுக்கும்
பறவையை போலே
நாள் முழுதும் வெயிலில்
உழைத்தாலும் தனக்கு
ஊற்றும் கஞ்சியை மிச்சம்
பிடித்து பிள்ளைக்கு தரும்
தாய் குடிகாரகணவனால்
காணாமல் தான் போய்விட்டாள்..

ஓய்வுநாளை அனுபவிக்க
ஓரமாய் நின்று ரசிக்க,
இன்றாவது தன்பிழைப்புக்கு
நிறைய வழிகிட்டாதா என
எதிர்பார்த்து சென்றவன்
இருக்க இடமில்லாமல்
இக்கரையாவது எனக்கு
இருப்பிடமாய் இருக்குமென
உறங்கிகிடந்த யாருமில்லா
சகோதர சகோதரிகாள்
என எல்லோரையும்
எழில் பொங்கும் அலையாய்
இருந்த கடலில் சின்னதாய்
ஒரு சினுங்கல் சுனாமியாய்
இத்தனை பேரும்
காணாமல் தான் போய்விட்டார்கள்..

பலமில்லா ஆட்டுகொட்டகையில்
நரிகள் புகுந்து அவற்றையுமே
அடித்துதின்னுவது போல்
எம் ஈழத்தமிழரின் இடம்தனை
பற்றிக்கொண்டு அவரையும்
துன்புறுத்துவோரை தட்டிகேட்டவரெல்லாம்
காணாமல் தான் போய்விட்டார்கள்.

0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..: