நான் அலுவலகத்துக்கு தினமும் பைக்கில் தான் பறந்து கொண்டிருந்தேன்.ஒரு நாள் கூட ப்ரியாவை பார்க்காமல் சென்றதில்லை.அவள் தினமும் காத்திருக்கும் ரயில் நிலையத்தில் அவள் ஏறும் முன் சென்று ஒரு ஹாய் சொல்லிவிட்டாவது செல்வேன்.இன்றும் ப்ரியாவுக்காய் அங்கே செல்ல திட்டமிட்டிருந்தேன்..
ப்ரியா என்னுடைய 3 வருட தோழி..ரொம்ப நல்லபெண்.பார்க்க அழகும் பேச்சில் அவளின் அறிவும் நமக்கே விளங்கும்..எதார்த்தமான உலகில் எல்லாவற்றையும் நல்லனவாய் பார்க்க எனக்கு கற்றுகொடுத்தவள் அவள்..எனக்கே தெரியாமல் எனக்குள் அவள் காதலியாய் விஸ்வரூபமெடுத்திருந்தாள்..
ஆனால் அவளிடம் என் காதலை சொல்ல பயமும் குழப்பமும் மாறி மாறி உந்தி தள்ள ஒரு காதலனாய் அவள் முன் நிற்க வலிமை இழந்து தான் இத்தனை நாள் கடத்திவிட்டேன்..வீட்டில் திருமணம் பற்றி தினம் தினம் தொல்லை..அதனால் ப்ரியாவிடம்இன்று காதலை தெரியபடுத்தி அவளிடம் சம்மதம் வாங்கும் நோக்கோடு தான் இன்றைய என் பயணம் ஆரம்பமானது..
"எப்படி ஆரம்பிக்கிறது.
ச்சே ஏன்டா நீ இப்படி இருக்க?,ப்ரியா வோடு மணிகணக்கா பேசிட்டு இருப்ப.இப்ப என்ன ஆச்சு?போய் சொல்லுடாப்ரியா உன்னை கல்யாணம் செய்துக்க ஆசைபடுறேன்னு கேளு
ம்ம் ஒரு வேளை சொன்னதுக்கப்புறம் அவ என்னை வெறுத்துட்டா?
இல்லடா ப்ரியா உன்னை வெறுக்கமாட்டா..நீ சொல்லி தான் பாரேன்
இல்ல அவகிட்ட சொல்லி அவளை நான் பிரிஞ்சுட்டா நான் ...ம்ம் முடியாது..
ஏன்டா எப்பவும் நெகட்டிவாவே திங்க் பண்றே..பாசிட்டிவ் திங்கிங் பண்ணேன்டாநீ சொல்லு..அப்படி அவ மாட்டேனு சொன்னாள்னா பேசி புரியவெப்போம்.."
நானும் என் மனதும் பேசிக்கொண்டே சென்றோம்..
மனதின் குழப்பங்களோடு ரயில் நிலையத்தை அடைந்துவிட்டேன்..இன்னமும் ப்ரியாவை காணவில்லை..
ஹலோ ப்ரியா என்ன இன்னைக்கு ஆபிஸ் போகலையா"செல்போனில் அழைத்தேன்
ம்ம் 5 மினிட் அங்க இருப்பேன்"
ஓகே ப்பா" ஏதோ காதலையே சொல்லிவிட்ட திருப்தியோடு போனை அணைத்தேன்.
ஹே ஹேய் என்ன பண்றான் அவன் ..ஹேய் தம்பி நில்லுடா " திடீர்னு ஸ்டேசன்ல கூச்சல்..
பதட்டத்தோடு திரும்பி பார்த்தேன்..ஒருவன் ரயிலின் முன் ஓடி கோண்டிருந்தான்..நான் வேக வேகமாய் எழுந்து அவன் பின் ஓடினேன்..
டேய் தம்பி நில்லுடா ...ஏன்டா இப்படி ..ஹலோ ப்ளீஸ் நில்லுப்பா..." கத்திகொண்டே ஓடினேன்
ரயில் அருகில் வந்து விட்டது.இதற்கு மேல் என்னால் எதுவும் முடியவில்லை கண்ணை மூடிகொண்டு ஹய்யோனு கத்திவிட்டேன்
என்னை விடுங்க ப்ளிஸ்" அவனின் குரல் கேட்டது
அதன் பின் ரயிலின் சத்தம் மட்டுமே காதில் விழுந்தது..
அந்த ரயிலின் சத்தத்தின் காதையும் கண்ணையும் மூடிக்கொண்ட நான் மெதுவாய் ஒரு பயத்தோடே மெதுவாய் கண்ணை திறந்தேன்..முழுதாய் திறப்பதற்குள் நான் இன்னொரு பிறப்பும் எடுத்தேன்..
ஹப்பா அந்த பையன் முழுதாய் ஓரமாய் விழுந்து கிடக்க அவன் பக்கத்தில் ப்ரியாவும் அதிர்ச்சியில் உறைந்து கிடந்தாள்..
ஹைய்யோ ப்ரியா உனக்கொன்னும் ஆகலையே"
இல்ல தணிகை டோன்ட் வொர்ரி..ஐ ஆம் ஆல் ரைட்"
ம்ம்ம்..தேங்க்ஸ் ப்ரியா இவனை காப்பாத்தினதுக்கு"
ம்ம்ம்ம்"
பேசிமுடிப்பதற்குள் சாவதற்கே பிறந்தவன் போல எழுந்து ஓட முயற்சித்தவனை பிடித்து அறைந்தே விட்டேன்..எல்லாரும் எங்களையே பார்க்க அவனோ கண்களில் நீர் ததும்ப சாய்ந்தான்..
"ஏன் சார் ஏன் எனக்கு மட்டும் இப்படி .நான் நினைக்கரது எதுவுமே நடக்க மாட்டேங்குது"
"ஹலோ ஏன் தம்பி இங்க வா ஒன்னும் பேசவேண்டாம் ..உட்கார்" அப்படின்னு சொல்லிட்டு
"ப்ரியா நான் போய் வாட்டர் பாட்டில் வாங்கிட்டு வரேன் வெயிட் பண்னு" ஓடி போய் நொடியில் திரும்பினேன்
அவனுக்கு தண்ணீர் கொடுத்து முகத்தை கழுவிவிட்டு
"உன் பேர் என்னப்பா ? ஏன் இப்படி?""என் பேர் சிவா ,நான் பிரபா ந்னு ஒரு பொண்னை லவ் பண்ணேன் சார்""சரி அதுக்கு ஏன் அவ ஏமாத்திட்டாளா என்ன ?""இல்ல சார் நானும் அவளும் ரொம்ப ப்ரன்ட்ஸா இருந்தோம் சார்" அவன் ஆரம்பிக்கும் போதே ப்ரியா பாப்கார்ன் வாங்கி கையில் வைத்துகொண்டு ஸ்டேசன் கூரையை நோக்கி அசட்டு சிரிப்பு சிரிப்பு சிரித்துகொண்டு இருந்தாள்.
"சரி என்ன ஆச்சு?"
"எனக்குள்ள கொஞ்ச கொஞ்சமா அவ காதலியா நுழைஞ்சுட்டா..அவகிட்ட சொல்லணும்னு எத்தனையோ முறை நினைச்சிருக்கேன்ஆனா அவ காலேஜ் முடிச்சதும் சொல்லிடலாம்னு நான் இருந்தேன்..நினைச்ச மாதிரியே கல்லூரி கடைசி நாள் அவகிட்ட காதல் சொல்ல போனப்ப அவ என்கிட்ட அவளோட திருமண இன்விடேசன் கொடுத்துட்டா,என்னால எதுவும் சொல்ல முடியாம வந்திட்டேன்..ஆனா அவ என் மனசு பூராவும் நிறைஞ்சிருக்கா..என்னால மறக்க முடியலை..அவளை வேரொருத்தரோட க்கூட நினைச்சு பார்க்க மனசு ஒத்துக்கலை...என்னால் அதை பாத்துக்கிட்டு இருக்க முடியாது...நாளைக்கு அவளுக்கு கல்யாணம் ...என்னால வாழவே முடியாது...அவ கிட்ட காதலை சொல்லபோன நேரம் தான் அசந்தர்ப்பம் மின்னு பார்த்தா சாவக்கூட முடியலை..எனக்கு எல்லாமே அசந்தர்ப்பமா இருக்கு" தோளில் சாய்ந்தே அழத்தொடங்கினான்..
"இங்க பாரு சிவா ...இதுக்கெல்லாம் தற்கொலை பண்ணிகிட்டா யாருமே வாழமுடியாது..என்னவோ பெருசா அசந்தர்ப்பம் நு சொல்றியே இதுவும் யாருக்காச்சும் கிடைக்கிற ஒரு சந்தர்ப்பமா தான் இருக்கும்...அசந்தர்ப்பமும் ஒரு சந்தர்ப்பமே" ஞானி மாதிரி பேசி முடித்தேன்.."இல்ல சார் என்னால இனிமே இருக்க முடியாது சார்" அவன் எத்தனிக்க முயற்சித்தான்"ஹா ஹா ஹா ஹா "கண்களில் நீர் வருமளவிற்கு பெரிதாய் சிரித்தாள் ப்ரியா..ஸ்டேசனில் எல்லாரும் எங்களையே பார்க்க
"பிரியா ..ப்ரியா என்ன ஆச்சு ந்ன்னு கத்தி அவளை நிலைக்கு கொண்டு வர
"சிவா என்னை பத்தி தெரியுமா ?உங்களை மாதிரி தான் நான் கூட இதே ரயில் நிலையத்தில் தற்கொலைக்காக வாழ வழிதெரியாமல் வந்தவள் தான்..இதோ இந்த தணிகை தான் இன்னைக்கு நான் உயிரோட இருக்கரதுக்கு காரணமே வாழமுடியும்னு நம்பிக்கை கொடுத்தது எல்லாமே. வாழமுடியும் சிவா வாழ்ந்து தான் பாரேன்"அதிகார தோனியோடு அழகாய் அவள் பேசியது ரசிக்க வைத்தது..
"இல்லங்க நான் அவளை ரொம்பவே லவ்பண்ணேன்..மனசார மனைவியா வாழ்ந்திருக்கேன்..அவ இல்லாம என்னால இருக்க முடியாது"விடாப்பிடியாய் அவன் எண்ணத்திலே இருந்தான்..
"சிவா நான் ஒன்னு கேக்கிரேன் உன்னால் முடியுமா?" ப்ரியா ஏதோ புது உக்தி கண்டவளாய் பேச
"ம்ம்ம் சொல்லுங்க" அவன் ஏதோ ஒப்புக்கு பதில் சொன்னான்.
"நீ அந்த பொண்ணுமேல வெச்ச அதே காதலை முழுமையான அன்பை என் மேல வெக்க முடியுமா? நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்..நீ என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா? சொல்லு சிவா?"கேள்விகளோடு ப்ரியா
உலகமே இருண்டு விட்டதாய் எனக்குள் அந்த கணங்களில் நான் முழுவதுமாய் உடைத்தெறிய பட்டேன்..நிலைகுலைந்து எழுந்தவன் அப்படியே அந்த சேரில் சாய்ந்தேன்...என்ன நடக்கிறதென்று புரியவில்லை எனக்கு..கண்களில் நீர் ததும்ப வெளிக்காட்ட முடியாமல் குனிந்து கொள்கிறேன்.
"அவனோ எதுவுமே பேசமுடியாமல் திகைத்து போய் நின்றான்
"சிவா எனக்குன்னு தணிகை தவிர யாருமில்ல..எல்லாம் அவர் தான்..அவருக்கும் என்னோட இந்த முடிவுல சம்மதமா தான் இருக்கும்..உன்னை மாதிரி ஒரு உண்மையான காதல் வெக்கறவன் கணவனா கிடைச்சா நான் சந்தோசமா தான் இருப்பேன்..இது உன்னோட உயிர காப்பாத்த நான் எடுத்த முடிவில்ல...நல்லா யோசிச்சு என்னோட வாழ்க்கைக்காக எடுத்த முடிவு தான்"
"தணிகை என்ன அமைதியா சொல்லுங்க ?உங்களுக்கு சம்மதம் தானே?"
பதில் சொல்ல முடியாமல் தலையை மட்டும் ஆட்டிவிட்டு குனிகிறேன்..
தணிகை என்ன ஆச்சு உங்களுக்கு சிவா கிட்ட பேசி சம்மதம்னு சொல்ல சொல்லுங்க"
மெதுவாய் கண்களில் வந்த கண்ணீரை துடைத்துவிட்டு " சிவா சொன்னேன் இல்ல அசந்தர்ப்பமும் ஒரு சந்தர்ப்பம்னு .ப்ரியா ரொம்ப நல்ல பொண்ணு ..உங்க வீட்டு அட்ரெஸ் கொடு ..நானே இந்த கல்யாணத்தை பேசி நல்லபடியா முடிச்சு வெக்குறேன்.உன்னோட சம்மதம் மட்டும் சொல்லு" என்றேன்
"சிவா ஏதோ யோசித்து குழம்பியவனாய் தலையை மட்டுமே ஆட்டினான்..சரி அட்ரெஸ் சொல்லு சிவா ந்னு கேட்க" எனக்கு தெரியும் தணிகை..என் பிளாட்டுக்கு எதிர்த்தாப்ல தான் சிவா வீடு"ஆர்வமாய் பதிலளிக்கிறால் ப்ரியா..
அவளின் ஆசைகளை புரிந்தவனாய் என்னுடைய அசந்தர்ப்பம் நினைத்து வருந்திகொண்டே "நான் நாளைக்கு வீட்டுக்கு வந்து பேசுரேன் சிவா, பை ப்ரியா டோன்ட் வொர்ரி நான் நல்லபடியா முடிச்சுவக்கிறேன்"ன்னு சொல்லிட்டு கிளம்பினேன்..
எங்கிருந்தோ அசந்தர்ப்பமும் ஒரு சந்தர்ப்பம் தான் என்ற குரல் கேட்ட மாதிரி தோன்றியது
........................................................................முற்றும்
Wednesday, March 26, 2008
அசந்தர்ப்பம்...
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 9:52 AM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
வகை சிறுகதை
Friday, March 14, 2008
நான் - மெரினா - அவள் -வானவில் - மழை
ஹைய்யா ஹைய்யா எனக்குள்ள திரும்பவும் ஒரு அழகான காதல் பிறந்துடுச்சு..இனிமே பிறக்காதுன்னு தான்
நினைச்சிருந்தேன்..ஆனா என் கனவு புலம்பல்களை கேட்டு எனக்காக ஒரு தேவதையை அனுப்பிவெச்சிருக்கார்
அந்த பிரம்மா..
அட ஆமாங்க எப்பபாரு அழகான பொண்ணு கனவுன்னு சொல்லி உளருவேன் இல்ல..இப்ப உண்மையிலே ஒரு தேவதை வந்தா..உங்க கிட்ட சொல்லாம இருக்கமுடியுமா...பாசக்கார மக்களே உங்களை விட்டா எனக்கு
யாரை தெரியும் சொல்லுங்க?
ம்ம்.கதைக்கு போலாமா ஹைய்யோ இல்ல அது ஒரு அழகான கவிதைன்னு கூட சொல்லலாம்..ஏன்னா அவ ஒரு கவிதை மாதிரி தான் இருக்கா..
போன வாரம் மெரினாவுக்கு போயிருந்தேங்க..வழக்கமான என்னோடு எப்பவும் இருக்கும் என் டைரியோட..கடல் அங்க வர மனிதர் இப்படின்னு எதாச்சும் கவுஜ என்ற பேர்ல கிறுக்கி வெச்சுக்குவேன்.அதுக்கு தான் அந்த டைரி.
போய் அங்க பீச்சில் இருந்த சிமெண்ட் பென்ச் ல உக்கார்ந்துகிட்டு கடலையே தனித்து வெறித்திருந்தேன். அங்க ஒரே காதல் ஜோடி கூட்டமும் ரசிக்கும் குழந்தைகளும் குடும்பத்து ஆசாமிகளும் குவிந்து கொண்டே இருந்தாங்க.. மனசு கடலை பார்த்துகிட்டே ஒரு கேள்வியை என் டைரியில் கை எழுதிட்டு இருந்தது..
அலையே நீயும் நானும் ஒன்றுதான் போல
நீயும் யாரைத்தேடி தான் அலுக்காமல் வந்து போகிறாய் என்னை போலவே.
கவலைப்படாதே என்னவள் வருவாள் அவள் பாதம் தொட்டால் உன் தோஷம் தீரும்..நீ எதிர்பார்த்தவை கிடைக்கும்.
என்று எழுதிவிட்டு சில நேர அமைதிக்கு பின் யாருமே தனியாய் தென்படவில்லை..ச்சே கனவுலயாச்சும் நல்ல பொண்ணு நமக்கு வாய்க்கும் என்று அப்படியே டைரியை பக்கத்தில் வைத்து சாய்ந்துவிட்டேன்..நல்ல தூக்கம் கருமம் கனவு தான் வரலை..சில நேரத்திற்கு பின்
"ஹலோ தணிகை " ஒரு மெல்லிய குரல்.குரலை கேட்டவுடன் வாயில் வழிந்து கொண்டிருக்கும் ஏதோ ஒரு திரவத்தை துடைத்தவாறே எழுந்தேன்.
அட நம்ம கனவுல வர அதே தேவதை மாதிரி ஒரு பொண்ணு.எங்களுக்குள்ள உரையாடல் ஆரம்பமாச்சு..இதோ
என் பேரு எப்படி உங்களுக்கு....."
இது உங்க டைரி தானே.ஒரு குழந்தை எடுத்துட்டு வந்து போட்டுச்சு.நான் உங்களை பார்த்துகொண்டிருந்தேன் அப்போது,அதான் எடுத்துவந்தேன்..பேரை தெரிஞ்சிக்கணும்னு தோணுச்சு பார்த்துவிட்டேன்.மன்னிக்கவும்"
அசட்டு வழிசலோடு "நன்றிங்க,உங்க பே......." ச்சே இந்த அழகான பொண்ணுங்களை பார்த்தா மட்டும் ஏன் தான் நான் திக்குரேனோ தெரியலை
நான் ப்ரியா,இங்க சென்னைல தான் வீடு..எப்பவாச்சும் வருவேன்..தனியா எனக்கு ஒரே ஆச்சர்யம் தனியா உங்க வயசுல ஒரு ஆள் வரதை பார்த்து"
என்ன பண்ணங்க எனக்கு வாய்ச்சதெல்லாம் அப்படி"
அட முன்னாடி அடிபட்டு இருப்பீங்க போல இந்த விசயத்தில்"
தணிகா முத லவ் மேட்டரை எடுத்துவுடாத..அவ மனசுல எப்படியாச்சும் இடம்புடிக்கிற வழியபாருன்னு மனசுல பட்சி சொல்ல
அட அதெல்லாம் இல்லீங்க..உங்க அளவுக்கு மனசுல நிக்குற மாதிரி இன்னும் எந்த பொண்ணையும் பார்க்கல" எப்படிடா பட்டுன்னு சொல்லிபுட்டன்னு ஆச்சர்யமா நானே என்னை குனிந்து பார்க்கிறேன்..
அட என்ன ஐஸா..எனக்கெதுக்குங்க.."
ஐஸ் வாங்கி குடுத்து ஏமாத்திரவன் நான் இல்ல"அப்படின்னு வெகுளியா நடிச்சேன்.
சரி உங்களை பத்தி சொல்லுங்களேன்" அவ
சில நிமிடங்களில் சுயசரிதை எழுதிமுடித்தேன் என் வாய் தமிழால்.ஆனா முதல் காதலியோட மெரினா போன விசயத்தை சொல்லவே இல்ல.
நான்" உங்களை பத்தி சொல்லுங்களேன்"
அழகான உச்சரிப்பு,தெளிவான பேச்சு என அவளை சொன்ன விதமும் எனக்கு ரொம்பவே பிடித்துவிட்டது..அவளின் புருவங்கள் வளைந்து அடிக்கடி ஏவிய பார்வை அம்புகள் எனக்குள் தைத்து சுகமே தந்தது..
பட்டென சொல்லியே விட்டேன்.உங்களை இதுக்கப்புறம் எப்போ பார்ப்பேன்னு தெரியாது.ஆனால் உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குங்க..
காதலிக்குறேன்னு சொல்லதெரியலை..ஆனா கல்யாணம் பண்ணிக்க ஆசைன்னு சொல்லிட்டேன்
பார்த்த ஒரே நாளில் அதுவும் சில மணிநேரங்களில் இப்படி லூசு மாதிரி பேசுறான்னு நினைக்கறீங்களா?.மத்த பசங்க மாதிரி காதல் திடீர்னு வரும்னு டைலாக் விடமாட்டேன்..அவகிட்ட பேசினா கண்டிப்பா வரும்..அவ எனக்கு கிடைச்சது பாக்கியம் எனக்கு..
அப்போ திடீர்னு ஒரே கூச்சல்..ஹை வானவில் வானவில் அப்படின்னு குழந்தைகள் கத்த இருவரது பார்வையும் வானத்தை நோக்கியது.
வானவில் எனக்கு ரொம்ப பிடிக்குங்க.எவ்ளோ அழகு பாருங்களேன்"
அவ தான்
நான் அவளையே பார்த்துகொண்டு வானவில் உங்களை விட ஒன்னும் அவ்ளோ அழகா இல்லை" என்றேன்.
ம்ம்ம் சரி சரி ரொம்ப தான். எனக்கு சம்மதமே உங்களை கல்யானம் பண்ணிக்குறதில்.ஆனா கொஞ்ச நாள் போகட்டும் என்றாள்.
மனதுக்குள் குஷியோடு இனிமே அடிக்கடி வரவேண்டியிருக்கும் மெரினாவுக்கு என்றேன்..
"ம்ம்ம்ம்"
"..........." தாங்கமுடியா சந்தோசங்க எனக்குள்
" வானவில் வந்தா மழை வரும்னு சொல்லுவாங்களே,இப்ப மழை வருமோ" என்றாள்.
" ஆமாம் ப்ரியா..வானம் கூட இருட்டிட்டு வரூது"
"ஹை எனக்கு மழைன்னா ரொம்ப ப்ரியம்"
" நான் கூடத்தானே ப்ரியா"
பேசிட்டே இருக்கும் போது பட்டென முகத்தில் சிலதுளிகள் விழுந்தன.
மழை மழை வாங்க வாங்க என கூச்சல்கள் கேட்க
வேகமாய்.அடித்து பிடித்து எழுந்தேன் சிமெண்ட் பென்ச்ல இருந்து.இவ்ளோ நேரம் என் கூட பேசிட்டிருந்த என் பிரியாவை காணோம்..
அட கருமமே இதுவும் கனவா.ச்சே போங்க இவ்ளோ நேரம் நானும் நிஜமா நடந்துச்சுன்னு இல்ல நினைச்சேன்..என்னவோ போங்க நொந்துகிட்டே ஓடி போய் ஒரு மரத்தடியில் நின்னுட்டேன்..
நான் - மெரினா - அவள் -வானவில் - மழை - கனவு ..
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 9:42 AM 2 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
வகை சிறுகதை
Thursday, March 13, 2008
கனவே கலையாதே
" அம்மா நான் பள்ளிக்கு போறேன்" சிவா சொல்லிவிட்டு வேகவேகமாய் அவனுடைய பையை தூக்கி கொண்டு
தனக்காய் அம்மா செய்து வைத்த மதிய உணவோடு கிளம்பினான்.
இதோ அவனுக்கான ஒரு முன்னோட்டம்:
சிவா ஒரு திறமைசாலி.13 வயதிலே பெரிய ஞானிபோல பேசுவான்.எட்டாம் வகுப்பு படித்து கொண்டிருக்கும் அவன் கேக்கும் கேள்விகளுக்கு ஆசிரியர்களே மிரண்டு போய் நிற்பார்கள்.படிப்பில் படு சுட்டி..விளையாட்டிலும் அவன் தான் முதல்.
எப்போதும் அழகாய் தேய்த்த வெள்ளை சட்டை.அழகான முடிதிருத்தம் என அவன் முகமே அவனுடைய திறமையை வெளிச்சம் போட்டு காட்டும்.
காலையில் எழுந்து தன் அம்மா தரும் பாலை குடித்துவிட்டு சிறிது நேரம் படித்துவிட்டு அவனே எழுந்து கிளம்பி செல்வான் பள்ளிக்கு..பெற்றவர்களுக்கும் பெருமையாய் இருக்கும்.அதே போல் அவன் பள்ளியிலும் அவனை தெரியாத ஆசிரியர்களே கிடையாது எனலாம்..
இலக்கிய மன்ற போட்டிகளில் கூட அவனே முதல் பரிசை தட்டி செல்வான்.கடந்த வருடம் கூட நடந்த மாவட்ட அளவிலான கட்டுரை போட்டியில் முதல் பரிசை தட்டி சென்று பத்திரிக்கைகளில் அந்த மாவட்ட
செய்திகளில் ஜொலித்தான்..
இந்த வருடம் ஆண்டுவிழா விமரிசையாக கொண்டாட முடிவு செய்திருந்தார்கள். பள்ளியில்.
அது தான் இன்று சிவாவின் உற்சாகத்திற்கு காரணம்.ஆண்டுவிழாவை முன்னிட்டு நிறைய போட்டிகள்.பாட்டு,பேச்சு,கட்டுரை,விளையாட்டு போட்டிகள் என நிறைய ..சிவா எல்லாவற்றிற்கும் பேர் கொடுத்திருந்தான்..
பள்ளி சென்றவுடன் ஆசிரியர்கள் சிவாவை முதலில் அழைத்ததில் ஒன்றும் ஆச்சர்யமில்லை.சக மாணவர்கள் சிவாவை பார்த்து பொறாமை படத்தான் செய்திருந்தார்கள்..சிவா வே வழக்கம் போல
எல்லாவற்றிலும் முதலாவதாய் வந்தான்..
ஆசிரியர்கள் எல்லோரும் இது தான் முன்னமே தெரிந்த முடிவாயிற்றே.இரண்டாம் மூன்றாம் இடத்தை தான் நாம் தெரிவு செய்யவேண்டும்..என்று சொல்லி மகிழும் போது தன் தாய் தந்தையை மனதில் நினைத்து கர்வத்தோடு ஒரு துளி கண்ணீர் விட்டான்..
போட்டிகள் முடிவடைந்து ஆண்டுவிழா நாளும் நெருங்கியது. மாணவர்கள் அனைவரும் பெற்றோருடன்
வருமாறு அறிவுறுத்தபட்டிருந்தார்கள் முன்னமே..
இன்று சிவாவின் மனதில் ஏகத்துக்கும் மகிழ்ச்சி..காலையில் எழுந்து குளித்துமுடித்து அம்மாவையும் அப்பாவையும் அவசரபடுத்தி கொண்டிருந்தான்.
"சீக்கிரம் கிளம்புங்க,பாரு எல்லாரும் போறாங்க" என்று ரோட்டில் நடந்து போகும் சகமாணவர்களை காண்பித்தான்..
ஆண்டுவிழாவின் தொடக்கம் இனிதே..ஆரம்பமே சிவாவின் சங்கே முழங்கு நடனத்தோடு ஆரம்பித்தது.
அனைவரின் பாராட்டுக்களை பார்க்கும் போது அவனுடைய பெற்றோரின் கண்களில் இருந்து கட்டுபடுத்தாத
கண்ணீர் வள்ளுவனின் வாக்கை நிருபித்து கொண்டிருந்தது..வழக்கமான எல்லா நிகழ்ச்சிகளும் முடிவடைந்து
பரிசு தரும் நிகழ்ச்சி..ஆரம்பம்..
முதலில் இலக்கிய மன்ற போட்டிகளின் பரிசுகள் சிவா வே அழைக்கபட்டான்.சிவா தன்னுடைய பெற்றோரையும் அழைத்துகொண்டு மேடை அருகே சென்றது தான்..கை தட்டல்கள் விண்னை பிளந்து கொண்டிருக்க சிவாவும் அவன் பெற்றோரும் மேடையிலே இருக்குமாரு கேட்டுகொள்கிறேன்.சிவா வின் பரிசுகள் அத்தனை என்று கம்பீரமாய் தலைமை ஆசிரியரின் குரல் ஒலிக்க..இன்னுமே கைதட்டல் நிற்க வில்லை..
கடைசியாய் சிவா உயரம் தாண்டுதலுக்கான பரிசை வாங்க போகிறான்"
சிவா எந்திரிடா..நம்ம ராஜி அண்ணன் மெக்கானிக் கடையில் வேலைக்கு சொல்லியிருக்கேன்..போய்ட்டு
இந்த மருந்தை வாங்கிட்டு வாடா" என்று பேசமுடியாமல் மெல்லிய குரலில் ஒரு சீட்டை கையில் கொடுத்து விட்டு நகர்கிறாள்..
சிவாவுக்கு இப்போது தான் கண்டது கனவென புரிந்து நிலைக்குள் வருகிறான்.சின்ன வயதில் நன்றாக படித்தவன் போன வருடத்திலிருந்து அவன் அப்பாவின் திடீர் குடிப்பழக்கத்துக்கும் சபலத்திலும் சிக்கி
சின்னா பின்னமான நினைவுகளோடு கனவிலாவது என்னுடைய இந்த படிப்பு தொடரட்டும்..கனவே கலையாதே என்று வேண்டுகோள் விடுத்து அழுக்கு சட்டையை மாட்டிக்கொண்டு பயணமாகிறான்.
இது ஒரு கற்பனை கதை தான்.ஆனால் இது போல் எத்தனை பேர் திறமைகள் இருந்தும் தந்தையின்
தேவையற்ற சகவாசத்தால் சீரழிந்ததை பார்த்திருக்கிறேன்..ஆனால் என்ன என் வீட்டருகில் இருக்கும்
அந்த சிவா என்பவன் வேலைக்கு சென்று அப்பனை போலவே குடித்துவிட்டு வீடு வந்து விழுவான்..
என்னுடன் ஏழாம் வகுப்பு வரை நன்றாய் படித்தவன் தன் தந்தையின் பைத்தியக்காரதனத்தால் வேலைக்கு சென்று தீயவர்களின் சகவாசத்தால் அவனும் இப்படி ஆனதன் பாதிப்பு தான் இந்த கதை..
.
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 11:35 AM 2 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
வகை சிறுகதை