CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Wednesday, April 9, 2008

விதிவிலக்கா???

உலக காதலர்களின் மத்தியில்
விதிவிலக்காய் இருப்போமென
பேசிமுடித்தே ஆரம்பித்தோம்-நம்
இனிய காதல் பயணத்தை

தொலைபேசியின் தொடர்தலின்
தொட்டுபேசும் அளவுக்கு நெருக்கமானோம்
அடிக்கடி காத்திருக்கும் கடற்கரைசந்திப்புகள்
அமுதமென மாறும் ஐஸ்கிரீம் பகிர்தல்
அருவருப்பென சொல்லிய முத்தபறிமாறல்
அனைத்துமே அரங்கேறியது நமக்குள்ளும்

விதிவிலக்காய் ஆரம்பித்த நம் காதல்
விதியை விலக்கி தான் போனதின்று.
முத்தத்தின் வெம்மையில் தாளாமல்
முகம் நிமிர்கிறேன் நான்.

தலையிலடித்துகொண்டு தாண்டிசெல்லும்
நம் பெற்றோரின் வயதொத்த பெரியவரும்
நம் தங்கையின் வயதொத்த சிறுபெண்ணும்
உணர்த்தினார்கள் வரம்புமீறிய இழிசெயலை...

3 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..:

Unknown said...

அருமை தணிகை...
காதலினால் வெற்றியடைய
என்றென்றும்...

ச.பிரேம்குமார் said...

காதலின் பெயரில் களியாட்டம் போடும் மக்கள் எல்லாம் கட்டாயம் படிக்க வேண்டிய கவிதை

cheena (சீனா) said...

அன்பின் தணிகை

வரம்பு மீறுதல் காதலில் இயல்பு தான். ஆனால் பொது இடத்திலல்ல - கவலை வேண்டாம் - தவறில்லை