CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Saturday, April 26, 2008

கவிதை????

காதலிக்கான மிகைப்படுத்தப்பட்ட வர்ணனைகளில்
புதுக்கவிதை வேடமிட்டு சிலாக்கித்திருந்த
என்னெழுத்துக்களின் மீதெழுந்த விமர்சனங்களின்
அறிவுறுத்தலில் ஆரம்பித்த யோசனைகள்
கவிதையா??? கவிகொலையா ??? இதுவென

கருவறைக்காதலியென் அன்னையையும்
கார‌ண‌மின்றி நிக‌ழ்த்த‌ப்ப‌டும் துர்ம‌ர‌ண‌ங்க‌ளையும்
உள்ளடக்கிய‌ கவிதை வரிகள் முகத்திலுமிழ்ந்து
உணர்த்துக்கிறது கவிதை இதுவென..

விமர்சனங்களை தாண்டி எதிர்பார்ப்புகளோடு
எடுத்துரைக்கிற‌து ந‌ண்ப‌ரின் குரல்
என்கொலையின் தேவையற்ற அலம்பல்களையும்
சொல்லப்படாத நிதர்சனங்களையும்...

எண்ணக்கடலில் கவிதைமீன்க‌ளிருந்தும்
வெளிக்கொண‌ர‌ வார்த்தைவ‌லைக‌ளின்றி
தவித்தகணத்தில் வலைகளை கொடுத்து
காத்திருக்கும் தோழமை....

நானுமே வலைவீசி காத்திருக்கிறேன்
மீன்கள் வ‌லையேறுமென‌...

0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..: