CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Friday, May 2, 2008

தேடலில்....

தொடரும் தோல்விகளின் இறுக்கத்தில்
படும் அவஸ்தைகளில் நொறுங்கும்
மனத்தினூடே வெறுத்துப்போகும் வாழ்க்கை.

எதிர்பார்த்தவைகள் கிடைக்காத கோபத்தில்
தற்கொலையை நாடவிழையும் மனம்
தனிமையை தேடி அலையும் பொழுது

திரவத்தினை கயிறுதிரித்து வலைபின்னும்
சிலந்தியொன்று இடறலினால் கீழுக்கு
தொங்கிகொண்டிருத்தலை நோக்கிய சிந்தைக்கு

கஜினியின் வரலாறு பாடத்தை
நினைவிலிருத்தி போகிறது.
தொடர் சறுக்கலில் முயற்சியூடான
சிலந்தியின் வெற்றி....

4 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..:

தமிழ் said...

அருமையான வரிகள்

ரசிகன் said...

//திரவத்தினை கயிறுதிரித்து வலைபின்னும்
சிலந்தியொன்று இடறலினால் கீழுக்கு
தொங்கிகொண்டிருத்தலை நோக்கிய சிந்தைக்கு//

இந்த கவிதையில் வரிக்கு வரி தன்னம்பிக்கை மிளிர்கிறது.,வாழ்த்துக்கள்:)

ரசிகன் said...

//கஜினியின் வரலாறு பாடத்தை
நினைவிலிருத்தி போகிறது.
தொடர் சறுக்கலில் முயற்சியூடான
சிலந்தியின் வெற்றி....//

நல்லாயிருக்குங்க.. நிறைய எழுதுங்க:)

தணிகை said...

திகழ்மிளிர் said...
அருமையான வரிகள்//
நன்றி திகழ்மிளிர்