CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Thursday, May 29, 2008

எழுதப்படாமலே.....

தேர்விற்கு படிப்பதாய் சொல்லிவிட்டு
பக்கங்கள் புரள்கிறது நேற்றுவரை
புன்னைகையை மட்டுமே சிந்தியவள்
இன்று வார்த்தைகளை உதிர்த்த நினைவுகளோடு..

மௌனஓடையின் அலம்பலில் கண்ட
உதடு சுழித்தல்களை வர்ணிக்க
வார்த்தைகள் தேடும் என் எழுதுகோல்....

கற்பனையில் மிதந்து கவிதை
தேடும் என் சிந்தனை மேல்
எச்சத்தை உமிழ்ந்து போகிறது

எதிர்பார்ப்புகளோடு பால்கொடுக்க சொல்லும்
தந்தையின் வார்த்தைகளின் முடிவில்
பாலோடுநிற்கும் தாயின் அன்பு...

4 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..:

ரசிகன் said...

//எதிர்பார்ப்புகளோடு பால்கொடுக்க சொல்லும்
தந்தையின் வார்த்தைகளின் முடிவில்
பாலோடுநிற்கும் தாயின் அன்பு...//

அடடா.,. அருமையா இருக்குங்க:)

தணிகை said...

நன்றிங்க ரசிகன்

கோகுலன் said...

//மௌனஓடையின் அலம்பலில் கண்ட
உதடு சுழித்தல்களை வர்ணிக்க
வார்த்தைகள் தேடும் என் எழுதுகோல்....//

சூப்பர் தணிகை.. கலக்கல்..

கோகுலன் said...

//மௌனஓடையின் அலம்பலில் கண்ட
உதடு சுழித்தல்களை வர்ணிக்க
வார்த்தைகள் தேடும் என் எழுதுகோல்....//

சூப்பர் தணிகை.. கலக்கல்..