CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Thursday, May 29, 2008

வார்த்தைகள்....

துயிலுரித்த கணங்களிலிருந்து
துரத்தும் வார்த்தைகள் வணக்கங்களாகும்
விசாரிப்புகளாய் உருவெடுக்கும்
தருணங்களில் காரணமில்லாமல்
தேவையற்றதாய் போகும் சில..

உதட்டோடு நின்றுபோகும் புன்னகையை
பதிலுக்கு கக்கிவிட்டு இடம் பெயர்கையில்
கோபத்தொனியில் தொற்றிகொள்ளும்
வீம்புகளுக்கு முறைத்தலையும்
கோபத்தையும் கனையாக்கி திரும்புகையில்

எதிர்பார்ப்புகளினூடான விமர்சனங்கள்
விருவிருப்பாக்கும் பொழுதுகள்
நன்றிகளை நவின்று நகரும்..

அஸ்தமிக்கும் பொழுதோடு சேர்ந்து
முடியும் மீண்டும் வணக்கங்களாய்
இரவின் தனிமையின் வெறிக்கும்
பொழுதின் வார்த்தைகளானது
உதிரும் மயிர்களாகவும்
ஊன்றும் விதைகளாகவும்
கலந்தே விழுகிறது ....

இன்ப துன்பத்தை போல....

0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..: