CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Tuesday, July 1, 2008

நான் கடவுளாகி விட்டேன்..

திடீரென ஒரு மாற்றம்
என் தலையைசுற்றி
ஒளிவட்டம் சுற்றுகிறது..

எல்லா உணர்வுகளையும்
உள்ளடக்கி தேவையானதருணங்களில்
வெளிபடுத்த தயாராகிவிட்டேன்..

எதையும் மாற்றியமைக்க
முடிகிறது என்னால்- ஆம்
நான் இப்போது கடவுளாகிவிட்டேன்.

என் சக்தியை வெளிபடுத்த
தொடங்கிவிட்டேன் இப்போது..

இலேசான தென்றலாய் ஆரம்பிக்கிறது
எனது சக்தி..திடீரென மேலெழும்பி
குளிர்காற்றாய் மாறி தூரலில்
கீழறங்கும் போது அசுரமழையாய்
முடிகிறது..

யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை..
எல்லாரும் பரிசுத்தமாய் மாறினர்.
மனிதம் ஜனனமெடுக்கிறது..

ஆணும் பெண்ணும் சமத்துவமாய்
பேணுகிறார்கள் குடும்பத்தை..

கையேந்திய குழந்தைகளெல்லாம்
பூங்காவில் விளையாடிகொண்டிருக்க

அடுத்தவனின் மரணநாள் குறிப்பவன்
அவனுக்கு பிறந்தநாள் வாழ்த்தனுப்ப

அரசியலெங்கும் சந்தனம் வீசுகிறது
அவரவர் பணிமட்டுமே செய்கிறார்கள்

எங்கோ கால் இடறியவனை ஓடிப்போய்
எல்லாரும் தாங்கமுற்படுகிறார்கள்..

புற்றுநோயாய் புரையோடிய இலஞ்சம்
என்ற பேரையே மறந்துவிட்டிருக்கிறார்கள்..

போர்களோ பொருட்சேதமோ உயிர்சேதமோ
எதுவும் காணவில்லை பூமியில்..

தெரியாமல் இடித்துவிட்டால் கூட
பணிவோடே மன்னிப்புகள் கேட்பதும்

இதெற்கெல்லாமா என்று தட்டிகொடுத்து
சகஜமாய் மானுடர்கள் மகிழ்ச்சியாய்..

-ஆம்

மனிதம் தழைத்து விட்டது..
மனங்களில் மகிழ்ச்சி மட்டுமே..

கடவுளுக்கு நன்றி சொல்ல
கடமைபட்டுள்ளதாய் மக்கள்
குழுமிவிட்டார்கள்..

என்னை பூஜிப்பதாய் எனக்கு
படையல்கள் வந்த வண்ணம்..

யார் முதல் செய்வதென்று மீண்டும்
பிரிவினை வரவே என்னையும்
பிரிக்க வந்துவிட்டனர்..

ஐயகோ!!!
மீண்டும் ஏன் மானிடனே?
இதற்காகவா
நான் ஜனனமெடுத்தேன்?

கதறிகொண்டே ஓட
ஆரம்பிக்கிறேன்..

தரையில் விழுந்த என்னை
என்னவாயிற்று என அன்னை
தழுவுகிறாள்..

அப்பப்பா இதுவும்
கனவு தான்..

கனவில் கூட மனிதனின்
பிரிவினை முன்னிற்பதை
நொந்துகொண்டு

அலுவலகத்தில் மூழ்குகிறேன்..

தினசரியாய்
நடக்கும் நிகழ்வுகள்
நடந்துகொண்டே இருக்கின்றன!!

காற்றும் காலகாலமாய் வீசிகொண்டிருப்பதாய்.....

1 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..:

Anonymous said...

Such a nice blog. I hope you will create another post like this.