CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Wednesday, July 2, 2008

நான் நானாக இருந்ததே இல்லை..



சிலநேரம் அழுதிருப்பேன்
சிலநேரம் சிரித்திருப்பேன்
சிலநேரம் மௌனமாயிருந்திருப்பேன்
சிலநேரம் பேசிகொண்டேயிருந்திருப்பேன்
சிலநேரம் கோபங்களை கக்கியிருப்பேன்
சிலநேரம் வேசம் போட்டிருப்பேன்

தேவைக்கேற்றோ அல்லது
தேவைகளின்றியோ

எல்லா தருணங்களிலும்
எல்லா உணர்வுகளும் மாறி மாறி
என்னுள் பயணித்திருக்கும்.

நான்
நானாக இருந்ததே
இல்லை எப்போதுமே..

நான்
விரும்பியவைகள் நிலைக்காமலோ
விரும்பாதவைகள் நின்றுகொண்டோ
அடம்பிடித்துகொண்டிருக்கும்..

~ஆயினும்~

விருப்பங்களோ வெறுப்புகளோ
இல்லாமல் இருந்ததே இல்லை..

காற்றின் அசைவுக்கெல்லாம் இசையும் மரத்தினை போல....

0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..: