CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Friday, July 4, 2008

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் வாணி அக்கா...


எனக்கு இணைய குழுமத்தில் அறிமுகமாகி இதுவரை முகமறியாத என் அன்புக்குரிய அக்கா ..இவர் எனக்கு அதிகம் பரிச்சயமில்லையெனினும் அமெரிக்காவில் வாழ்ந்துவரும் இவர் இரண்டு மூன்றுமுறை அரட்டையில் பேசியிருக்கிறார்.
இவர் தற்போது இந்தியாவின் கோவை பகுதியில் இருக்கிறார் எனதெரிந்ததும் அவரிடம் அலைப்பேசி எண்ணை கேட்டு மடல் அனுப்பியிருந்தேன்..என்னிடம் பேசுவதற்கு இந்த அன்பு அக்கா பூஸ்ட் குடித்து எனர்ஜியோடு நாளை என் அழைப்புக்காக காத்திருப்பதாகவும் திரும்ப மடல் வந்திருந்தது...
வேலை நிமித்தமாய் என்னால் அழைக்க முடியாமல் போய் மாலை நேரத்தில் அழைப்பு விடுத்தேன்..என் அழைப்பை ஏற்று ஹேய் சொல்டா என எனை அன்போடு அரவனைத்த முதல் வார்த்தை..
தொடர்ந்து என்னை பற்றி விசாரிக்க தொடங்கியது முதல் இருவரும் எந்தவொரு புதியவர் என்ற தயக்கமுமில்லாமல் பேசினோம்..
அமெரிக்காவில் தமிழ் பள்ளியில் பகுதிநேர ஆசிரியையாக அ ஆ இ இந்த மூன்றெழுத்து மட்டுமே கற்று தரும் ஆசிரியையாய் இருந்தாலும் அமெரிக்காவில் சென்று தமிழ்பணி செய்வதில் இவர் மீது எனக்கு இன்னும் பற்று அதிகமானது..
இருபது நிமிடம் பேசியிருப்போம் நாங்கள்..தான் ஒரு குழுமசந்திப்புக்கு செல்வதாகவும் பின்னர் அழைத்து பேசுவதாகவும் பை சொல்லி கொண்டே பத்து நிமிடம் பேசிகொண்டிருந்தோம்..இருவருக்குமே அழைப்பை துண்டிக்க மனமில்லை..
என்னக்கா பை என்று நாம் பேசிகொண்டிருக்கிறோம் என்று சொன்ன கணம் எனக்கு இதுவரை நானாக அழைப்பை துண்டித்ததில்லை என என் பழக்கத்தையே சொல்லி என் தோழி கதீஜா பேகமை நினைவுக்கு கொண்டுவந்துவிட்டார்..
பின்னர் தான் தெரிந்தது..இன்று அவருக்கு பிறந்தநாள் என்று..நேற்றே அவரிடம் அரட்டை பகுதியில் வாழ்த்து சொல்லிவிட்டு ட்ரீட் கேட்ட போது நான் இங்கே இருக்கும் அனாதை இல்லத்தில் தான் என்னுடைய பிறந்தநாளை கழிக்க விரும்புகிறேன்..நீயும் வரியாடா என்று என்னையும் அழைத்ததொரு நல்லுள்ளம்...
இது போல் இன்னும் பல பிறந்தநாள்கள் உங்கள் வாழ்க்கையில் வரவேண்டும்..நீங்கள் இதே போல எந்நாளும் சந்தோசமாய் வாழ வேண்டும் என வாழ்த்துகிறேன்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
என் அன்பு அக்கா...

1 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..:

Natchatra said...

Hmmmm thaniks..vani akka pathi eluthinathu 100% correct..enakkum kooda avangala roumbaa pudichurku...naanum inaiku avangaluku call paninaen..thookathula irundhu elumbalama venamanu yosichukitu irukkum bodhu eluppi pesinaen....avanga pirantha nala atharavatror illathula celebrate pananumnu sonathu roumbaa impressive-a irundhudu...hats off to vani akka....once again happy birthday akka..wish you all the best......