CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Wednesday, July 23, 2008

தேவையற்ற வெள்ளாமை..

கோபத்தின் வெள்ளாமையில்
பகைமை விளைச்சலில்
தலை கவிழ்தலோ
தவறுகளின் ஆரம்பமோ தான்
முடிவாயிருக்கும்..

ஆசுவாசத்தின் கழிவிறக்கம்
அமைதியின் பலனை
நினைவிருத்தினாலும்
பருவங்களில் வெள்ளாமையெடுக்கும்
கோபம் தணிந்ததாகவே இல்லை..

தேவையற்ற வெள்ளத்தின்
சேதங்கள் மட்டும் அடிக்கடி
அரங்கேறிகொண்டு தானிருக்கும்..

கோபத்துக்கான காரணங்களை
அர்த்தமாக்க முற்பட்டுகொண்டே.......

1 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..:

Anonymous said...

அருமையாக உள்ளது .

நினா கண்ணன்