CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Thursday, July 24, 2008

பிரியாத நினைவுகள்...

நிஜங்கள் முடிவுக்கு
வரும்போதெல்லாம்
நினைவுகள் ஆரம்பமாகிவிடுகிறது.
சுகமாகவும் சோகமாகவுமே!
சுகத்தில் மூழ்க நினைத்தால்
சோகம் ஆட்கொண்டு அணைக்கும்.

தனிமையின் அசைபோடுதலில்
வருடும் தென்றலில் கொஞ்சம்
நனைக்கும் மழையில் கொஞ்சம்
வெளிவிடும் புகையில் கொஞ்சமென
நினைவுகள் உதிர்த்துபோகும்..

மறக்கபடகூடாதவைகள் விடுபட்டும்
மறக்கதுடிப்பவைகள் விடுபடாமலும்
நின்று அடம்பிடிக்கும்..

நானும் அடம்பிடித்துகொண்டிருப்பேன்
தேங்காயை உருட்டும் நாயினை போல....

0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..: