CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Friday, July 25, 2008

இது தாண்டா போலிஸ்..

கடமை
கண்ணியம்
கட்டுப்பாடு

கருப்பொருள் அறிந்தோ
அறியாமலோ உறுதிமொழி
எடுப்போம் நாங்கள்..

காந்தி ஜெயந்தியாகட்டும்
சுதந்திர தினமாகட்டும்
மது அருந்தலாம்.
கைக்காசு தீர்ந்தால்
கடமை எங்கள் கண்முன்
வந்து நிற்கும்..

லைசன்ஸ் இருந்தாலும் சரி
இல்லையென்றாலும் சரி
எங்களுக்கு கைக்காசு தீரும் போது
நீங்கள் தலைகவசம் அணியாவிட்டாலும்
கடமை கண்முன் நிற்கும்..

கொலைகள் நடக்கட்டும்
கொள்ளைகள் நடக்கட்டும்
கேள்விகள் கேட்கபட்டால் மட்டுமே
கட்டுப்பாடு எங்களுக்குள்
விட்டுகொடுக்காமல் வந்துவிடும்..

அப்பப்பா..எத்துணை
அருமையானது எங்கள்காவலின்
கண்ணியமான சேவை..

அரசியல்வாதி ஒருவனின்
வருகைக்காக காலையிலிருந்து
இரவு வரை வெயிலடித்தாலும்
மழைவந்தாலும் பொம்மை போல
நின்றிருப்பீர்கள்.

இந்த பிழைப்பு பிழைப்பதற்கு
எங்களோடு வரிசையில் நின்று
ரேஷனில் அரிசி வாங்கி
தின்று வாழலாம்....

0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..: