CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Friday, July 25, 2008

செல்லப்பாண்டி கவிதைகள்...

ஆனாலும் உன‌க்கு
கெட்ட‌ எண்ண‌ங்க‌ள்
இவ்வ‌ள‌வு கூடாது!
என் உற‌க்க‌த்தைகூட‌வா
க‌வர்ந்து கொள்ள‌ வேண்டும்?..

என்றெல்லாம் என் நாட்குறிப்பில்
சோக‌ம் இழையோடியுல்ல‌தோ
அன்றெல்லாம்என்னிட‌ம்
நீ முக‌ம‌ல‌ர்ந்திருக்க‌மாட்டாய்
என்று அர்த்த‌ம்!

உனைப் பார்க்க‌ முடிவ‌தென்ன‌வோ
ஒரு சில‌ நிமிட‌ங்கள்தான் என்றாலும்
அது போதும் என் மீத‌முள்ள‌
நேர‌ங்க‌ளையும் ஆக்கிர‌மிக்க!..

புன்முறுவ‌லோடு நீ பூக்கும்
சிறு புன்ன‌கைகூட‌
ஒருவ‌கை போதை‌தான்..
அதிலிருந்து மீண்டெழுவ‌த‌ற்கு
என‌க்கு ப‌ல‌ ம‌ணி நேர‌மாகிற‌து!

சிறு பொய் கூறினேன் என்ப‌த‌ற்காக‌
என்மீது கொப‌ம் கொள்ள‌தே!
இல்லாவிடில் உனை சமாதான‌ப்ப‌டுத்த‌
ஆயிர‌ம் பொய்க‌ளை கூறி விடுவேன்..

உன‌க்கெதிரான‌ என் தீர்மான‌ங்க‌ள்
அனைத்தும் ஒரே நொடியில்
உடைந்து போய்விடுகின்ற‌ன‌..
உன் இத‌ழ்க‌ள் என‌க்காக‌
ஒரு துளி புன்ன‌கையை
உதிர்த்து செல்லும் பொழுது!

உன்மீது கொண்டுள்ள‌ என் அன்பு
என்ன‌வ‌கை என்று தெரிவ‌த‌ற்குள்
அடுத்த‌ க‌ட்ட‌த்திற்கு தாவிவிடுகிற‌து
என் அசுர‌ ம‌ன‌து!

சாத்திய‌மில்லை என்று தெரிந்தாலும்
எல்லாவ‌ற்றையும் என‌க்கு
சாத‌கமாக‌வே எடுத்துகொள்கின்றேன்..
உன்னிட‌மிருந்து ம‌ட்டும்!

என‌க்கே புரிவ‌தில்லை?
எப்ப‌டித்தான் திரும்ப‌ திரும்ப‌
உன்னிட‌மே ஏமாறுகிறேன் என்று!

உன்னை த‌விர்க்க‌ நினைத்து
த‌விர்க்க‌ நினைத்துமுன்பைவிட‌
அதிக‌மாக‌வேநெருங்கி விடுகிறேன்!

என‌க்கு தெரிந்து
அன்பு செய்வ‌தைவெறுக்கும் ஜீவி
உல‌க‌த்தில் நீ ம‌ட்டும்தான்!

சொன்னால் ந‌ம்ப‌மாட்டாய்!
நான் கூறும் பொய்க‌ளைம‌ட்டுமே
நீ ர‌சிக்கின்றாய்!

உன்னிட‌ம் ம‌ட்டுமேபொய்க‌ளை
அதிக‌மாக‌ எடுத்துகொள்கின்றேன்!
என் பொய்க‌ள் ம‌ட்டுமேஉனை
அதிகமாக‌ க‌வ‌ர்கிற‌தென்ப‌தால்!

நீ என்மேல்
எப்போதும் காட்டும் வெறுப்பைவிட,
எப்போதாவ‌து காட்டும் அன்புதான்
என் ம‌ன‌தில்ஆழமாக‌ ப‌திந்து விடுகிற‌து!

உண்மையில் என‌க்கான
க‌விதை சுர‌ங்க‌ம் நீதான்!
வ‌டிவ‌மைக்கும் ப‌ணிம‌ட்டும்
தான் என்னுடைய‌து..

நீ என்மேல் பொழிவ‌து
விஷ அ(ன்)ம்புக‌ள் என்று
என‌க்கு தெரிய‌ப்போவ‌தில்லை..
நான் சாகும் வ‌ரையில்!

என் முன்னால் யாரிட‌மும்
அதிக‌மாக‌ அன்பு காட்டாதே!
இல்லாவிடில் அவ‌ர்க‌ள்
என்னால் ச‌பிக்க‌ப்ப‌டுவார்க‌ள்!

1 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..:

ரிதன்யா said...

நல்லாருக்கு தணிகை
உங்க எல்லா கவிதகளையும் இதில் போடலாமே.

பக்க வடிவமைப்பு அருமை