CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Friday, August 1, 2008

காதல்..



சூரியன் அஸ்தமிக்குமொரு பொழுதில்
இரு நிலவுகள் உதயமாகிறதென்னில்..

வானிலவின் தண்மையை மறைத்து
கொள்கிறது பூநிலவின் அழகு.

இந்நிலவை மட்டுமே வெறிக்கிறது
என் காத்திருத்தல் முழுமையும்.

எவ்வுளவு உதறியும் விழுந்துவிடாமல்
கூடவே பயணிக்கிறது நிலவின் நினைவுகள்.

இரவுகள் விழித்துகொண்டு நினைவுபேய்கள்
இங்குமங்குமாய் அலைந்துகொண்டிருக்க

இதயத்தில் ஒழுக ஆரம்பிக்கிறது
காதலின் வாசத்தோடான குருதி..

குருதியின் வாசத்தை நிலவில்
நுழைக்க திட்டம் தீட்டிகொண்டிருக்கிறோம்..

நானும் என் மனமும்...

1 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..:

cheena (சீனா) said...

ஆகா வந்திருச்சி .... காதல் வந்திருச்சி

வலைச்சரம் - தொடர்பு கொள்க -