CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Friday, August 29, 2008

வேண்டாமையும் வேண்டுதலும்...

நீ
என்னை பார்க்கிறாயா
என்பதெனக்கு தெரியவேண்டாம்!

நீ
என்னை நினைக்கிறாயா
என்பதெனக்கு தெரியவேண்டாம்!

நீ
என்னை ரசிக்கிறாயா
என்பதெனக்கு தெரியவேண்டாம்!

நீ
என்னை காதலிக்கிறாயா
என்பதெனக்கு தெரியவேண்டாம்!

நான்
உன்னை பார்ப்பதும்
உன்னை நினைப்பதும்
உன்னை ரசிப்பதும்
உன்னை காதலிப்பதும்

உனக்கு
தெரியும் தான்
என்பதெனக்கு தெரியவேண்டும்...

அதுமட்டும் தான்
எனக்கு தெரியவேண்டும்..

1 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..:

Divya said...

நல்லாயிருக்கு:-)