CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Saturday, August 23, 2008

மெய்யும் ...மெய்யான பொய்யும்...

எனக்கு என்ன தோன்றியதோ
அதை மட்டுமே உன்னிடம்
சொல்லியிருக்கிறேன்..
சொல்லிக்கொண்டுமிருக்கிறேன்...

உன்னை பற்றி வர்ணிக்கும்
தருணங்களில் புகழ்ச்சி
வேண்டாமென்பதாயும்
உண்மை உரைக்குமாறும்
கேட்டுகொண்டிருப்பாய்...

எனக்கு என்ன தோன்றியதோ
அதை மட்டுமே உன்னிடம்
சொல்லியிருக்கிறேன்..
சொல்லிகொண்டுமிருக்கிறேன்..

என்னைபற்றி சொல்லுவதெல்லாம்
உண்மையெனவும் உன் அழகை
பொய்யெனவும் பதிலுரைப்பாய்..

எனக்கு அதில் மட்டும் தான்
மிகுந்த ஆச்சர்யமே ..
ஒரு அழகிக்கே அழகை பற்றி
தெரியவில்லை என்..

உன்னை பற்றி நான்
சொன்னதெல்லாம் உண்மை..
நம்பிக்கையில்லையெனில்
என்னிடம் தான் கேட்க
வேண்டும் மீண்டும்..

எதற்கென்று யோசிக்காதே!
வேறெவரும் உண்மை சொல்லா
விட்டால் ...பொய்யாகி விடுமே...

எனக்கு என்ன தோன்றியதோ
அதை மட்டுமே உன்னிடம்
சொல்லியிருக்கிறேன்..
சொல்லிக்கொண்டுமிருக்கிறேன்...


மழை மண்ணோக்கியே தான் வரும்....

0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..: