CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Friday, August 29, 2008

தங்கைக்கோர் கவிதை...

எனக்கான தங்கையெனும்
உறவோடு தான் உள்நுழைந்தாய்!

சின்ன சின்னதாய் தான்
உனக்கும் எனக்கும் உரையாடல்கள்
நட்பை பெரியதாய் மாற்றியிருக்கும்!

ஆம். நீ தான் இப்போது
என்னுயிர் தோழியாய்
என்னுள்ளே எப்போதும்
இருக்கிறாய்!

தூரமாக நாமிருந்தாலும்
துளைத்து கொண்டிருக்கும்
உன் எஸ் எம் எஸ் இதயத்தை..

இப்போதெல்லாம் நீ
இதயத்தில் மட்டுமல்ல
இரத்தநாளங்களில் கலந்து
உயிர்முழுக்க புரையோடியிருக்கிறாய்..

எனக்கான உன் அறிவுறுத்தல்கள்
செல்ல கோபங்கள்
சின்னதான கெஞ்சல்கள்
எனக்கான குழந்தையாய்
உன்னை காட்டி நிற்கும்..

அதிகபட்ச மன அழுத்தங்களில்
மீள்வதற்காய் உன் குரலையே
நாடும் என் சிந்தையும் செல்போனும்..

ஒப்புக்கான உறவுகள் மத்தியில்
எனக்கான பிறப்பு நீ!

என்னுள்ளே என்னுள்ளே
ஆழ்ந்துகிடக்கும் உன் நினைவுகள்
எப்போதும் அழியபோவதில்லை..

உன்னை பற்றி சுருக்கமாய்
சொல்ல நினைக்கையில்
உயிரென்ற வார்த்தை தவிர
வேறொன்று நினைவிலில்லை..

ஆம்
என் உயிர் நீதானே!

1 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..:

Divya said...

ரொம்ப ரொம்ப ரசிச்சேன் இந்த கவிதையை.......சூப்பர்ப்:))