CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Wednesday, September 10, 2008

நான் மீண்டும் காதலிக்கிறேன்..

எனக்கு
எப்போதெல்லாம் தோன்றியிருக்கிறதோ
அப்போதெல்லாம் தோன்றியிருக்கிறேன்!
உனக்கு முன்பாக!!

உனக்கும்
அப்போதெல்லாம் என் நினைவுகள்
வந்து போவதாய் சொல்லிடுவாய்!

~ஆம்~
நாம் அப்போது காதலித்து
கொண்டிருந்தோமென
நினைக்கிறேன்.

வாடிய உன் தலைப்பூவோடு
என் காதலையும் ஒரு அந்தி
மாலையில் உன்னால் வீசியெறியப்பட்ட
போது தான் உணர்ந்தேன்!

ஒரு அர்த்தமற்ற கவிதையை
ஆறு வருடங்களாக எழுதி
கொண்டிருந்தமையை!

எனக்கும் அதில் வருத்தம் தான்!

எனினும்
மீண்டும் காதலிப்பது என
முடிவு செய்திருந்தேன் நான்!


ஆம்
இப்போது நான் மீண்டும்
காதலித்து கொண்டிருக்கிறேன்

வெற்றிலைகுடுவையின் டொக் டொக்
சத்தத்தில் வெறுத்தொதுக்கிய என்
இறந்து போன பாட்டியின் பாசத்தையும்

தலைவலிக்கான மருந்து மட்டுமல்லாமல்
அலைபோலடிக்கும் அன்னையின்
அன்னையின் அன்பினையும்

கால் இடறி கீழிருந்த தருணங்களில்
தோள்பிடித்து தூக்கி நிறுத்திய
தந்தையின் உன்னத உணர்வினையும்

நான் இப்போது
மீண்டும் காதலிக்க ஆரம்பித்துவிட்டேன்!

இப்போது என்பக்கங்கள்
அர்த்தமுள்ள கவிதையெழுதி
கொண்டிருக்கிறது!

இன்னொன்றும் சொல்லிகொள்வதில்
நான் பெருமைபடுகிறேன்!

நான் இப்போது
காதலிக்கபடுகிறேன்!

விதை முளைக்க ஆரம்பித்தாயிற்று!

0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..: