CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Thursday, September 11, 2008

அது வனாந்திரமாயிருக்கலாம்.....

அந்த இடம் இப்போது
வனாந்தரமாகியிருக்கிறது.
நான் வழக்கமாய் செல்லும்
இடம் தான் அது!

இருளில் மூழ்கிய ஓங்கி
உயர்ந்த மரங்கள் விசித்திரமாய்
காட்சியளிக்கின்றது!

பாதைகளில் உள்ள பள்ளங்களை
என்னால் அறியமுடியவில்லை
மனிதர்கள் அங்கிருப்பார்களா
என சந்தேகத்துடன் இன்னும்
உள் நுழைகிறேன்!

மின்மினி பூச்சிகளோடு
போட்டியிடமுடியாத வெளிச்சங்கள்
ஆங்காங்கே தெரியாமலில்லை

நம்பிக்கையோடு நகர்கிறேன்
மேல்சட்டை இல்லாத ஆண்கள்
காற்றுக்காய் வீதியில் வீரியமான
விவாதம் நிகழ்த்திகொண்டிருக்கிறார்கள்!

வரலாற்றில் படிப்பிக்கபட்ட
பழங்காலத்துக்குள் நுழைந்து
விட்டதான சந்தேகம் எனக்குள்!

நான் செல்லநினைத்த இடத்தை
இப்போதடைந்திருந்தேன்!
அது என் வீடுதான் என்பதில்
எனக்கு ஐயமில்லாமல் இல்லை!

அச்சச்சோ
தேவயாணி என்ன ஆனாளோ?
அம்மாவின் குரல் சொல்லிவிட்டது
எங்கள் வீடு தான் என!

தீடிரென வந்த வெளிச்சம்
என்னை இக்காலத்திற்கு
அழைத்து வந்திருந்தது..

வெளிச்சத்தையே இப்போது தான்
பார்ப்பது போல் குழந்தைகள்
கூச்சலிடுகின்றனர்

கோலங்களுக்காய் போடப்படும்
தொலைகாட்சி பெட்டியில்
அவசர செய்திகளாய்

"மின்வெட்டினால் தற்கொலை
செய்துகொள்ளும் நிலை-
புலம்பும் சிறுதொழிற்துறையினர்"

"மற்ற மாநிலங்களிலும்
இப்படி தான் - மத்திய
அமைச்சர் அறிவிப்பு"

அறிவியல் வளர்ந்தாலும்
அரசியலை மாற்றமுடியாது
அடிமனதில் ஓடிகொண்டிருக்கிறது!!

0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..: