CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Friday, September 12, 2008

அனுதாபமில்லாத மனிதன் நான்.....

என்னால்
இப்போது அனுதாபபடக்கூட
முடியவில்லை!

ஒரு சமூகமே
உரிமையிழந்ததல்லாமல் உயிரையும்
இழந்துகொண்டிருக்கிறார்கள்!

என்னால்
இப்போதும் அனுதாபபடக்கூட
முடியவில்லை!

சமூகத்துக்காய் போராடிய
போராளியொருவனின் படை
அரசியல் சித்துவிளையாட்டுகளில்
செத்துவிட்ட ஒருவருக்காய்
தடை செய்யப்படிருப்பதில் வருத்தமில்லை!

ஒரு சமூகமே
இன்றளவும் அழிந்து கொண்டிருக்கையில்
அனுதாப படக்கூட முடியவில்லை
என்பதில் எனக்கு வருத்தம் தான்!

எதிர்த்து பேசிவிட
துணிவில்லாமல் இல்லை
எதிர்த்து பேசிவிட
துணை தான் இல்லை..

சட்டம் திட்டம் போட்டு
எனை சிக்கலுக்குள் ஆழ்த்தலாம்
என அறிவுரைகள் வீழ்த்திவைக்கிறது!

அனுதாப பட்டால் கூட
சட்டசிக்கல் வந்து கொக்கரித்து
கூப்பாடு போடுமென்றால் எப்படி?

சாபம் பெற்ற சமூகம் அழிய
தூபம் போடுபவன் தலைவன்
கோபபடுபவன் தீவிரவாதி! -அனு
தாபப்படுபவன் ??????????

என்னால்
இப்போது அனுதாபபடக்கூட
முடியவில்லை!

சட்டத்தை திருத்த முயலவேண்டாம்!
சட்டத்தை திருப்ப முயலாமலிருங்கள் போதும்!

0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..: