CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Friday, September 26, 2008

முதல்மழை




குருவிகளும் காக்கைகளும் சப்தமிட்டு கொண்டிருந்தது.பொழுது விடிந்துவிட்டதாய் எழுந்து முகம் கழுவி தன்னுடைய அழுக்கு சட்டையும் கால்சட்டையும் எடுத்து மாட்டிகொண்டு மெக்கானிக் கடைக்கு புறப்பட்டான்.

சிவாவுக்கு வயது ஒன்பது.இரண்டாம் வகுப்பு படித்திருந்த சமயம் தினமும் அவன் அப்பா குடித்துவிட்டு வர ஆரம்பித்திருந்தார்.சிலநாட்களில் வீட்டில் தினமும் சண்டை,அழுகை என மாறிபோனது.

பட்டினி,உதை என்பதாய் இருந்த அவன் அம்மாவுக்கு உடல்நிலைசரியில்லாமல் போய் ரொம்பவே சிரமப்பட்டாள்.அப்பனின் இந்த போக்கை அவ்வளவாய் அறியாமல் போனாலும் அவன் அம்மாவின் அழுகையையும் சிரமத்தையும் பார்த்து அவனே வேலைக்கு போவதாய் முடிவெடுத்து பள்ளியை விட்டு நின்று மெக்கானிக் கடைக்கு வேலைக்கு போக ஆரம்பித்தான்..

இரண்டுவருடங்களாக இவனின் சம்பாத்யம் தான் அவன் அம்மாவின் மருந்துசெலவுக்கும் அரைவேளை கஞ்சிக்குமென இருந்தது.இதிலும் அவன் அப்பா காசை பிடுங்கி கொண்டால் அன்றைய இரவு பட்டினியாகவே முடியும்.

குடித்துவிட்டு வந்து அவர் செய்யும் அட்டகாசங்களை தடுக்கமுடியாதவனாய் அழுதுகொண்டே வேலைக்கு செல்வது இவன் அன்றாட வாழ்க்கையாகியிருந்தது.

நேற்று இரவும் இப்படிதான்..எழுந்து வழக்கம் போல வேலைக்கு சென்றுகொண்டிருந்தான்.சிவா வின் கடைக்கு அருகில் தான் பள்ளிகூடம்.
ஒன்பது மணியானால் ஒலிக்கும் இறைவாழ்த்தை கேட்கையில் சிவாவுக்கு கண்ணில் கண்ணீர் மளமளவென வந்துவிடும்..

இன்றும் அப்படி தான்.வேலைசெய்துகொண்டே இறைவாழ்த்தை முணுமுணுத்துகொண்டே இருந்தான்..
"பெரிய தொரை இவரு..பாட்டு பாடுறாரு" ன்னு கையிலிருக்கும் ஸ்பேனரில் முதுகிலே அடித்தான் அவனுடைய ஓனர்..

அழுதுகொண்டே தன் அப்பனை நொந்துகொண்டு வேலையைதொடர்ந்தான்.
சாயங்காலம் அம்மாவுக்கு மருந்து வாங்கணும் பணம்கொடுங்க என்று கேட்டு மருந்தை வாங்கிகொண்டு வீட்டுக்கு விரைந்தான்.அங்கு அவன் அப்பா கையை பிசைந்துகொண்டு உட்கார்ந்திருந்தார்.
இவன் சென்றதும் ஹேய் காசு இருக்கா,குடுடா எனகேட்டார்,
இல்லப்பா இருந்த காசுக்கு மருந்து வாங்கிட்டு வந்தேன்.சுத்தமா இல்லப்பா"ன்னு சொன்னான்.

என்னடா இப்ப மருந்து தான் முக்கியமோ அப்படீன்னுகையில் இருந்த மருந்தை பிடிங்கி கொண்டுபோய் மெடிக்கலில் கொடுத்து காசு வாங்கி குடித்துவிட்டு வந்து அவன் அம்மாவை அடித்து உதைக்க ஆரம்பித்தார்.ஏற்கனவே உடல்நிலைசரியில்லாத அவளோ உயிர்போகும் நிலையில் கிடந்தாள்.

"இன்னையோட நான் போயிடுவேண்டா.நீ இந்தாளை நம்பாத.உன்னைவித்து கூட குடிக்க தயங்கமாட்டான்.நீ எங்கயாச்சும் போய் பொழச்சுக்கோடா"ன்னு சொல்லும் போதே கண்கள் மூடிபோனது.
"சிவாவின் கதறலை கேட்ட அக்கம்பக்கத்தினர் வந்து அவன் அப்பனை திட்டிவிட்டு பொழுதுவிடிந்ததும் பிணத்தை எடுக்கமுடிவு செய்துவிட்டு பெண்கள் அழுதுகொண்டிருந்தனர்.
தலைமாட்டில் உக்கார்ந்த படியே அம்மாவினை வெறித்துகொண்டிருந்தான் சிவா.எல்லாம் முடிந்ததும் அழுதுகொண்டே படுத்துவிட்டான்.கடைசிவரை அவன் அப்பனை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை.மறுநாள் வழக்கம் போல வேலைக்கு கிளம்பி போகையில் வாசல்படியிலே உட்கார்ந்திருந்தார் அவன் அப்பா..
எதுவும் பேசாமல் போய் விட்டான்..இதுவே ஒரு வாரத்துக்கும் மேலாக தொடர்ந்தது.அவன் அப்பா குடிப்பதை விட்டிருந்தார்..காலையில் எங்கோ செல்வதும் மாலையில் வீடு வருவதுமாய் இருந்தார்.ஒரு வாரம் கடந்து வேலை முடித்துவீட்டுக்கு வரும் போது சிவாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

ஆம் அவன் அப்பாவின் கண்ணில் கண்ணீர் வந்திருந்தது..டேய் நான் பண்ணினது தப்பு தாண்டா,இனிமே இப்படி பண்ணமாட்டேண்டா,நீவேலைக்கு போகாதே.படிடான்னு "கட்டிபிடித்து அழுதுகொண்டே அவனுக்கான பள்ளி சீருடையை எடுத்து கையில் திணித்தார்..அவனுக்கு இன்ப அதிர்ச்சியாய் இருந்தது.
இவனும் தன்னுடைய தாயினை நினைத்து கண்ணீர் வடிக்க தொடங்கினான். நீ நல்லா படிக்கணும்டா ன்னு அவன் அப்பாவின் குரலில் அம்மா தெரிந்திருந்தாள். வெளியில் மழைவர தொடங்கியிருந்தது.
சிவா ஆனந்த கண்ணீரோடு மழையில் நனைய தொடங்கினான்.அவனுக்கு இது முதல்மழையாய் தெரிந்தது...

சிவாவின் அப்பா கையில் துண்டை வைத்துகொண்டிருந்தார் அவனின் தலைதுவட்ட........

2 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..:

MSK / Saravana said...

நல்லா இருக்கு சிறுகதை..
:)

Anonymous said...

///அழுக்கு சட்டையும் கால்சட்டையும் எடுத்து மாட்டிகொண்டு மெக்கானிக் கடைக்கு புறப்பட்டான்.
சிவாவுக்கு வயது ஒன்பது/// இவர்களும் நம்மோடு வாழ்கிறார்கள்....

நல்லது தொடர்ந்தெழுதுங்கள் நண்பரே