CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Monday, September 15, 2008

எரிந்துகொண்டிருக்கிறது ஒரு கவிதை

அந்த கவிதை
அவர்களால் தான்
படைக்கப்பட்டது

எனக்கு
பிடித்தமானதால்
அந்த கவிதை
என்னால் ரசிக்கபட்டது!

ரசித்தலின் ஆழத்தில்
அந்த கவிதை
என்னால் காதலிக்கப்பட்டது!

அந்த கவிதையும்
என்னை காதலித்திருந்தது!

படைத்தவர்களின்
வலியுறுத்தலோ வற்புறுத்தலோ
அந்த கவிதை
என்னிலிருந்து பிடிங்கபட்டது!

ஆம்
அந்த கவிதை
வேறொருவனுக்கு
கொடுக்க பட்டுவிட்டது!

அந்த கவிதை
அவனால் அனுபவிக்கபட்டது!

இல்லை இல்லை
அந்த கவிதை
அவனால் கசக்கபட்டிருந்தது!

அவனின்
ரசனையில்லாமையால்
அந்த கவிதை
எரிந்து கொண்டிருக்கிறது!

ஆம் எரிந்து
கொண்டிருக்கிறது
என் மனமும்! காதலும்!

0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..: