CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Sunday, May 17, 2009

அனுதினமும் அவளோடு -2

உன்
புன்னகை
பூக்களை சேர்த்தெடுத்து
மாலையாக்க நினைக்கிறேன்!

நீயோ
உதட்டை விட்டு
உதிர்ப்பதாய் இல்லை!

ஒரு
மழைவரா விடினும்
என்னால்
வானவில்லை பார்க்க
முடிகிறது!

தலை முதல்
கால் வரை வர்ணங்களை
வாரியிறைத்திருக்கிறான்
உனைபடைத்த
ஓவியன்!

அருவிகளின்
பிறப்பிடம் மலை!
என் கவிகளின்
பிறப்பிடம் பிரம்மனின் கலை!

~ஆம்~
உன்னிலிருந்தே
தொடங்குகிறது என்
எல்லா கவிதைகளும்!

என்
நெஞ்சத்தில்
காதல் நோயை
வளர்த்துவிட்டது

உன்
புன்னகை கிருமி!

அவைகளை
அழிக்க போவதில்லை!
இன்னும்
அதிகமாக்க நான்
என்ன செய்ய வேண்டும்!

என்
தமனி முதற்கொண்டு
சிரை வரை எல்லாமே
சுத்த இரத்தத்தையே
எடுத்து திரிகிறது!

உன்
நினைவுகள் என்
இரத்தம் முழுக்க
கலந்ததால் நான்
பரிசுத்தமாயிருக்கிறேன்!

உன்னால்
வீசியெறியப்பட்ட
பயணசீட்டும்
என்னால் பத்திரமாய்
பாதுகாக்க படுகிறது
என் சான்றிதழ்களை விட!

வேடந்தாங்கலில்
எல்லா குயில்களும்
கழுத்து வரை நீரில் நின்று
சாதகம் கற்றுகொள்கிறதாம்!

உன்
குரலை தோற்கடிக்க!

இப்போதெல்லாம்
நியூட்டனின் புவி ஈர்ப்புவிசை
வேலை செய்யவே இல்லை போல

நான் பறந்துகொண்டே
இருக்கிறேன் உன்
நினைவுகளில்!

0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..: