கட்டுப்பட்டவாறே விழிமூடுகிறேன்
இனியகனவு காண..
எந்தவித அபிமானமும்
இல்லாமல் மீண்டும் வனத்தினுள்
சென்று இரைதேட தொடங்கியது
என் கவிதை...
அதே
முகம் தெரியா
இறகுகளற்ற தேவதை உருவம்
வந்து செல்கையில்
அலைபேசி
சிணுங்குகிறது சிந்துபைரவி
ராகத்தோடு ..
"என்ன தேவதைகனவில் வந்தாளா"
என்ற கேள்வியுடன்
மீண்டும் உன் குறுந்தகவல்....