CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Sunday, July 19, 2009

நேசம் முறிந்த பகலுக்கான இரவொன்றில்...




எதிர்வீட்டுக்காரனின் வாயால்
உதைபட திராணியற்று பண்பலையின்
தொண்டையை அறுத்துவிட்டு
வறண்டுகிடக்கும் வெறும்குடலினை
மல்லாக்கவோ
குப்புறப்படுக்கவைத்தோ
ஒப்பாரி வைத்துச்சென்றது சிகரெட்...
இரைச்சல்களூடான யாருமற்ற
நிசப்தத்தில் நாளைக்கு போதையில்
ஆழ்த்திவிடுவதாய் ஆறுதல் சொல்லிவிட்டு
அறையின் மூலையில் கிடந்தது
கோபமாய் வீசியெறியப்பட்ட சட்டைப்பை...

நாளையோ அதற்கடுத்தநாளோ
ஏதாவதொரு கொலையை அல்லது
தற்கொலையை செய்துமுடிக்குமாறு
கட்டளையிட்டவாறு விசும்புகிறது மனது...
எந்தக்காரணங்களுமின்றி
எனை சல்லடையாக்கிய அவளின்
வார்த்தைகளின் தாக்கம் குறைவதாயில்லை


0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..: