CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Saturday, December 5, 2009




01.

நீ
எங்காவது
சந்தித்திருக்கலாம்
என்னைப்போல் ஒருவனை..

இப்போது
தான் பார்க்கிறேன்
உன்னைப்போல் உன்னை..

02.

ஒரு
மயிலிறகின் மென்மையைப்போல்
ஒரு
பூவின் வாசத்தைப்போல்
ஒரு
கனவு பலிப்பதைப்போல்
ஒரு
உயிர் ஜனனிப்பதைப்போல்

நீயும்
அதிசயமும்
அற்புதமும் நிறைந்தவளே!

03.

பாலைவனம்
ருசிக்கும்
மழையைப்போலவே
நீயும்
என்னுள் ஊறிப்போகிறாய்!

04.

குழந்தை
பாதங்களின் மென்மையை
உள்ளடக்கியே
உதைக்கிறது
உன் கோபங்கள்..
ரசிக்கத்தான் முடிகிறது;-)


05.

வலைவிரித்து
காத்திருக்கும் மீனவனாய்
உனக்கான சொற்களுக்காய்
காத்துக்கொண்டிருக்கிறேன்..

கிடைத்தால்
கண்டிப்பாய் என் காதல்
கவிதையாய்
வடிக்கப்படும்!

06.

நீ
எங்காவது
சந்தித்திருக்கலாம்
என்னைப்போல் ஒருவனை..

இப்போது
தான் பார்க்கிறேன்
உன்னைப்போல் உன்னை..

0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..: