CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Thursday, December 3, 2009

நான்கு கவிதைகள்

1.
தனிமை
இரவின் உறக்கமற்றப்பொழுதுகள்
மதுவோடு புழங்குதல்
புகையோடு கைக்கோர்த்திருத்தல்
வறட்டுபுன்னகை உதிர்க்கும்
உதடுகள்
எல்லாம் தொலைந்துபோயிருக்கிறது
இரண்டாமவள் உருக்குலைந்து
மூன்றாமவள் உருப்பெற்றிருப்பதால்...


2.

எப்போதாவது
எதிர்படும் பழைய நண்பர்கள்
பழைய நட்போடே
தேநீர் அருந்த கூப்பிடும்போது
பழையன
புதுப்பிக்கப்படுகிறது..

3.

மொத்தமாய்
நனைந்து போன உடை
ஒரு கையில் சிகரெட்
ஒருகையில் தேநீர்

மழை இனிக்கிறது...

4.

அதிவேக
பைக் டிரைவிங்
பிடித்தமான எனக்கு
எப்போதாவது லிப்ட் கேட்கும்
சிறார்களோடான
மிதவேகமும்
பிடித்தமாயிருக்கிறது..

0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..: