CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Tuesday, December 28, 2010

சுவாரஸ்யங்கள் நிறைந்த கொடுங்கனவொன்று.

1.
அந்த ரம்மியமான
காலைப்பொழுதில் அரவங்கள்
நிறைந்த தொட்டிலில் ஒரு
குழந்தை புன்னகைத்து கொண்டிருந்தது..
ஒரு
காக்கை பரிணாமம் பெற்றுக்கொண்டிருந்தது
மிகப்பெரிய தோகைகொண்ட மயிலாய்..
மஞ்சள் நிறப்பட்டாம்பூச்சிகள் பல
புற்றிலிருந்து புறப்படத்துவங்கின
கூட்டுப்புழுவெடித்து இலவம்பஞ்சு
பூமியெங்கும் பரவிக்கொண்டிருந்தன..
சுவாரஸ்யங்கள் நிறைந்த இந்நிகழ்வுகள்
நீ வந்தபின்பு தான் மாறியிருக்கும்
ஒரு கொடுங்கனவாய்....

2.
வலிகளுக்கு
அப்பால் பெற்றெடுத்த
குழந்தையை பசிக்காய்
புசிக்கும்
ஏதோ ஒரு மிருகம் நீ!

0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..: