CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Thursday, October 9, 2008

தீவிரவா(வ)தம்!!!!!!!!

ஒரு சமூக முன்னேற்றத்திற்காகவோ
ஒரு சமய பரப்புதலுக்காகவோ
ஒரு நம்பிக்கையை நிலைப்படுத்துவதாகவோ
ஒரு மெய்ப்பொருள் அறிவதாகவோ
ஒரு தனிமனிதனின் சுயநலத்திற்காகவோ

திரித்து சொல்லப்பட்டிருக்கலாம்
அன்றிலிருந்து இன்று வரை!

இன்னமும் மரபுகளாய்
இன்னமும் மெய்ப்பொருளாய்
இன்னமும் இறையாய்

உணர்த்தபட்டிருக்கிறது!
உணர்பவர்களும் மிகுதியாகலாம்!

சிறுபான்மையை காரணம் காட்டி
சிறுசிறு போராட்டங்கள் நடத்தபட்டிருக்கலாம்!
நடந்தவைகள் முடக்கப்பட்டிருக்கலாம்!

அடக்கபடும்போது திருப்பி
அடிக்கலாம் தான்!
மனித இயல்பில் ஆச்சர்யம் ஏதுமில்லை!

அழிக்கவே ஆரம்பித்தால்?

சத்தமின்றி தூங்கி கொண்டிருக்கிறது
பிணவறையில் உயிரை வெடிக்க செய்த
சில சதைதுண்டுகளும்
பல எதிர்பார்ப்புகளை தாங்கியதொரு
மனித குருதிசொட்டுகளும்!

சத்தமின்றி தூங்கி கொண்டிருக்கிறது
கருவறையில் உலகம் இன்னதென்று
அறியாத ஒரு கொடூரனின் சிசுவும்
மகிழ்ச்சியை எதிர்நோக்கி உயிர்நீத்தவனின்
குழந்தையும்!

சத்தமின்றி தூங்கி கொண்டிருக்கிறது
சட்டசபையில் மகிழுந்தில் பயணம்
செய்யும் அமைச்சர்களின் சேவையும்!

சத்தமின்றி விழித்துகொண்டிருக்கிறது
பாசறையில் அடுத்த கட்ட தாக்குதலுக்கான
அசத்தலான திட்டங்களும் அதனோடு
வெடித்து சிதறபோகும் கொடுரனும்!

0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..: