CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Tuesday, June 21, 2011

அவன் - இவன் - சில நிகழ்வுகள் ஒரு கட்டுடைத்தல்


இந்த மூன்று நாட்களாக படம் பார்த்தவர்கள் அல்லது பார்த்துவிட்டு வந்த நண்பர்களிடம் கதை கேட்டவர்கள்
எழுதிய விமர்சனங்களை படித்துவிட்டு படம் இப்படித்தான் இருக்குமென்கிற முன் முடிவுகளோடு நாம்
சென்றாலும் படம் தொடங்கிய வுடன் வரும் பிண்ணனி இசையிலாரம்பித்து தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கும்
வாழ்ந்துகெட்ட ஜமீனின் அலங்காரத்திலேயே நம்முடைய விமர்சன முன்முடிவுகளை கட்டுடைத்து நம்மை கட்டிப்போடுகிறார் இயக்குனர்.. அதிகபட்சம் நம்மை கட்டிப்போட்ட இருக்கையிலிருந்து எத்தனிக்க முயலுவோமானால் நம் பக்கத்து இருக்கை நண்பரோடு கை தட்டுவதற்காக இருக்கலாம். அல்லது சிரித்து சிரித்து சரிந்து விழலாம் ...........




வாழ்ந்துகெட்ட அல்லது கெட்டுவிட்ட வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கும் ஜமீனின் பிறந்தநாள் விழாவில்
ஆரம்பிக்கிறது படம் இல்லை இல்லை .. வாழ்க்கையின் அடுத்த அத்தியாயம் எனவும் சொல்லலாம்...இது பொம்பளைங்க இடம் ஆண்கள் வரக்கூடாது என்ற மகளிர் மசோதாவின் அறிக்கையில் பெண்ணாக களமிறங்குகிறார் விஷால்.. வனப்பு மிகுந்த உடல்.. மடிப்பு விழுந்த இடுப்பு.. குலுக்கி ஆடும் ஆட்டம்.... சில பெண்ணியவாதிகள் ஆணாதிக்கத்தின் உச்சகட்டத்தை பாலா தொட்டிருக்கிறார் எனவும் சொல்லலாம் என்றாலும்
எத்தனை ஆண்கள் இப்படியான பெண்களின் நேரடியான தாக்குதலை தாங்கிக்கொண்டு உம்மென்று அவர்கள் ஆடுவதை பார்த்து கைக்கொட்டி கரகோஷம் எழுப்பிவிட்டு போவார்கள்..( நான் மேல் சொன்னது வெறும் ஆட்டத்துக்கு மட்டுமான போட்டியல்ல. நாம் வாழ்ந்துக்கொண்டிருக்கும் வாழ்க்கையிலும் இப்படித்தான் வாழ்கிறோம் என்பதை நம்மால் உணரமுடியுமானால் இந்த காட்சியை எந்தவொரு வெறுப்புமில்லாமல் பார்க்கமுடியும் . அப்படி நாம் வெறுப்போமானால் நாம் தினமும் வாழும் இந்த வக்கிரவாழ்க்கையை வெறுக்கலாமென்று பாலா சொல்லியிருப்பதாக எனக்கு தோன்றுகிறது)


சரி அடுத்து ஒரு நீதிபதி தான் பதுக்கிய பத்திரங்களை & பணமடங்கிய லாக்கரின் சாவியை தொலைத்துவிட்டு
அதை உடைப்பதற்காக விஷாலை அள்ளிக்கொண்டுவருகிறார்கள் போலிஸார்கள்..இதை பற்றி சொல்வதற்கென்ன இருக்கிறது நம் நாட்டில் அல்லது நாம்(நாம் என்பது நம் போலிஸார், நம் நீதிபதி , நம் அரசியல்வாதி, நம் முதலாளி.. நான்கு நம் கள் நாம் என மறுவியிருக்கிறது ) வாழும் வாழ்க்கை தான் இதுவும். பூட்டை திறக்க விஷால் சாவி கேட்டவுடன் கையாலாகவதனென்று ஓரம் கட்டிவிட்டு அறிமுகப்படுத்தபடுகிறார் ஆர்யா... (கும்பிடுறேன் சாமியாக)


நாங்கமட்டும் எத்தனை காலத்துக்கு தான் கும்பிடுறேன் சாமின்னு சொல்லிட்டிருப்போம். நீங்களும் சொல்லி கூப்பிடுங்க எனும் இடத்தில் நையாண்டி மேலோங்கி தெரிந்தாலும் இன்னமும் இப்படியான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கும் அடித்தட்டு அல்லது நடுத்தட்டு மக்களை பற்றி அல்லது இப்படியான வாழ்க்கையை
வாழவைத்துக்கொண்டிருக்கும் மேல்தட்டு அல்லது முதலாளித்துவத்தினை பற்றி சில நொடிகளில் பதியவைக்கிறார்..

அடுத்து சக்களத்தி சண்டை. நம்ம தமிழ்நாட்டுல நடக்காததாய்யா இது ? கிரீன் வசனங்கள் பேசினாலும் சென்னையின் கடைசி மூலையில் இருக்கும் என் ஊரிலே இந்த கிரீன் வசனங்கள் ஒரு நல்லது கெட்டது அட எதுவுமே இல்லாட்டியும் கேட்டுக்கொண்டிருக்கும் போது திரையில் வரும் அந்த மாதிரியான ஒரு கிராமத்து மனுஷிகள் பேசிக்கொள்வது இயல்பு தானே.. மேக்கப் போட்டு கவுன் போட்டு பெண்கள் ஃபக் என்று சொன்னால் நம்மால் காதுகொடுத்து கேட்கமுடிகிறதென்பதை ஒத்துக்கொள்ளாவிட்டாலும் அது தான் உண்மை என்று சொல்லிக்கொண்டு வேறு வேறு ஊரில் இருவரை வைத்து நம்மவர் படும் பாட்டை நாம் நன்கே அறிவோம்.. ஒரே
வீட்டில் இரு அறைகளாக பிரித்துவைத்துக்கொண்டிருக்கும் சக்களத்தி வாழ்க்கை குறித்து தெரிந்துகொண்டு நாம் எதுவும் சாதிக்கப்போவதில்லையென்றாலும் இன்னும் நம்மிடம் இருக்கும் வாழ்க்கைப்பிரச்சினை குறித்ததாக இந்த காட்சியை குறிப்பெடுத்து வைத்துக்கொள்ளலாம்.. பின்னாளில் உதவலாம் யாருக்காவது...


காதல் காட்சிகள்.. வெட்டிப்பயல் திருடர்கள் உதவாக்கரைகள் இவர்களின் காதல் இப்படி விரசமாக இருப்பது அல்லது ஆணாதிக்க தொனியோடு இருப்பதென்பது இயல்பானதே..இவர்களால் அவ்வளவு தான் காதலிக்கமுடியும்.. இதுக்கு மேல யாருமே போகமுடியாத பாலைவனத்துக்கு நடுவுல ஒரு குடைப்போட்டு ரெண்டு சேர் போட்டு அதுலயும் உக்காராம கையில் ஒரு கிதார் வச்சிட்டு காதல் அணுக்கள்னு பாடினா அவ்ளோ நல்லாருக்காதில்லையா.. நாளைக்கு நாமே கதைக்கு ஒட்டாத காதல் என்று எங்காவது தட்டச்சிக்கொண்டிருக்கலாம் தானே... சரி இவர்கள் தான் இப்படி விரசமாக காதலை வெளிப்படுத்துகிறார்கள்
என்றால் இந்த பொண்ணுங்களுக்கு எப்படி காதல் வரும் நு கேள்வி எழலாம் ( எழுந்துடுச்சு).. எனக்கு தெரிஞ்ச நிறைய பொண்ணுங்களே செக்சுவலா பேசற பசங்களை தான் லவ் பண்றாங்க.. மானே தேனேன்னு சுத்தினவன்
இப்பவும் சுத்திட்டு தான் இருக்கான் கடை கடையா .(ஐ மீன் பச்சைபோர்டு கடை) ..இதுவும் நாம் (இங்கயும் சில நம்கள் தான் ) வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கையே...

ஒரு காதல் காட்சியில் காதலியோடு சேர்ந்து படிக்கும் ஆர்யா பரிட்சையில் ஒரு கேள்விக்கு உட் படுகிறார் . இரண்டாம் காந்தி என்று அழைக்கபடுபவர் யார்? நெல்சன் மண்டேலா அல்லது ராஜபக்சே என்ற ஆப்சனோடு..

இந்த காட்சியில் நான் உணர்ந்த இரண்டு .

ஒன்று .. நாம் நம் இந்திய இறையாண்மை அல்லது சமச்சீர் கல்வி இப்படியொரு கேள்வியையும் இதே பதிலையும் கொடுத்து ஆசிரியர்களுக்கான விடைத்தாளில் ராஜபக்சே என்ற விடைதான் சரியானதென்று பிரிண்டிங் செய்து கொடுக்கலாம்..

இரண்டு.. ஆர்யா ஒரு நாணயத்தை சுண்டிவிட்டு பதிலை எழுதுவார்.. இன்றைய நம் மாணவர்களுக்கான கற்பித்தல் முறை இப்படித்தான் இருக்கிறது.. புத்தகத்தை ஒரு மாணவனிடம் படிக்கசொல்லிவிட்டு புரிஞ்சதா என்று கேட்டுவிட்டு மணியடித்ததும் எழுந்து போகும் ஆசிரியர்கள் இருக்கும் வரை இப்படித்தான் பூவாதலையாவிலோ இல்லை கண்ணைமூடிக்கொண்டு இரண்டு விரல்களில் ஒன்றை தொட்டுப்பார்த்து பதிலெழுதி விட்டு செல்வார்கள் மாணவர்கள்..

எது எப்படியோ இதுவும் நம்கள் வாழும் வாழ்க்கை தான்...

ஒரு காட்சி ஆர்யா ஜமீனை திட்டிவிட்டு போக அவர் கண்ணாடி முன் நின்று காரிதுப்பி கண்ணாடியை உடைத்து தன்னையே திட்டிக்கொள்கிற காட்சி.. அதை கேமரா உடைந்துபோன கண்ணாடியில் குலைந்துபோன முகம் பேசுவதை போல காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர்...இந்த காட்சிக்காக அவருக்கு நான் சபாஷ் சொல்லுவேன்.. நீங்கள் உணர்ந்து பார்த்தால் அந்த காட்சிக்காக கைதட்டமுடியாவிட்டாலும் உறைந்து போய் உட்காரலாம்...

அதே காட்சியை ஜமீனைப்போல் விஷால் நடித்துக்காட்ட அனைவரும் சிரிக்க ஆர்யா மட்டும் அழுதுகொண்டிருப்பார்.. இப்படி இப்படி நாம் நம் வாழ்க்கையில் எத்தனை பேரை அழவைத்துவிட்டு சென்றிருப்போம்.. அதை உணர்ந்தழுதுவிட்டால் கூட கொஞ்சம் மனிதனாகலாம் தானே.. மனிதர்களுக்கு மனிதர்களாக மாற சின்ன சந்தர்ப்பங்கள் கிடைக்கதான் செய்கிறது சிலர் மாறுகிறார்கள் சிலர் மாறுவதே இல்லை. இந்த சின்ன நிகழ்வை வைத்தே கொடூர வில்லனை நாம் வித்தியாசப்படுத்திக்கொள்ளலாம்..( படம் பார்த்தால் புரியலாம்) மற்ற படி வில்லனடித்துக்கொள்ளும் நிர்வாணக்காட்சிகள் பற்றியோ வில்லன் பற்றியோ சொல்லவேண்டுமானால் இதுவும் சகமனிதர்களால் வாழப்படும் வாழ்க்கை தான்)


சூர்யா பற்றிச்சொல்லவேண்டுமானால் வலிய திணிக்கப்பட்ட காட்சியாக பலர் சொன்னாலும் சிலருடைய வலிகளை நம்மாலும் தணிக்கமுடியுமென்ற நம்பிக்கை துளிகளை நமக்கு நாம் பொழுதுப்போக்குகாக சென்ற இடத்தில் சிறிதாவது நமக்குள் திணித்துவிட முயற்சி செய்த இயக்குனரையும் \\ விஷாலில் நவரசத்தை காணும் போது நம்முகத்தில் ஏற்பட்ட அந்த உணர்வுகளின் வெளிப்பாடுகளை திரையில் சூர்யாவிடமும் பார்க்கமுடிந்தது..


* விஷால், ஜமீன், ஆர்யா, வில்லன், நடிப்பென்று சொல்லத்தோன்றவில்லை

* நாயகிகள், அம்பிகா , இன்னொரு அம்மா... அந்த ஒளிப்பதிவும் ஒலிப்பதிவும் குறைகளை தெரியப்படுத்தவில்லை..


* அவன் - இவன் **** நாம் நம்முடைய நம் களோடு வாழ்ந்துக்கொண்டிருக்கும் வாழ்க்கை


* கண்டிப்பா பாருங்க... நல்லா இருக்கு

Tuesday, December 28, 2010

இரவின் சாபம் பெற்ற தேவன்

1.
கடலுக்கு அடியிலிருந்து
பறந்துவந்தது
சில வெந்நிற புறாக்கள்.
அவைகளை
திடீரென தோளில் ஏந்தியவாறு
தோன்றின சில தேவதைகள்
உறக்கமற்ற அவனது
இரவை தாலாட்டுப்பாடி
தூங்கவைத்தது ஒரு அழகிய குரல்.
காதல் உள்ளிறங்கிய
அவன் கனவில் தேவனாக மாறிப்போயிருந்தான்..


2.
வெண்பனிப்புகை சூழ்ந்து ஈரம்
படர்ந்த விடியலில்
மஞ்சளும் சிவப்பும் கலந்த
பட்டாம்பூச்சி சிறகுகள் பல
அவன் காதல் மேல் பறக்கத்தொடங்கின..
மல்லிகைப்பூக்களின் வாசம்
முதல்முறையாய் அவன்
நுகர்வுக்குள் நுழைந்தது..
அவள் இவன் மார்பில் சாய்ந்து
காதலை ஊற்றிக்கொண்டிருந்தாள்..

3.
பின்னொரு இரவில்
அதே கடலுக்கடியிலிருந்து
பறந்துவந்தன கருநிற கழுகுகள்.
அவைகளை கடித்துகுதறியவாறு
தோன்றின சில இரத்தக்காட்டேரிகள்
வழிந்த குருதியில் அழிந்துபோன
அவன் உறக்கத்தினெதிரில்
இன்னொருவனோடு புணர்ந்துக்கொண்டிருக்கிறாள்
அவள்.
இந்த
இரவின் சாபம் பெற்ற
தேவன் இன்னமும்
தேவனாகவே இருக்கிறான்...

அவள்
இன்னதென்று சொல்லமுடியாததாய்
இருக்கிறாள்

கனவுகள் விளையாடும் தெருக்கள்

1.
இதழ்களில் நுழையும் ஒரு
மழையிலாடிக்கொண்டிருக்கிறாள்
சிறுமியொருத்தி.
யுவனொருவன் அவனுக்கான
யுவதியோடு கைக்கோர்த்து
நடந்துகொண்டிருந்தான்..
மழைத்துளிகள் தெறித்த
ரோஜா ஒன்றை வாங்கியவனொருவன்
கனவில் பறக்கத்தொடங்கினான்.
நீலநிறக்குடைக்குள்ளொருத்தி
கம்பியிலொழுகும் துளிகளோடு
விளையாடிக்கொண்டே போனாள்.
ஓடிக்கொண்டிருந்த
வெள்ளத்தில் கரைந்துபோன
கனவுகளை கண்டவாறு
உட்கார்ந்திருந்தன இரு கண்கள்....

2.
நீ
சொன்னவாறே
பிறந்துபார்க்கிறேன்
இன்னொருத்தியின் கணவனாக
நீ
பெற்றடுக்காத குழந்தையின் தகப்பனாக
நீ
இல்லாத ஓர் உலகிலும்......

எல்லாப்பிறப்பின்
தெருக்களிலும் விளையாடிக்கொண்டிருக்கின்றன
நீயும் நானும்
சேர்ந்துகண்ட கனவுகள்
வேறு பலர்களோடு..

நீயும் விளையாடலாம்
அதேகனவுகளோடும்
யாரோ ஒருவனோடும்........

சுவாரஸ்யங்கள் நிறைந்த கொடுங்கனவொன்று.

1.
அந்த ரம்மியமான
காலைப்பொழுதில் அரவங்கள்
நிறைந்த தொட்டிலில் ஒரு
குழந்தை புன்னகைத்து கொண்டிருந்தது..
ஒரு
காக்கை பரிணாமம் பெற்றுக்கொண்டிருந்தது
மிகப்பெரிய தோகைகொண்ட மயிலாய்..
மஞ்சள் நிறப்பட்டாம்பூச்சிகள் பல
புற்றிலிருந்து புறப்படத்துவங்கின
கூட்டுப்புழுவெடித்து இலவம்பஞ்சு
பூமியெங்கும் பரவிக்கொண்டிருந்தன..
சுவாரஸ்யங்கள் நிறைந்த இந்நிகழ்வுகள்
நீ வந்தபின்பு தான் மாறியிருக்கும்
ஒரு கொடுங்கனவாய்....

2.
வலிகளுக்கு
அப்பால் பெற்றெடுத்த
குழந்தையை பசிக்காய்
புசிக்கும்
ஏதோ ஒரு மிருகம் நீ!

சாத்தானுக்கு விற்கப்பட்ட தேவதையின் மொழி

துடுப்புகளில்லாது திசையறியாது சமுத்திரத்தை குடித்துக்கொண்டு திரிந்த படகினை போலிருந்த எனக்கு கலங்கரைவிளக்கத்தின் மீது நின்று கொண்டு எனக்கான என் வாழ்க்கைக்கான திசையிதுவென அழைத்தாய்.
வெண்ணிற சிறகுகளோடு பறந்து வந்த நீ பேசிய மொழிகள் தான் எத்தனை இன்பமானது.உனது ஆசைகள்
என்று நீ சொல்லிய ஒவ்வொன்றும் எத்தனை அற்புதமானது.ஒரு பின்னிரவின் தனிமையில் மெல்லிசைதரும்
மென்மையும் இன்பத்தையும் உனது மொழிகள் தந்ததே எனக்கு..

தேவதை பூமியிலும் வாழும்.அதைவிட என்னுடன் வாழ்கிறது வாழக்கற்றுத்தருகிறது என்று நினைத்துப்பூரித்துப்போயிருந்த தருணத்தில் இந்த இரவுக்குள்ளும் உனக்குள்ளும் இத்தனை கொடூர வன்மங்களை கட்டவிழ்த்துவிட்டது யார்?.தேவதை உனது மொழிகள் எதற்காக யாருக்காக சாத்தானுக்கு விற்கப்பட்டது அல்லது விற்றுவிட்டாய்..புன்னகையால் என்னை சாய்த்துப்போட்டவள் இப்போது அலறுகிறாய் கூரியப்பற்களோடு என் குரல்வளை குருதியின் வாசம் தேடி..

யாருமே வாழமுடியாத வாழ்க்கையை நாம் வாழவேண்டுமென்று நீ முன் சொன்னபோது உன் பார்வையிலிருந்த எதிர்ப்பார்ப்புகள் ஏக்கங்கள் எல்லாம் இப்போது துளிகூட இல்லாமல் போயிருக்கிறது.ஒரு கொடிய சர்ப்பத்தின் பார்வையிலிருக்கும் வன்மம் தலைதூக்கி இருக்கிறது. என் கண்ணீரையும் செந்நீரையும் ருசிக்கவேண்டி நீள்கிறது உனது நாக்கு. எனக்கான தேவதை சிறகுகள் தீப்பிடித்து எரிகிறது..இப்போதும் என்னை அணைத்துக்கொள்கிறாய். வாழவேண்டி அல்ல உன் வெப்பத்தில் என்னை சாம்பலாக்கவேண்டி..

எப்படி இத்தனை வன்மமும் குரூரமும் குருதியின் மீதான இச்சையும் கடைசியில் மரணமும் தருமளவுக்கு சாத்தானின் மொழியாய் மாறிப்போயிருக்குமென சிந்த்தித்துக்கொண்டிருக்கிறேன்

.என் இரவுகளின் தூக்கத்தையும்
தின்று தின்று சிரிக்கிறது உன் அலறல்கள்,

நெஞ்சணைத்து தாலாட்டிதூங்கவைப்பேன் என்று சொன்னவள் இன்று முட்கள் நிறைந்த ஒரு நெருப்புத்தொட்டிலில் போட்டு தாலாட்டுப்பாடுகிறேனென்று கத்துகிறாய்.நீ பாடுவது மரணத்திற்கு பின்னான ஒப்பாரி ராகமென்று கூட தெரியாத அளவுக்கு வன்மத்தில் ஊறித்திளைத்திருக்கிறாய். நீ ஆசையாய் பாடுகிறாய் இல்லை இல்லை மரணவெறிப்பிடித்து பாடுகிறாய்.. நான் மரணத்தை சம்பவிக்க தொடங்கிவிட்டேன்..
வெகுவிரைவில் நமக்குள் நடந்த சம்பவங்களை மரணத்திற்குள் ஆழ்த்திவிட்டு மீண்டும் நீ தேவதை ஒப்பனையோடு புன்னகைக்கலாம் பற்களில் ஒட்டியிருக்கும் குருதியை துடைத்துவிட்டு......

Friday, October 1, 2010

நிலவுகள் அழும் இரவுகள்





01.

முன்னொருஇரவில் பச்சைநிற ஒளிகொண்ட
விட்டில்பூச்சியாய் அறிமுகமானாய்

பின்னொரு இரவில்
என் கைகளுக்கடங்காமல் வளர்ந்து
வெண்ணிற சிறகுகொண்ட தேவதையாய் சிரித்து
வாழ்தல் குறித்தும்
அதன் அவசியம் குறித்தும்
பேசிக்கொண்டே என்னையும் உன்னோடு
பறக்கச்செய்திருந்தாய்

ஒருபனிமலையின் குளிர்தாங்கா இரவில்
உன் உள்ளங்கைகளுக்குள்ளடங்கி
கண்மூடிக்கிடக்கையில்
உன் நகங்கள் வளரத்தொடங்கி
கண்களில் சிவப்பின் வெறியேறி
வழிந்தவெப்பத்தில் கண் திறந்துப்பார்க்கையில்
நீ மாறியிருந்தாய்
நான் அறிந்திராத மிருகமொன்றினைப்போல...


02.
உன்னுடனான இரவுகளிலும்
நீயற்ற இந்த இரவுகளிலும்
இரவுகளைப்போல
நிலவுகளும் மாறிக்கொண்டிருந்தன.
வடிவத்திலும்
வெளிச்சத்திலும்....

03.

அன்று
சிரித்திருந்த நிலவு
அழுதுலர்ந்து
ஒரு புள்ளியுமில்லாமல் மறையும் போது
கூடவே
மறைந்துபோகலாம்
நானும் உன் நினைவுகளும்..

Saturday, April 10, 2010

சும்மா தான் ஒரு பதிவு......