CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Tuesday, December 28, 2010

இரவின் சாபம் பெற்ற தேவன்

1.
கடலுக்கு அடியிலிருந்து
பறந்துவந்தது
சில வெந்நிற புறாக்கள்.
அவைகளை
திடீரென தோளில் ஏந்தியவாறு
தோன்றின சில தேவதைகள்
உறக்கமற்ற அவனது
இரவை தாலாட்டுப்பாடி
தூங்கவைத்தது ஒரு அழகிய குரல்.
காதல் உள்ளிறங்கிய
அவன் கனவில் தேவனாக மாறிப்போயிருந்தான்..


2.
வெண்பனிப்புகை சூழ்ந்து ஈரம்
படர்ந்த விடியலில்
மஞ்சளும் சிவப்பும் கலந்த
பட்டாம்பூச்சி சிறகுகள் பல
அவன் காதல் மேல் பறக்கத்தொடங்கின..
மல்லிகைப்பூக்களின் வாசம்
முதல்முறையாய் அவன்
நுகர்வுக்குள் நுழைந்தது..
அவள் இவன் மார்பில் சாய்ந்து
காதலை ஊற்றிக்கொண்டிருந்தாள்..

3.
பின்னொரு இரவில்
அதே கடலுக்கடியிலிருந்து
பறந்துவந்தன கருநிற கழுகுகள்.
அவைகளை கடித்துகுதறியவாறு
தோன்றின சில இரத்தக்காட்டேரிகள்
வழிந்த குருதியில் அழிந்துபோன
அவன் உறக்கத்தினெதிரில்
இன்னொருவனோடு புணர்ந்துக்கொண்டிருக்கிறாள்
அவள்.
இந்த
இரவின் சாபம் பெற்ற
தேவன் இன்னமும்
தேவனாகவே இருக்கிறான்...

அவள்
இன்னதென்று சொல்லமுடியாததாய்
இருக்கிறாள்

கனவுகள் விளையாடும் தெருக்கள்

1.
இதழ்களில் நுழையும் ஒரு
மழையிலாடிக்கொண்டிருக்கிறாள்
சிறுமியொருத்தி.
யுவனொருவன் அவனுக்கான
யுவதியோடு கைக்கோர்த்து
நடந்துகொண்டிருந்தான்..
மழைத்துளிகள் தெறித்த
ரோஜா ஒன்றை வாங்கியவனொருவன்
கனவில் பறக்கத்தொடங்கினான்.
நீலநிறக்குடைக்குள்ளொருத்தி
கம்பியிலொழுகும் துளிகளோடு
விளையாடிக்கொண்டே போனாள்.
ஓடிக்கொண்டிருந்த
வெள்ளத்தில் கரைந்துபோன
கனவுகளை கண்டவாறு
உட்கார்ந்திருந்தன இரு கண்கள்....

2.
நீ
சொன்னவாறே
பிறந்துபார்க்கிறேன்
இன்னொருத்தியின் கணவனாக
நீ
பெற்றடுக்காத குழந்தையின் தகப்பனாக
நீ
இல்லாத ஓர் உலகிலும்......

எல்லாப்பிறப்பின்
தெருக்களிலும் விளையாடிக்கொண்டிருக்கின்றன
நீயும் நானும்
சேர்ந்துகண்ட கனவுகள்
வேறு பலர்களோடு..

நீயும் விளையாடலாம்
அதேகனவுகளோடும்
யாரோ ஒருவனோடும்........

சுவாரஸ்யங்கள் நிறைந்த கொடுங்கனவொன்று.

1.
அந்த ரம்மியமான
காலைப்பொழுதில் அரவங்கள்
நிறைந்த தொட்டிலில் ஒரு
குழந்தை புன்னகைத்து கொண்டிருந்தது..
ஒரு
காக்கை பரிணாமம் பெற்றுக்கொண்டிருந்தது
மிகப்பெரிய தோகைகொண்ட மயிலாய்..
மஞ்சள் நிறப்பட்டாம்பூச்சிகள் பல
புற்றிலிருந்து புறப்படத்துவங்கின
கூட்டுப்புழுவெடித்து இலவம்பஞ்சு
பூமியெங்கும் பரவிக்கொண்டிருந்தன..
சுவாரஸ்யங்கள் நிறைந்த இந்நிகழ்வுகள்
நீ வந்தபின்பு தான் மாறியிருக்கும்
ஒரு கொடுங்கனவாய்....

2.
வலிகளுக்கு
அப்பால் பெற்றெடுத்த
குழந்தையை பசிக்காய்
புசிக்கும்
ஏதோ ஒரு மிருகம் நீ!

சாத்தானுக்கு விற்கப்பட்ட தேவதையின் மொழி

துடுப்புகளில்லாது திசையறியாது சமுத்திரத்தை குடித்துக்கொண்டு திரிந்த படகினை போலிருந்த எனக்கு கலங்கரைவிளக்கத்தின் மீது நின்று கொண்டு எனக்கான என் வாழ்க்கைக்கான திசையிதுவென அழைத்தாய்.
வெண்ணிற சிறகுகளோடு பறந்து வந்த நீ பேசிய மொழிகள் தான் எத்தனை இன்பமானது.உனது ஆசைகள்
என்று நீ சொல்லிய ஒவ்வொன்றும் எத்தனை அற்புதமானது.ஒரு பின்னிரவின் தனிமையில் மெல்லிசைதரும்
மென்மையும் இன்பத்தையும் உனது மொழிகள் தந்ததே எனக்கு..

தேவதை பூமியிலும் வாழும்.அதைவிட என்னுடன் வாழ்கிறது வாழக்கற்றுத்தருகிறது என்று நினைத்துப்பூரித்துப்போயிருந்த தருணத்தில் இந்த இரவுக்குள்ளும் உனக்குள்ளும் இத்தனை கொடூர வன்மங்களை கட்டவிழ்த்துவிட்டது யார்?.தேவதை உனது மொழிகள் எதற்காக யாருக்காக சாத்தானுக்கு விற்கப்பட்டது அல்லது விற்றுவிட்டாய்..புன்னகையால் என்னை சாய்த்துப்போட்டவள் இப்போது அலறுகிறாய் கூரியப்பற்களோடு என் குரல்வளை குருதியின் வாசம் தேடி..

யாருமே வாழமுடியாத வாழ்க்கையை நாம் வாழவேண்டுமென்று நீ முன் சொன்னபோது உன் பார்வையிலிருந்த எதிர்ப்பார்ப்புகள் ஏக்கங்கள் எல்லாம் இப்போது துளிகூட இல்லாமல் போயிருக்கிறது.ஒரு கொடிய சர்ப்பத்தின் பார்வையிலிருக்கும் வன்மம் தலைதூக்கி இருக்கிறது. என் கண்ணீரையும் செந்நீரையும் ருசிக்கவேண்டி நீள்கிறது உனது நாக்கு. எனக்கான தேவதை சிறகுகள் தீப்பிடித்து எரிகிறது..இப்போதும் என்னை அணைத்துக்கொள்கிறாய். வாழவேண்டி அல்ல உன் வெப்பத்தில் என்னை சாம்பலாக்கவேண்டி..

எப்படி இத்தனை வன்மமும் குரூரமும் குருதியின் மீதான இச்சையும் கடைசியில் மரணமும் தருமளவுக்கு சாத்தானின் மொழியாய் மாறிப்போயிருக்குமென சிந்த்தித்துக்கொண்டிருக்கிறேன்

.என் இரவுகளின் தூக்கத்தையும்
தின்று தின்று சிரிக்கிறது உன் அலறல்கள்,

நெஞ்சணைத்து தாலாட்டிதூங்கவைப்பேன் என்று சொன்னவள் இன்று முட்கள் நிறைந்த ஒரு நெருப்புத்தொட்டிலில் போட்டு தாலாட்டுப்பாடுகிறேனென்று கத்துகிறாய்.நீ பாடுவது மரணத்திற்கு பின்னான ஒப்பாரி ராகமென்று கூட தெரியாத அளவுக்கு வன்மத்தில் ஊறித்திளைத்திருக்கிறாய். நீ ஆசையாய் பாடுகிறாய் இல்லை இல்லை மரணவெறிப்பிடித்து பாடுகிறாய்.. நான் மரணத்தை சம்பவிக்க தொடங்கிவிட்டேன்..
வெகுவிரைவில் நமக்குள் நடந்த சம்பவங்களை மரணத்திற்குள் ஆழ்த்திவிட்டு மீண்டும் நீ தேவதை ஒப்பனையோடு புன்னகைக்கலாம் பற்களில் ஒட்டியிருக்கும் குருதியை துடைத்துவிட்டு......

Friday, October 1, 2010

நிலவுகள் அழும் இரவுகள்





01.

முன்னொருஇரவில் பச்சைநிற ஒளிகொண்ட
விட்டில்பூச்சியாய் அறிமுகமானாய்

பின்னொரு இரவில்
என் கைகளுக்கடங்காமல் வளர்ந்து
வெண்ணிற சிறகுகொண்ட தேவதையாய் சிரித்து
வாழ்தல் குறித்தும்
அதன் அவசியம் குறித்தும்
பேசிக்கொண்டே என்னையும் உன்னோடு
பறக்கச்செய்திருந்தாய்

ஒருபனிமலையின் குளிர்தாங்கா இரவில்
உன் உள்ளங்கைகளுக்குள்ளடங்கி
கண்மூடிக்கிடக்கையில்
உன் நகங்கள் வளரத்தொடங்கி
கண்களில் சிவப்பின் வெறியேறி
வழிந்தவெப்பத்தில் கண் திறந்துப்பார்க்கையில்
நீ மாறியிருந்தாய்
நான் அறிந்திராத மிருகமொன்றினைப்போல...


02.
உன்னுடனான இரவுகளிலும்
நீயற்ற இந்த இரவுகளிலும்
இரவுகளைப்போல
நிலவுகளும் மாறிக்கொண்டிருந்தன.
வடிவத்திலும்
வெளிச்சத்திலும்....

03.

அன்று
சிரித்திருந்த நிலவு
அழுதுலர்ந்து
ஒரு புள்ளியுமில்லாமல் மறையும் போது
கூடவே
மறைந்துபோகலாம்
நானும் உன் நினைவுகளும்..

Saturday, April 10, 2010

சும்மா தான் ஒரு பதிவு......

Sunday, January 31, 2010

போதையும் போதை சார்ந்த இடமும்....




*
சில கோப்பைகள்
காலியாகி
சில கோப்பைகள்
நிறைந்து
சில கோப்பைகள்
வழிந்து
சில கோப்பைகள்
கவிழ்ந்து கிடக்கும்...

*
சில கோப்பைகள்
இரவல்
சில கோப்பைகள்
முதல்..

*

சில கோப்பைகள்
ரகசியங்கள் கக்கும்..
சில கோப்பைகள்
ரகசியங்கள் விழுங்கும்..

*
என்
வறண்ட கோப்பையில்
மது படும்போதெல்லாம்
விழியோரமும் துளிர்க்கிறது
ஈரம்...



*

Monday, January 11, 2010

கவுஜயும் காதலியும்????????????????? 2010

என்னான்னே தெரியலீங்க புது வருசம் பொறந்தாலும் பொறந்துச்சு..எப்பவுமே கவிதைன்னு எதாச்சும் எழுதிட்டு இருப்பேன்..அதுவும் வரமாட்டேங்குது..அடக்கருமமே இந்த ஓம் பயபுள்ள பசின்னு ஒரு ஆழமான சிறுகதை எழுதி கலங்கடிச்சுட்டான்..ஒருவேளை நாமெல்லாம் என்னடா எழுதறோமுனு வெக்கப்பட்டு மூளை சூம்பிப்போச்சா இல்லாங்கட்டி புதுசா வந்திருக்க சேட்டைக்காரன் மாடரேசன்லயே வைங்கோ ஏடாகூடமா எதாச்சும் போடுவேன்னு மனசை வருடற மாதிரியோ இல்லாங்கட்டி பிசையறமாதிரியோ (மாவில்லயா மனசு) இல்லாங்கட்டி அடப்பாவிங்களா இந்தமேட்டரை இப்படியும் சிந்திக்கலாமோன்னு நினைச்சிட்டிருக்க மாதிரி எதேதோ பதிவு போடுறான்...(ஊர் பேர் தெரியாதவனுக்கு ன் தான் நான் தர மரியாதையா இருக்கு)

இந்த ஹாஜா மாம்ஸ் கதை எழுதறேன்னு ஆரம்பிச்சு மனுசனை கதற கதற சிரிக்கவச்சு சிதறடிக்கிறாரு..இம்புட்டு நாளா நீங்கலாம் எங்கயா போயிருந்தீய ..முதல்ல இருந்தே இப்படிலாம் எழுதி இருந்தா நானும் கதை கவிதைன்னு எதையும் கிறுக்கியிருக்க மாட்டேன்ல..

என் மூளை ஏன் இப்படி சூம்பி போன கத்திரிக்காயாட்டும் ஆச்சுன்னும் தெரியல..எதாவது எழுதனும் யோசிச்சாலும் ஏன் அழுகி போன மாம்பழமாட்டும் குழையுதுன்னு தெரியல..

ஒன்னும் ஒன்னும் ஒன்னுக்கொன்னும் பிட்டிங்காவவே மாட்டேங்குதுய்யா... எதாவது கோர்த்தெழுதி மனசுல சலனத்தை ஏற்படுத்திட்டா தான் அந்த எழுத்தாளன் வெற்றியடையறான்...ஒன்னுமே இல்லாத மேட்டரைக்கூட ஏதோ ஒரு டிஸ்கின்னு கடைசி வரி வச்சு சூப்பராக்கி புடுறாய்ங்க...

எனக்கு மட்டும் ஏன் இப்படி சூம்பிப்போச்சு.. இம்புட்டு நீளமா நான் ஏதோ எழுதறக்கு காரணம் இருக்குன்னு நினைக்கறீங்களா..நீங்க நினைச்சா இருக்கு..இல்லாட்டி இல்லங்க.. ஆனா நானும் ஒரு காரணமா தான் எழுதறேன்.. என்னடா காரணம்னு கேட்டீங்கன்னா சத்தியமா எனக்கு சொல்லதெரியாது...

ஏன்னா காரணமே இல்லாம எதையாச்சும் புதுவருசத்துக்கு முதல் பதிவா போடணுமிங்கறது தான் என் காரணம்.. சரி இம்புட்டு நீளமா எழுதி அதுல ஒரு மேட்டராச்சும் உருப்படியா இருக்கணுமேன்னு தான்

இந்த வருசம் முதல் கவிதைங்கற பேர்ல ஒன்னு..


உங்கள்
இதயப்பெரிகார்டிய சுவர்களை
அதிர்வடைய செய்யும்
நிகழ்வுகளில் தான்
நான் பயணிக்கிறேன்..

கோர்க்கும்
திறமை இல்லையென்பதாலே
நான்
அதை
கவிதையென
எழுதவில்லை...


அப்பாடா எப்படி எப்படியோ யோசிச்சு வராத கவுஜ ..இந்த பதிவை எழுதிக்கிட்டே வரும் போது தானா வருதே ..அது எப்படி???...

முடியலை இல்ல..என்னாலயும் முடியல.. சும்மா ஒரு மேட்டர் எடுத்துக்கலாம்..( என்னடா அதான் ஏதோ எழுதி தொலைச்சுட்டியே இன்னும் எதுக்கு நீட்டுறன்னு கேக்கலாம்..)

வருசத்தோட முதல் பதிவு,.. கொஞ்சம் மசலாமிக்ஸ் பண்ணலாம்னு தான்...

அது ஏன்னே தெரியலீங்க..பொண்ணுங்க கிட்ட பேசினாளே ஒரு கில்பான்ஸ் மூடு வந்துடுது.. பொண்ணுங்க கிட்டமட்டும் தான் சலிக்காம பேசமுடியுது.. சாட் பண்ணி ஒரு ஐந்து நாளிக்கு பேசினப்புறம் அடுத்த பொண்ணான்ட அலைபாயுது...

எப்போதிலிருந்து நான் பொண்ணுங்களை சைட் அடிக்க ஆரம்பிச்சேன்னு யோசிச்சு பாத்திருக்கேன்..எப்பவும் தோணினதில்ல.. இன்னைக்கு கங்கண கிரகணம் தனுஷ்கோடியில் தான் நல்லா தெரியும்னு செய்தியில் படிச்சதும் தான் ஞாபகம் வந்துச்சு..

பள்ளிக்கொடத்துல ஒன்பதாவது படிக்கும் போது எட்டாவது படிச்ச தனுஷ்கோடி பாத்து சிரிப்பா.. அடிக்கடி சிரிப்பா.. நல்லா சிவப்பும் இல்லாம கருப்பும் இல்லாம கலந்தடிச்ச ஒரு நிறம்.. உதட்டுசாயம் எல்லாம் ஒரு ஒப்பனைப்பொருளே இல்லடான்னு சொல்லுற அளவுக்கு அவ உதடு நிறம்... ரெட்டைச்சடை போட்டுக்கிட்டு ஒரு நல்லா மலர்ந்த ரோஜாப்பூவை வலதுபக்கம் வச்சுக்கிட்டு நீலக்கலரு தாவணியில் அவ வர அழகே தனி தாங்க..

அதனால தான் என்னவோ தணிக்கு பிடிச்சிருக்குமோ..அந்த புள்ள அப்படி போவும் போதும் வரும் போதும் சிரிச்சுக்கும்.. நானும் சும்மா வானத்தில் பறக்கிற மாதிரி ஒரு பீலிங்கோட ஸ்டைலா ஒரு ரொமான்டிக் லுக் விட்டுட்டு போவேன்...

மத்தபடி பேசினதே இல்ல அவக்கிட்ட.. ஒரு நாள் வீட்டான்ட கூட படிக்கிற ரெண்டுபேரு அடிச்சுக்கிட்டானுவ,..என்னடான்

னு விசாரிச்சா தனுஷ்கோடிய ரென்டுபேரும் லவ் பண்ணானுவளாம்..அதுல வந்த சண்டையாமப்பா அது,...

அப்பால நான் என்ன பண்ண? அதுல ஒருத்தன் என் மாமா பையன் ..அவனுக்கு ஹெல்ப் பண்ணி அந்த பிகரை அந்த பையனோட கோர்த்து உட்டு நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துகள் பாடி முடிச்சு .....

படிப்பை முடிச்சு ரெண்டு வருசம் கழிச்சு பாத்தேன்... மொத்தம் ஐந்து வருசம் கழிச்சு அந்த பொன்ண பாக்கறேன்.. சும்மா சிலையாட்டம் இருந்தவ கலையிழந்து இடுப்புல ஒன்னு கையில ஒன்னு...

தலைவாராம சும்மா ஒரு கொண்டை போட்டுக்கிட்டு நடந்துபோனா ..அதிர்ச்சியில் உறைஞ்சுபோயிட்டேன்..


இப்ப என்னதாண்டா சொல்லவர நீயின்னு என்னை நாயை பாக்கறமாதிரி பாக்கலாம் நீங்க..

அதாங்க கடைசியே ஒரு தத்துவம்:

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது.....