CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Tuesday, October 21, 2008

இலக்கு


Thursday, October 9, 2008

தீவிரவா(வ)தம்!!!!!!!!

ஒரு சமூக முன்னேற்றத்திற்காகவோ
ஒரு சமய பரப்புதலுக்காகவோ
ஒரு நம்பிக்கையை நிலைப்படுத்துவதாகவோ
ஒரு மெய்ப்பொருள் அறிவதாகவோ
ஒரு தனிமனிதனின் சுயநலத்திற்காகவோ

திரித்து சொல்லப்பட்டிருக்கலாம்
அன்றிலிருந்து இன்று வரை!

இன்னமும் மரபுகளாய்
இன்னமும் மெய்ப்பொருளாய்
இன்னமும் இறையாய்

உணர்த்தபட்டிருக்கிறது!
உணர்பவர்களும் மிகுதியாகலாம்!

சிறுபான்மையை காரணம் காட்டி
சிறுசிறு போராட்டங்கள் நடத்தபட்டிருக்கலாம்!
நடந்தவைகள் முடக்கப்பட்டிருக்கலாம்!

அடக்கபடும்போது திருப்பி
அடிக்கலாம் தான்!
மனித இயல்பில் ஆச்சர்யம் ஏதுமில்லை!

அழிக்கவே ஆரம்பித்தால்?

சத்தமின்றி தூங்கி கொண்டிருக்கிறது
பிணவறையில் உயிரை வெடிக்க செய்த
சில சதைதுண்டுகளும்
பல எதிர்பார்ப்புகளை தாங்கியதொரு
மனித குருதிசொட்டுகளும்!

சத்தமின்றி தூங்கி கொண்டிருக்கிறது
கருவறையில் உலகம் இன்னதென்று
அறியாத ஒரு கொடூரனின் சிசுவும்
மகிழ்ச்சியை எதிர்நோக்கி உயிர்நீத்தவனின்
குழந்தையும்!

சத்தமின்றி தூங்கி கொண்டிருக்கிறது
சட்டசபையில் மகிழுந்தில் பயணம்
செய்யும் அமைச்சர்களின் சேவையும்!

சத்தமின்றி விழித்துகொண்டிருக்கிறது
பாசறையில் அடுத்த கட்ட தாக்குதலுக்கான
அசத்தலான திட்டங்களும் அதனோடு
வெடித்து சிதறபோகும் கொடுரனும்!

Friday, September 26, 2008

முதல்மழை




குருவிகளும் காக்கைகளும் சப்தமிட்டு கொண்டிருந்தது.பொழுது விடிந்துவிட்டதாய் எழுந்து முகம் கழுவி தன்னுடைய அழுக்கு சட்டையும் கால்சட்டையும் எடுத்து மாட்டிகொண்டு மெக்கானிக் கடைக்கு புறப்பட்டான்.

சிவாவுக்கு வயது ஒன்பது.இரண்டாம் வகுப்பு படித்திருந்த சமயம் தினமும் அவன் அப்பா குடித்துவிட்டு வர ஆரம்பித்திருந்தார்.சிலநாட்களில் வீட்டில் தினமும் சண்டை,அழுகை என மாறிபோனது.

பட்டினி,உதை என்பதாய் இருந்த அவன் அம்மாவுக்கு உடல்நிலைசரியில்லாமல் போய் ரொம்பவே சிரமப்பட்டாள்.அப்பனின் இந்த போக்கை அவ்வளவாய் அறியாமல் போனாலும் அவன் அம்மாவின் அழுகையையும் சிரமத்தையும் பார்த்து அவனே வேலைக்கு போவதாய் முடிவெடுத்து பள்ளியை விட்டு நின்று மெக்கானிக் கடைக்கு வேலைக்கு போக ஆரம்பித்தான்..

இரண்டுவருடங்களாக இவனின் சம்பாத்யம் தான் அவன் அம்மாவின் மருந்துசெலவுக்கும் அரைவேளை கஞ்சிக்குமென இருந்தது.இதிலும் அவன் அப்பா காசை பிடுங்கி கொண்டால் அன்றைய இரவு பட்டினியாகவே முடியும்.

குடித்துவிட்டு வந்து அவர் செய்யும் அட்டகாசங்களை தடுக்கமுடியாதவனாய் அழுதுகொண்டே வேலைக்கு செல்வது இவன் அன்றாட வாழ்க்கையாகியிருந்தது.

நேற்று இரவும் இப்படிதான்..எழுந்து வழக்கம் போல வேலைக்கு சென்றுகொண்டிருந்தான்.சிவா வின் கடைக்கு அருகில் தான் பள்ளிகூடம்.
ஒன்பது மணியானால் ஒலிக்கும் இறைவாழ்த்தை கேட்கையில் சிவாவுக்கு கண்ணில் கண்ணீர் மளமளவென வந்துவிடும்..

இன்றும் அப்படி தான்.வேலைசெய்துகொண்டே இறைவாழ்த்தை முணுமுணுத்துகொண்டே இருந்தான்..
"பெரிய தொரை இவரு..பாட்டு பாடுறாரு" ன்னு கையிலிருக்கும் ஸ்பேனரில் முதுகிலே அடித்தான் அவனுடைய ஓனர்..

அழுதுகொண்டே தன் அப்பனை நொந்துகொண்டு வேலையைதொடர்ந்தான்.
சாயங்காலம் அம்மாவுக்கு மருந்து வாங்கணும் பணம்கொடுங்க என்று கேட்டு மருந்தை வாங்கிகொண்டு வீட்டுக்கு விரைந்தான்.அங்கு அவன் அப்பா கையை பிசைந்துகொண்டு உட்கார்ந்திருந்தார்.
இவன் சென்றதும் ஹேய் காசு இருக்கா,குடுடா எனகேட்டார்,
இல்லப்பா இருந்த காசுக்கு மருந்து வாங்கிட்டு வந்தேன்.சுத்தமா இல்லப்பா"ன்னு சொன்னான்.

என்னடா இப்ப மருந்து தான் முக்கியமோ அப்படீன்னுகையில் இருந்த மருந்தை பிடிங்கி கொண்டுபோய் மெடிக்கலில் கொடுத்து காசு வாங்கி குடித்துவிட்டு வந்து அவன் அம்மாவை அடித்து உதைக்க ஆரம்பித்தார்.ஏற்கனவே உடல்நிலைசரியில்லாத அவளோ உயிர்போகும் நிலையில் கிடந்தாள்.

"இன்னையோட நான் போயிடுவேண்டா.நீ இந்தாளை நம்பாத.உன்னைவித்து கூட குடிக்க தயங்கமாட்டான்.நீ எங்கயாச்சும் போய் பொழச்சுக்கோடா"ன்னு சொல்லும் போதே கண்கள் மூடிபோனது.
"சிவாவின் கதறலை கேட்ட அக்கம்பக்கத்தினர் வந்து அவன் அப்பனை திட்டிவிட்டு பொழுதுவிடிந்ததும் பிணத்தை எடுக்கமுடிவு செய்துவிட்டு பெண்கள் அழுதுகொண்டிருந்தனர்.
தலைமாட்டில் உக்கார்ந்த படியே அம்மாவினை வெறித்துகொண்டிருந்தான் சிவா.எல்லாம் முடிந்ததும் அழுதுகொண்டே படுத்துவிட்டான்.கடைசிவரை அவன் அப்பனை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை.மறுநாள் வழக்கம் போல வேலைக்கு கிளம்பி போகையில் வாசல்படியிலே உட்கார்ந்திருந்தார் அவன் அப்பா..
எதுவும் பேசாமல் போய் விட்டான்..இதுவே ஒரு வாரத்துக்கும் மேலாக தொடர்ந்தது.அவன் அப்பா குடிப்பதை விட்டிருந்தார்..காலையில் எங்கோ செல்வதும் மாலையில் வீடு வருவதுமாய் இருந்தார்.ஒரு வாரம் கடந்து வேலை முடித்துவீட்டுக்கு வரும் போது சிவாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

ஆம் அவன் அப்பாவின் கண்ணில் கண்ணீர் வந்திருந்தது..டேய் நான் பண்ணினது தப்பு தாண்டா,இனிமே இப்படி பண்ணமாட்டேண்டா,நீவேலைக்கு போகாதே.படிடான்னு "கட்டிபிடித்து அழுதுகொண்டே அவனுக்கான பள்ளி சீருடையை எடுத்து கையில் திணித்தார்..அவனுக்கு இன்ப அதிர்ச்சியாய் இருந்தது.
இவனும் தன்னுடைய தாயினை நினைத்து கண்ணீர் வடிக்க தொடங்கினான். நீ நல்லா படிக்கணும்டா ன்னு அவன் அப்பாவின் குரலில் அம்மா தெரிந்திருந்தாள். வெளியில் மழைவர தொடங்கியிருந்தது.
சிவா ஆனந்த கண்ணீரோடு மழையில் நனைய தொடங்கினான்.அவனுக்கு இது முதல்மழையாய் தெரிந்தது...

சிவாவின் அப்பா கையில் துண்டை வைத்துகொண்டிருந்தார் அவனின் தலைதுவட்ட........

Thursday, September 25, 2008

ஒரு சிதைக்கப்பட்ட இதயத்தின் குறிப்புகள்:01



திரும்ப காதலைசொல்லும் தருணங்களை தேடிய என் இரவுகள் எல்லாம் தூக்கமின்றி தொலைந்து போயிருந்தது.நினைவுகள் உன்னை பற்றிய நினைவுகள் மட்டுமே எனக்கு தூக்கமாயிருந்தது.நான் தூக்கத்தை தேடவில்லை இரவுகளில்.என் துக்கத்தை மட்டுமே போக்குவதற்கு வழிதேடி கொண்டிருந்தேன்.ஆம் உன்னிடம் காதல் சொல்ல வழிதேடினேன்.


என் பாடபுத்தகங்களில்,கையில் கிடைக்கும் தாள்களிலெல்லாம் நான் மட்டுமல்ல.என் பேனாவும் பிதற்றிகொண்டிருந்தது உன் பெயரை மட்டுமே!உன்பெயர்மட்டுமே அலங்கரித்தது என் வாழ்க்கையை என்று நினைத்திருந்தேன் அப்போது.உனைகாணும் தருணங்களை தவிர புன்னகையை மறந்து போயிருந்தது என் உதடுகள்.வேறு யாரிடமும் என் புன்னகையை நான் காட்டவிரும்பவில்லை என்பதை விட வராமல் இருந்தது என்றே சொல்லலாம்!


உன்னிடம் புன்னகைக்கும் போது கூட இதயத்தில் வலி இருந்துகொண்டே இருக்கும்.நீ என்னை சற்றும் பாராததினால்!உன் பார்வை என் மேல் விழுவதற்காகவே காலையிலிருந்து மாலை வரை உன்னை சுற்றி வந்து கொண்டிருப்பேன்.வட்டத்துக்குள் வந்துவிட்ட என்னை பார்த்திருந்தும் பாராமுகம் காட்டியிருந்தாய்!


வலிதாள முடியாத இரவொன்றில் என் சிந்தையும் பேனாவும் உனக்காக ஒரு கவிதை எழுத துடித்தது.நள்ளிரவு ஒருமணியிருக்கும் என் முதல்கவிதை ஜனனிக்கும் போது!


என்னவளே!

உன் மௌனம் தூக்கத்தை

கலைத்து போனது.

-எதிர்பார்க்கிறேன்

உன் இதழ்களின் இயக்கம் துக்கத்தை

கலைக்குமென!!!!!


வலிகளுக்கு பின்னால் பிறந்த குழந்தையை காணும் ஒரு தாயின் மகிழ்ச்சியைகொண்டிருந்தேன் இந்த வலிகளை வரிகளாய் எழுதிவிட்டு!


அடுத்தநாள் காலையில் என்னுடைய காதலை உன்னிடம் சொல்லிவிட முயற்சித்ததில் வழக்கத்தை விட அதிகமாகவே தோற்றுபோயிருந்தேன்.இயலாமையின் உச்சக்கட்டத்தில் இருந்தேன் நான்!


உன்னுடன் படிக்கும் என் மாமன் மகளிடம் உன்மீதான காதலை சொல்லவே எனக்கு பலமணித்தியாலங்கள் பிடித்திருந்தது.வேறு வழியே இல்லை என இயலாமையின் காரணமாய் அவளையே தூதூவாய் அனுப்பியிருந்தேன்.

காதலுக்கு தூதென்பது அந்தகாலம் முதல் உள்ளது தானே!


ஒரு அரையாண்டு தேர்வை எழுதிவிட்டே அங்கலாய்த்துகொண்டிருந்தது என் மனது முடிவை எதிர்நோக்கி!உன்னை எதிர்பார்த்ததை விட என் மாமன் மகளை இன்று அதிகமாய் எதிர்பார்த்திருந்தேன்!மாலை பொழுது எனக்கு அதிக வேதனையும் எதிர்பார்ப்பை உடையதாயும் இருந்தது!


அவளின் பதிலில் குருதி லேசாகவழிந்தது என் கண்ணில்.ஆம் இதயவலியில் வெளிப்படும் கண்ணீர் குருதிகலந்ததாக இருந்தது.அது இன்னமும் என் வலியை அதிகபடுத்தியிருந்தது.


இப்போது காதலை பற்றிய யோசனைகள் இல்லையெனவும் படிப்பு முடிந்தவுடன் வீட்டில் திருமணம் என்றும் சொல்லி வைத்திருந்தாய்.வாழ்க்கை நழுவி விட்டதாய் நடக்க ஆரம்பித்தேன்!ஆனால் உன்னை பார்ப்பதை விடுவதாய் எண்ணம் இல்லை எனக்கு!


ஆறு மாதங்கள் கழித்து ஒரு கடைசி நாளின் தேர்வுக்காய் நீயும் நானும் எதிரெதிரே அமர்ந்து படித்துகொண்டிருக்கும் போது நல்லா இருக்கீங்களா என்ற உனது விசாரிப்பில் நான் கொண்ட மகிழ்ச்சி தான் மகிழ்ச்சிக்கே உச்சம் எனசொல்வேன்.


இதுதான் நீ என்னிடம் பேசிய முதல்வார்த்தை.திறக்கபடாத சிப்பியிலிருந்து திடிரென வெளிவரும் முத்துக்களை காண்கையில் எத்தனை மகிழ்ச்சி இருக்கும்.அது எனக்கு அப்போது இருந்தது.


அது தான் நான் உனை காணும் கடைசி நாளென்று அறியாமல் இருந்தேன்.மாலை பேருந்துக்காக நீ காத்திருக்கையில் கடைசியாய் நீ புன்னகையை எனக்கு தந்திருந்தது..அது எனக்கு இரண்டு மாதங்கள் கழித்து உனை மீண்டும் பார்ப்பேனா? மாட்டேனா ? என்ற கேள்வியையும் கேட்டுகொண்டிருந்தது!


உனை மீண்டும் சந்திப்பதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துகொண்டு...


தொடரும்......

Tuesday, September 23, 2008

சிதைக்கப்பட்ட இதயத்தின் குறிப்புகள்:00





என்னுடைய இதயம் சிதைக்கபடாமல் இருந்தது.முன்னொரு காலத்தில்.அது எனக்கு வசந்தகாலங்களாய் வாழ்வின் மகிழ்ச்சியான தருணங்கள் என்னை எதிர்நோக்கி கொண்டிருப்பதாய் இருந்தது,ஆம் அப்போதெல்லாம் உன்னுடன் நான் இருக்கும் ஒவ்வொரு நொடிகளையும் இதயத்தில் செதுக்கி வைத்துகொண்டிருந்தேன்.

முதல் முதலாய் நான் உனை பார்த்த அந்த கணம் எனக்கு அலாதியான மகிழ்ச்சியை தந்திருந்தது.அதுவே உன்னை மறுபடியும் பார்க்க தூண்டியிருந்தது,எனக்கானவளை நான் கண்டுவிட்டதாய் நினைத்திருந்தேன்.
அப்படி தான் நீயும் என்னில் நுழைய ஆரம்பித்திருந்தாய்.

மாலை பொழுதானால் வீடு தேடிவரும் பசுவை பார்த்ததும் ஓடிபோய் மடிமுட்டும் கன்றினை போல் காத்து கிடந்திருப்பேன்.அந்த காத்திருத்தல்கள் எல்லாம் சுகமாகவே இருக்கும் அப்போது.பிரசவத்தை எதிர்நோக்கியிருக்கும் ஒரு பெண்ணின் வலிகளையும் எண்ணங்களையும் எதிர்பார்ப்புகளையும் ஒத்ததாய் இருந்தது என் எண்ணங்கள் உன்னிடம் என் காதலை சொல்லும் வரை!

ஒரு கொடுரமான கொலைகாரனின் திட்டங்களை ஒத்திருந்தது என் பொழுதுகள்.சந்தர்ப்பம் தேடிகொண்டிருக்கும் நினைவுகள் எல்லாம் என் காதலை சொல்லிவிட.காதல் சுகமென்று படித்துவிட்டு அதில் இந்த மாதிரியான
சொல்லமுடியாத வலிகளை காணும்போதெல்லாம் காதல் என்ற வார்த்தையை கண்டுபிடித்தவனை திட்டி தீர்த்துகொண்டிருக்கும்.

ஆயினும் உன்னை கண்ட அடுத்த சிலநொடிகளில் காதல் என்ற வார்த்தையை கண்டுபிடித்தவனுக்கு கோவில் கட்டிவிட தோன்றும்..வார்த்தையை கண்டுபிடித்தவனுக்கே கோவில் என்றால் என் வாழ்க்கையில் நான் கண்டெடுத்தவள் நீ!

உன்னை நான் சொல்லமுடியாத ஒரு இடத்தில் வைத்திருந்தேன் என்பேன்.அதுவே காதலின் உச்சம் எனவும் சொல்ல நினைக்கிறேன். நான் உன்னை பார்க்கும் அந்த கணங்களை தான் காதலுக்கான உண்மையான அர்த்தங்கள் என சொல்வதிலும் பெருமைகொள்வேன்..

நெரிசல்களுக்கிடையில் சிக்கி திணறி எனக்காக என் தாய் தந்தை இறைவனை வேண்டியிருந்த திருவிழா கூட்டங்களில் முட்டி மோதி அருகில் வந்து உன் தாவணி முந்தானையில் விரல் தொட்டு சிலாகித்து கொண்டிருப்பேன்..

பந்தை எதிர்நோக்கிய ஒரு கிரிக்கெட் வீரனின் சரியான சமயத்தில் நோக்கும் திறனை நான் பெற்றிருக்காமல் இருந்தேன்.அருமையானதொரு சந்தர்ப்பத்தில் தனிமையில் உன்னை சந்தித்த போதும் ஒரு ஊமையை ஒத்திருந்தது என் கணங்கள்.

சூரியனை மிக அருகில் பார்க்கமுடியாத விண்வெளி வீரனை போலிருந்தது.உன் அருகில் நின்று என் காதலை பிரசவிக்க தவித்த நொடிகள்.என் கண்கள் உன் கண்களை நேரடியாய் பார்க்கமுடியாமல் தலை கவிழ்ந்து நான் நின்றது போருக்கு பாதி வரை சென்று புறமுதுகு காட்டி திரும்பி ஓடியவனை ஒத்திருந்தது என் அசைவுகள்..

திரும்பி நடந்துகொண்டிருந்தேன்.திரும்ப காதலை சொல்லும் தருணத்தை தேடி......................

தொடரும்......

Thursday, September 18, 2008

மழையும் பெண்ணின் முத்தமும்

திடீரென்று பெய்யும்
மழையில் ஒதுங்கி
நிற்கிறேன்!

திருக்கோயில் தேவதை
நீ நனையாத வரைக்கும்!
*******************************************
அந்த நனைதலின்
முடிவில் குளிரின்
தன்மை போக்குவதாய்
தரப்பட்ட முத்தத்தின்
வெம்மையில் மழையை
திரும்பவேண்டுகிறேன்!
***********************************************

பூங்காவில் அமர்ந்திருந்த
அந்த தருணத்தில் வந்துவிட்ட
மழையினை பொருட்படுத்தாமல்

மனம் விட்டு பேசியிருந்தோம்!
உதடுமட்டும் விட்டதாயில்லை!
**************************************************
மழையை நான் ரசிப்பதற்கு
காரணம் கேட்கிறாய் நீ!

நான் மழையை விட
அதில் நனையும் உன்னை
ரசிப்பதற்கு ஆயிரம் காரணங்கள்
சொல்லுவேன் என தெரிந்தே
****************************************************
ஜன்னலோர மழைதுளி
கொஞ்சல்களில் உன் முகபாவங்களை

ரசித்து கொண்டேயிருக்கலாம்.
இயற்கையின் விசித்திரபடைப்பை
**************************************************
பெரும்பாலான மழைநேரங்களில்
மழை வரும் போது ஆரம்பித்திருப்போம்
முத்தத்தை மழையாய் நாம்!

மழை விட்டிருந்தாலும்
விட்டிருக்காது முத்தமழை!
********************************************************

நிலாப்பெண்...

பெரும்பாலானோர்
நிலாச்சோறு தின்றிருக்கலாம்!

நான்
மட்டும் தான்
நிலவின் கையாலே
சோறு உண்கிறேன்!
************************************************
எல்லாருக்கும்
அமாவாசை வந்திருக்கும்!

எனக்கு மட்டும்
வருவதாகவே இல்லை
தினம் உன் தரிசனத்தால்!
*************************************************
கதிரவனையும்
நிலவையும் ஒருசேர

பார்க்கமுடிகிறது
நீ வரும் போது மட்டும்!
*************************************************
நிலவை முதலில்
தொட்டது வேண்டுமென்றால்
ஆம்ஸ்ட்ராங்காக இருக்கலாம்!

நிலவை
தொட்டுக்கொண்டே இருப்பது
நான் மட்டும் தானே!
***************************************************
எல்லாருக்கும்
சூர்யோதயமே விடியலாயிருக்கும்!

எனக்கு மட்டுமே
சந்திரோதயம் விடியலாய்
இருக்கும்!

எனதறையில் உன்புகைப்படம்!
*****************************************************
நிலாவில்
கால்பதிக்க எத்தனையோ
பேர் ஆசைபடலாம்!

நிலாவில்
உதடுபதிக்க மட்டும் தான்
எனக்கு ஆசை!
*****************************************************
சந்திரகிரகணத்தன்று
யாரும் நிலவை
பார்க்க கூடாதென
செய்தி படிக்கிறேன்!

நிலவை அருகில்
பார்த்து கொண்டு!
********************************************************
நிலவை பெண்ணாய்
உருவகித்து எத்தனையோ
கவிதைகள் வந்திருக்கும்!

நிலவே உருவமென்று
நான் எழுதிகொண்டிருக்கிறேன்
உன்னை பற்றி!
******************************************************

Monday, September 15, 2008

சிதைவுறும் மனவெளி..

என் மனவெளியானது
விரிந்தும் விசாலமானதாகவுமே
இருக்கிறது..

சந்தோசங்களையும்
துன்பங்களையும் தாங்ககூடியதாகவே
இருக்கிறது!

தாங்கி கொண்டும்
தான் இருக்கிறது!

அதிகபட்ச சந்தோசங்களை தாங்கிய
ஒரு காலையும்
அதிகபட்ச துன்பங்களை தந்துபோன
ஒரு மாலையும்

என் மனவெளிக்குள்
பயணம் செய்கையில்
கனம்தாங்க முடியாத மனவெளியானது
பின்னிரவில் வெடித்து சிதறி

ஒரு வட்டத்துக்குள்
விழுந்துவிடுகிறது!

சிதறிய நினைவுகளை கோர்த்து
வட்டத்துக்குள்ளாகவே பயணம்
செய்துகொண்டிருக்கும் மனவெளியின்

தொலைந்து போனதொரு
நினைவலையை தேடி
வட்டம் தாண்டி பயணிப்பதற்காய்

மீண்டும் வெடித்து வெளித்தள்ள
பட்டது இன்னொரு வட்டத்தில்!

வட்டங்களை உருவாக்கி கொண்டிருக்கிறது கல்!
குளம் தாங்கிய படியே இருக்கிறது!

எரிந்துகொண்டிருக்கிறது ஒரு கவிதை

அந்த கவிதை
அவர்களால் தான்
படைக்கப்பட்டது

எனக்கு
பிடித்தமானதால்
அந்த கவிதை
என்னால் ரசிக்கபட்டது!

ரசித்தலின் ஆழத்தில்
அந்த கவிதை
என்னால் காதலிக்கப்பட்டது!

அந்த கவிதையும்
என்னை காதலித்திருந்தது!

படைத்தவர்களின்
வலியுறுத்தலோ வற்புறுத்தலோ
அந்த கவிதை
என்னிலிருந்து பிடிங்கபட்டது!

ஆம்
அந்த கவிதை
வேறொருவனுக்கு
கொடுக்க பட்டுவிட்டது!

அந்த கவிதை
அவனால் அனுபவிக்கபட்டது!

இல்லை இல்லை
அந்த கவிதை
அவனால் கசக்கபட்டிருந்தது!

அவனின்
ரசனையில்லாமையால்
அந்த கவிதை
எரிந்து கொண்டிருக்கிறது!

ஆம் எரிந்து
கொண்டிருக்கிறது
என் மனமும்! காதலும்!

காதிலிக்க கற்றுக்கொள்!!

எல்லாம் இருந்தும்
தொலைந்து போயிருந்தது
இன்றைய நாளின் மகிழ்ச்சி

நீ வராததால்!
*****************************************
யாதுமற்ற ஒருபொழுது
எல்லாம் தந்து சென்றது..

நீ வந்து போனதால்
********************************************

காதலிக்க கற்றுகொள்வதாய்
ஆரம்பித்த என் தேடலில்
முதலில் கண்ணில் பட்டது

உன் கடைக்கண் பார்வை..
காதலிக்க கற்றுகொள்கிறேன்
இப்போது
********************************************
ஒரு வருடபிரிவின் முடிவில்
நீ தந்த முத்தத்தின் ஈரம்
ஒரு வருடத்தின் முன்
நீ தந்த முத்தத்தின் வறட்சியை

ஈரமாக்கி விட்டது..
இன்னும் நீ என் உதட்டை விடுவதாயில்லை
நானும் தான்!
**********************************************
உன் வருகையை
எதிர்பார்த்திருக்கும் என் பொழுதுகளுக்கு
பொழுதுபோக்கு நேற்றைய
உன் பார்வையும் கொஞ்சல்களும் தான்

காத்திருத்தலும்
அதிலுள்ள சுகங்களையும்
கற்றுகொண்டிருக்கிறேன்
************************************************
செய் !
எதாவது செய்!
பாடலை கேட்கும் [போதெல்லாம்
நேற்றைய அந்த
அழுத்தமான முத்தம் நினைவில்
வரமால் இல்லை
************************************************
காதலை முழுமையாய்
கற்றுகொள்ள ஆசை!

உன்னை உடனடியாய்
மணமுடித்து
கொள்ள சொல்கிறது காதல்!
***************************************************
காதல் சொன்னபடி
செய்து முடித்தாயிற்று

எனக்கே சொந்தமாகி
போயிருக்கிறது காதல்!
*
*
*
*
காதலிக்க கற்றுகொள்!
*******************************************************

Friday, September 12, 2008

அனுதாபமில்லாத மனிதன் நான்.....

என்னால்
இப்போது அனுதாபபடக்கூட
முடியவில்லை!

ஒரு சமூகமே
உரிமையிழந்ததல்லாமல் உயிரையும்
இழந்துகொண்டிருக்கிறார்கள்!

என்னால்
இப்போதும் அனுதாபபடக்கூட
முடியவில்லை!

சமூகத்துக்காய் போராடிய
போராளியொருவனின் படை
அரசியல் சித்துவிளையாட்டுகளில்
செத்துவிட்ட ஒருவருக்காய்
தடை செய்யப்படிருப்பதில் வருத்தமில்லை!

ஒரு சமூகமே
இன்றளவும் அழிந்து கொண்டிருக்கையில்
அனுதாப படக்கூட முடியவில்லை
என்பதில் எனக்கு வருத்தம் தான்!

எதிர்த்து பேசிவிட
துணிவில்லாமல் இல்லை
எதிர்த்து பேசிவிட
துணை தான் இல்லை..

சட்டம் திட்டம் போட்டு
எனை சிக்கலுக்குள் ஆழ்த்தலாம்
என அறிவுரைகள் வீழ்த்திவைக்கிறது!

அனுதாப பட்டால் கூட
சட்டசிக்கல் வந்து கொக்கரித்து
கூப்பாடு போடுமென்றால் எப்படி?

சாபம் பெற்ற சமூகம் அழிய
தூபம் போடுபவன் தலைவன்
கோபபடுபவன் தீவிரவாதி! -அனு
தாபப்படுபவன் ??????????

என்னால்
இப்போது அனுதாபபடக்கூட
முடியவில்லை!

சட்டத்தை திருத்த முயலவேண்டாம்!
சட்டத்தை திருப்ப முயலாமலிருங்கள் போதும்!

Thursday, September 11, 2008

அது வனாந்திரமாயிருக்கலாம்.....

அந்த இடம் இப்போது
வனாந்தரமாகியிருக்கிறது.
நான் வழக்கமாய் செல்லும்
இடம் தான் அது!

இருளில் மூழ்கிய ஓங்கி
உயர்ந்த மரங்கள் விசித்திரமாய்
காட்சியளிக்கின்றது!

பாதைகளில் உள்ள பள்ளங்களை
என்னால் அறியமுடியவில்லை
மனிதர்கள் அங்கிருப்பார்களா
என சந்தேகத்துடன் இன்னும்
உள் நுழைகிறேன்!

மின்மினி பூச்சிகளோடு
போட்டியிடமுடியாத வெளிச்சங்கள்
ஆங்காங்கே தெரியாமலில்லை

நம்பிக்கையோடு நகர்கிறேன்
மேல்சட்டை இல்லாத ஆண்கள்
காற்றுக்காய் வீதியில் வீரியமான
விவாதம் நிகழ்த்திகொண்டிருக்கிறார்கள்!

வரலாற்றில் படிப்பிக்கபட்ட
பழங்காலத்துக்குள் நுழைந்து
விட்டதான சந்தேகம் எனக்குள்!

நான் செல்லநினைத்த இடத்தை
இப்போதடைந்திருந்தேன்!
அது என் வீடுதான் என்பதில்
எனக்கு ஐயமில்லாமல் இல்லை!

அச்சச்சோ
தேவயாணி என்ன ஆனாளோ?
அம்மாவின் குரல் சொல்லிவிட்டது
எங்கள் வீடு தான் என!

தீடிரென வந்த வெளிச்சம்
என்னை இக்காலத்திற்கு
அழைத்து வந்திருந்தது..

வெளிச்சத்தையே இப்போது தான்
பார்ப்பது போல் குழந்தைகள்
கூச்சலிடுகின்றனர்

கோலங்களுக்காய் போடப்படும்
தொலைகாட்சி பெட்டியில்
அவசர செய்திகளாய்

"மின்வெட்டினால் தற்கொலை
செய்துகொள்ளும் நிலை-
புலம்பும் சிறுதொழிற்துறையினர்"

"மற்ற மாநிலங்களிலும்
இப்படி தான் - மத்திய
அமைச்சர் அறிவிப்பு"

அறிவியல் வளர்ந்தாலும்
அரசியலை மாற்றமுடியாது
அடிமனதில் ஓடிகொண்டிருக்கிறது!!

Wednesday, September 10, 2008

எழுதி ம(மு)டித்த கவிதை!!!!

நீ என்னிடம்
சொல்லிவிட்டு செய்திருக்கலாம்
நானும் உன்னுடனே
அதை செய்திருப்பேன்!

பார்
இப்போது நீ மட்டும்
தனியாக சென்றுவிட்டாய்
நான் தனிமரமாகவே
நின்றிருக்கிறேன்!

எதை செய்வதானாலும்
இதயமே செய்யவா என
கேட்டுகொண்டிருப்பாயே!

இதை மட்டும் ஏன்
நீ கேட்க மறந்தனையோ
இல்லை கேட்காமல்
மறைத்தனையோ!

தந்தையின் சாதீயத்தில்
தாயின் பணத்தாசையில்
போராடி வென்றுவிடுவதாய்
சொல்லியிருக்கிறாய்!

என்னிடம் சொல்லாமலே
இப்போது சென்றிருக்கிறாய்!
நானும் இப்போது உன்னிடமே
வந்து விடுவதாய் முடிவெடுத்துவிட்டேன்!

இந்த கவிதையை எழுதி
முடிக்கும் இந்த கணத்தில்
நானுண்ட நஞ்சும் உன்னிடம்
அனுப்பிகொண்டிருக்கிறது!

வருவேன்! கவிதையை
தொடர்ந்து காவியமொன்றினை
படைத்து விட!!!!!!!!

நோக்க நோக்க

பேருந்து பயணம்

நானும் நோக்கினேன்
அவளும் நோக்கினாள்
அவள் அன்னையும்
என்னையே நோக்கினாள்!!

நான் அடுத்த சீட்டிலுள்ள
பெண்ணை நோக்கினேன்!
அவளும் நோக்கினாள்
இவளும் நோக்கினாள்
அவளன்னையும் நோக்கினாள்!

நான் அந்தரத்து கூரையை
நோக்குகிறேன்
யாரும் என்மீது கை
நோக்காமலிருக்க!

நான் மீண்டும் காதலிக்கிறேன்..

எனக்கு
எப்போதெல்லாம் தோன்றியிருக்கிறதோ
அப்போதெல்லாம் தோன்றியிருக்கிறேன்!
உனக்கு முன்பாக!!

உனக்கும்
அப்போதெல்லாம் என் நினைவுகள்
வந்து போவதாய் சொல்லிடுவாய்!

~ஆம்~
நாம் அப்போது காதலித்து
கொண்டிருந்தோமென
நினைக்கிறேன்.

வாடிய உன் தலைப்பூவோடு
என் காதலையும் ஒரு அந்தி
மாலையில் உன்னால் வீசியெறியப்பட்ட
போது தான் உணர்ந்தேன்!

ஒரு அர்த்தமற்ற கவிதையை
ஆறு வருடங்களாக எழுதி
கொண்டிருந்தமையை!

எனக்கும் அதில் வருத்தம் தான்!

எனினும்
மீண்டும் காதலிப்பது என
முடிவு செய்திருந்தேன் நான்!


ஆம்
இப்போது நான் மீண்டும்
காதலித்து கொண்டிருக்கிறேன்

வெற்றிலைகுடுவையின் டொக் டொக்
சத்தத்தில் வெறுத்தொதுக்கிய என்
இறந்து போன பாட்டியின் பாசத்தையும்

தலைவலிக்கான மருந்து மட்டுமல்லாமல்
அலைபோலடிக்கும் அன்னையின்
அன்னையின் அன்பினையும்

கால் இடறி கீழிருந்த தருணங்களில்
தோள்பிடித்து தூக்கி நிறுத்திய
தந்தையின் உன்னத உணர்வினையும்

நான் இப்போது
மீண்டும் காதலிக்க ஆரம்பித்துவிட்டேன்!

இப்போது என்பக்கங்கள்
அர்த்தமுள்ள கவிதையெழுதி
கொண்டிருக்கிறது!

இன்னொன்றும் சொல்லிகொள்வதில்
நான் பெருமைபடுகிறேன்!

நான் இப்போது
காதலிக்கபடுகிறேன்!

விதை முளைக்க ஆரம்பித்தாயிற்று!

Tuesday, September 9, 2008

எனக்குள் ஒரு தாக்கம் தபூசங்கர்-3

முத்தம்

உன் எல்லாசெயல்களையும்
கண்கொட்டாமல் பார்க்கும் நான்
நீ முத்தமிடும் போது மட்டும்
பதில்கொடுக்க மறப்பதில்லை..
**************************************************
எத்தனை வேண்டுமானாலும்
தருகிறேன் என்கிறாய்!
எத்தனை வேண்டுமானாலும்
தந்துவிடு என்கிறேன் நான்!
உதட்டோடு உதடாய் இருந்தால்
*****************************************************
நீ கேட்கவே வேண்டாம்
நானே தருவேன் என்கிறேன்..
நீ கேட்க வாய்ப்பே இல்லையென
இதழ்கவ்விகொண்டிருக்கிறாய் நீ!
****************************************************
நீ ஒன்று
நான் ஒன்று
என மாறிமாறி கொடுக்கிறோம்
நாம் ஒன்று என்று மாறாமல்
இருக்கிறது முத்தமும் காதலும்
*****************************************************
இந்த முத்தம் மட்டும்
அதிக உஷ்ணமாயும்
அதிக காதலோடும் இருக்கிறது!
தாமதமாய் வந்ததற்கு
தண்டனையாய் அரைமணிநேரமுத்தமா!


இப்படியான முத்தம் தொடருமானால்
இப்படியாகவே தாமதமும் தொடரும்..
***************************************************
சத்தம் போடாமலிருந்தால்
முத்தம் கிடைக்குமென்கிறாய்
முத்தம் கொடுத்தாலே
சத்தம் வராதென்கிறேன் நான்!

உள்நாக்கில் உயிரை செருகும்
உச்சந்தலை மயிர்கூச்செறியும்
முத்தவித்தையை உன்னையன்றி
வேறெவரறிவார் சொல்லடி?
******************************************************

எனக்குள் ஒரு தாக்கம்-தபூசங்கர் -2

கன்னங்கள்..

அரைமணிநேரமாய்
பேசிகொண்டிருக்கிறாய்..
வாழ்நாள் விமோட்சனம்
அடைந்துவிட்டதாய் கூச்சலிடுகிறதுசெல்போன் பொத்தான்கள்..
*******************************************************
அழகான கன்னமென
சொல்லி கிள்ளுகிறாய்
பக்கத்துவீட்டு குழந்தையை!
தன்னுடையதை விட
உன்னுடையது அழகென
பொறாமையில் அழுகிறது குழந்தை
*********************************************************
நீ கொடுத்த
சாக்லெட்டுக்காக உன்
கன்னத்தில் முத்தமிடும்
உன் தம்பியின் உதடுகளாய்
பிறக்கவில்லையென
குறைப்பட்டுகொண்டிருக்கிறேன்..
**********************************************************
வெயிலின் தாக்கத்தை தணிப்பதற்காய்
நீ தடவும் அழகுசாதனங்கள்
உன் கன்ன அழகை ஒருபடி
குறைத்து விடுகிறது
தெரியுமா?
*******************************************************
கற்பனையில் வரையகூட
முடியாத உன் கன்னத்தை
கவித்துவமாய் செதுக்கிவிட்ட
பிரம்மன் மீதெனக்கு
சத்தியமாய் பொறாமை தான்!
**********************************************************
உன் கன்னம் கிள்ளிவிட்ட
எனக்கு தண்டனை தருவதற்காய்
என்னை அழைக்கிறாய்..
இன்னொருமுறை கிள்ளிவிட்டு
மரணமெய்த தயாராகிவிடுகிறது மனது
**********************************************************

Friday, September 5, 2008

நிர்ணயமில்லா முடிவுகள்-( 100 ஆவது பதிவு)

அந்த முடிவின் ஆரம்பத்தில்
அந்த முடிவை யூகித்திருக்கவில்லை.

இப்படிதான் எல்லாமுடிவின்
ஆரம்பமும் என்று கூட சொல்லலாம்..

ஆனால் எதாவதொருமுடிவினை
எதிர்பார்க்காமல் ஆரம்பித்ததில்லை.

சிலநேரங்களில் சிலகாரணங்களில்
முடிவை நிர்ணயித்துவிடமுடிகிறது..

வேறொரு முடிவையும் அதற்கான
பலகாரணங்களும் வந்துவிடுவதில்
பெரிதான ஆச்சர்யமொன்றுமில்லை தான்!

செயலுக்கான முடிவு நிர்ணயித்தலோ
நிர்ணயமில்லாத முடிவோடு செயலோ

நடக்காமல் இருந்ததே இல்லை...

கவிதை எழுதுதலும் அழித்தலும்
நடந்துகொண்டு தானிருக்கிறது....

Wednesday, September 3, 2008

நீ தராமலிருந்திருக்கலாம்....

நீ அந்த
முத்தத்தை தராமல்
இருந்திருக்கலாம்!

நான் அந்த
முத்தத்தை பெறாமல்
இருந்திருக்கலாம்!

காதலர்களின் அடையாளங்களை
தேடி சுற்றிய காலங்களில்
கடற்கரையில் முத்தமும்
அடையாளமென அதையும்


நீ தந்துவிட்டாய்!
நான் பெற்றுவிட்டேன்!

நீ இல்லாத
இல்லறத்தில் சுற்றிய
இடங்களிலெல்லாம் உன்
இடத்தினில் இல்லாளை
வலியநுழைக்க முடிகிறது!

நுழைத்து கொண்டு தானிருக்கிறேன்!

உன் இடத்தில் அவளை
நிறுத்திவிடுவதில் அவ்வளவு
சுலபமானதாய் இல்லை,

இருந்தும் முடிகிறது என்னால்!

எனக்கான என் மனைவியின்
முத்தத்தில் மட்டும் அவளை
பார்க்க முடிவதே இல்லை...

நீ
அந்த முத்தத்தை
தராமலிருந்திருக்கலாம்!

நானும்
அந்த முத்தத்தை
பெறாமலிருந்திருக்கலாம்!

நான்
அந்த முத்தத்தோடு
இறந்துமிருக்கலாம்!

Friday, August 29, 2008

வேண்டாமையும் வேண்டுதலும்...

நீ
என்னை பார்க்கிறாயா
என்பதெனக்கு தெரியவேண்டாம்!

நீ
என்னை நினைக்கிறாயா
என்பதெனக்கு தெரியவேண்டாம்!

நீ
என்னை ரசிக்கிறாயா
என்பதெனக்கு தெரியவேண்டாம்!

நீ
என்னை காதலிக்கிறாயா
என்பதெனக்கு தெரியவேண்டாம்!

நான்
உன்னை பார்ப்பதும்
உன்னை நினைப்பதும்
உன்னை ரசிப்பதும்
உன்னை காதலிப்பதும்

உனக்கு
தெரியும் தான்
என்பதெனக்கு தெரியவேண்டும்...

அதுமட்டும் தான்
எனக்கு தெரியவேண்டும்..

தங்கைக்கோர் கவிதை...

எனக்கான தங்கையெனும்
உறவோடு தான் உள்நுழைந்தாய்!

சின்ன சின்னதாய் தான்
உனக்கும் எனக்கும் உரையாடல்கள்
நட்பை பெரியதாய் மாற்றியிருக்கும்!

ஆம். நீ தான் இப்போது
என்னுயிர் தோழியாய்
என்னுள்ளே எப்போதும்
இருக்கிறாய்!

தூரமாக நாமிருந்தாலும்
துளைத்து கொண்டிருக்கும்
உன் எஸ் எம் எஸ் இதயத்தை..

இப்போதெல்லாம் நீ
இதயத்தில் மட்டுமல்ல
இரத்தநாளங்களில் கலந்து
உயிர்முழுக்க புரையோடியிருக்கிறாய்..

எனக்கான உன் அறிவுறுத்தல்கள்
செல்ல கோபங்கள்
சின்னதான கெஞ்சல்கள்
எனக்கான குழந்தையாய்
உன்னை காட்டி நிற்கும்..

அதிகபட்ச மன அழுத்தங்களில்
மீள்வதற்காய் உன் குரலையே
நாடும் என் சிந்தையும் செல்போனும்..

ஒப்புக்கான உறவுகள் மத்தியில்
எனக்கான பிறப்பு நீ!

என்னுள்ளே என்னுள்ளே
ஆழ்ந்துகிடக்கும் உன் நினைவுகள்
எப்போதும் அழியபோவதில்லை..

உன்னை பற்றி சுருக்கமாய்
சொல்ல நினைக்கையில்
உயிரென்ற வார்த்தை தவிர
வேறொன்று நினைவிலில்லை..

ஆம்
என் உயிர் நீதானே!

Saturday, August 23, 2008

மெய்யும் ...மெய்யான பொய்யும்...

எனக்கு என்ன தோன்றியதோ
அதை மட்டுமே உன்னிடம்
சொல்லியிருக்கிறேன்..
சொல்லிக்கொண்டுமிருக்கிறேன்...

உன்னை பற்றி வர்ணிக்கும்
தருணங்களில் புகழ்ச்சி
வேண்டாமென்பதாயும்
உண்மை உரைக்குமாறும்
கேட்டுகொண்டிருப்பாய்...

எனக்கு என்ன தோன்றியதோ
அதை மட்டுமே உன்னிடம்
சொல்லியிருக்கிறேன்..
சொல்லிகொண்டுமிருக்கிறேன்..

என்னைபற்றி சொல்லுவதெல்லாம்
உண்மையெனவும் உன் அழகை
பொய்யெனவும் பதிலுரைப்பாய்..

எனக்கு அதில் மட்டும் தான்
மிகுந்த ஆச்சர்யமே ..
ஒரு அழகிக்கே அழகை பற்றி
தெரியவில்லை என்..

உன்னை பற்றி நான்
சொன்னதெல்லாம் உண்மை..
நம்பிக்கையில்லையெனில்
என்னிடம் தான் கேட்க
வேண்டும் மீண்டும்..

எதற்கென்று யோசிக்காதே!
வேறெவரும் உண்மை சொல்லா
விட்டால் ...பொய்யாகி விடுமே...

எனக்கு என்ன தோன்றியதோ
அதை மட்டுமே உன்னிடம்
சொல்லியிருக்கிறேன்..
சொல்லிக்கொண்டுமிருக்கிறேன்...


மழை மண்ணோக்கியே தான் வரும்....

Friday, August 22, 2008

ஒரு படைப்பின் குறிப்புகள்...

மாபெரும் அண்டமானது
வெறிச்சோடி கிடக்க காண்பதென்னவோ
எனக்கு பொறுக்கவில்லை..

உணர்வுகளை பிரதிபலிப்பதாய்
உயிர்களை படைத்துவிட
முடிவு செய்து ஆயத்தங்கள்
செய்து விட்டேன்..

முதலில் சிறிது சிறிதான
என எண்ணற்ற உயிர்கள்
படைக்கபட்டது என்னால்..

நானும் உயிர்களை படைப்பதில்
தேர்ந்தவனாய் இல்லாமையின்
விளைவுகள் படைத்தல் தொடர்ந்தது
வகை வகையாய்..

ஒவ்வொன்றிலும் ஏதோ
ஒரு குறையிருப்பதாய்
உணர்ந்து கடைசியாய்

மனிதனை படைக்கும்
யோசனையில் பலன்
நான் எதிர்பார்த்த வாறே தான்..

உணர்வுகளை வெளிபடுத்தி
ஆக்கங்களை மட்டுமே
தருவதற்காயும் என்வேலையை
இலகுவாக்கவுமே படைத்தேன்,..

ஆரம்பமென்னவோ
நன்றாக தான் இருந்தது..
ஆக்கங்களில் ஈடுபட்டவன்
அழிவு வேலையை செய்ய

ஆரம்பித்ததில் எனக்கும்
வருத்தம் தான்..

இனியாவது
செய்வன திருந்த செய்ய
வேண்டுமென்று உறுதியாக
இருக்கிறேன்..

மனிதா!
உன்னை விட உன்னதமாய்
உயிரொன்று மிகவிரைவில்....

எதிர்பார்த்ததும் பாராததும்

நான் உன்னை
எதிர்பார்த்திருந்தேன்..

உன்னை மட்டுமே
எதிர்பார்த்திருந்தேன்..

ஆம் இப்போதெல்லாம்
உன்னை தான் அதிகமாக
எதிர்பார்த்திருக்கிறேன்..

உன்னை-
இதில் என்னவெல்லாம்
எதிர்பார்த்திருக்கிறேன்
என்று தெரியுமா உனக்கு!

விழிகள் வெளிசிந்தும்
விசேஷ பார்வைகள்
உதடுகள் உச்சரிக்கும்
உன்னத புன்னகை

கொலுசுகள் பேசும்
சங்கீத மொழி
புருவங்களின் நெளிவுகள்
பருவத்தின் அபிநயம்

இது மட்டுமல்ல
உன்னை எதிர்பார்ப்பது
இன்னும்

எனக்கான காதலும்
காதலுக்கான உன்னையும் தான்..

ஆம்
நான் உன்னை
மட்டுமே எதிர்பார்த்திருந்தேன்!

நீ
உன்
அண்ணனோடு
வருவாய் என எதிர்பார்க்க
தவறிவிட்டிருந்தேன்..

நீ
நான் எதிர்பார்த்த
உன்னை தொலைத்து
எதிரே வந்திருந்தாய்..

ஆம்
அண்ணனோடு உன்னை
நான் எதிர்பார்க்கவில்லையே

காத்திருத்தலில்
ஏமாற்றமும் சேர்ந்தென்னை
ஏளனமாய் சிரிக்க

தலைகவிழ்ந்து
நிமிர்வதற்குள்

நான்
எதிர்பாராத உன் அண்ணன்
என்னருகில் எரிக்கும்படி
பார்த்துகொண்டிருந்தான்..

நான்
உன்பார்வையை தானே
கேட்டேன்..
நீ
வேர்வை வரவல்லவா
வைத்துவிட்டாய்!

பயமில்லாத மாதிரி
முகபாவம் வரவழைக்க
நான் பட்ட பாடு
நீ அறிந்திருக்க மாட்டாய்!

பூவிரலால்
கரம்கோர்ப்பாய் என
எதிர்பார்த்தேன்

நீயோ
பூதத்தின் விரலுக்கிடையில்
அல்லவா மாட்டிவிட்டாய்!

இரும்பு பிடி பிடித்தான்
துரும்பென கூட பாராமல்!

கால்கொலுசொலி கேட்கதான்
எதிர்பார்த்தேன்..
என் காதுகிழிய அடிப்பான்
என எதிர்பாக்கவில்லை
நான்..

அட
இப்போது தான் நான் கேட்ட
புன்னகை உன்னிடம் வந்தது.
இப்போது நான் எதிர்பார்க்கவே
இல்லை தெரியுமா?
**********************************************************

நான்
உன்னை மட்டுமே
எதிர்பார்த்திருந்தேன்..

உண்மையில்
உன்னை உனக்கு
தெரிந்து தான் நான்
எதிர்பார்த்திருந்தேன்..

உன்னை-
இதில் நான் என்னவெல்லாம்
எதிர்பார்த்திருந்தேன் தெரியுமா?

விளக்கங்கள்
கொடுக்கலாம் என்று தான்
நினைத்தேன்..

நீ யும்
என்னை எதிர்பார்த்திருந்தால்
உன்னை-இதில்
உன்னை வர்ணித்து தான்
எழுதியிருப்பேன்..

நீ
எதிர்பார்க்கவும் இல்லை
எதிரே பார்க்கவும் இல்லை

நான்
எதிரிலே நின்று பார்க்கிறேன்
எதிர்பார்க்கவும் செய்கிறேன்

ஆம்
உன்னை
மட்டும் தான் நான்
எதிர்பார்த்திருந்தேன்..

நீ
எதிர்பாராதது ஒன்று
நான் சொல்லவா?

ஆம்
நான் உன்னை
மட்டுமே
எதிர்பார்த்திருந்தேன்

இதுவல்ல நான்
சொல்லவந்தது

இதையே
மூன்று பெண்களிடமாவது
சொல்லியிருப்பேன்..
ஹி ஹி ஹி..
ஒன்று மட்டும் இப்போது
உன்னிடம் இருந்து
எதிர்பார்க்கிறேன்..

உனக்கு அண்ணன்
இருந்தால் முன்னமே
சொல்லிவிடுவாய் என!!

Friday, August 1, 2008

காதல்..



சூரியன் அஸ்தமிக்குமொரு பொழுதில்
இரு நிலவுகள் உதயமாகிறதென்னில்..

வானிலவின் தண்மையை மறைத்து
கொள்கிறது பூநிலவின் அழகு.

இந்நிலவை மட்டுமே வெறிக்கிறது
என் காத்திருத்தல் முழுமையும்.

எவ்வுளவு உதறியும் விழுந்துவிடாமல்
கூடவே பயணிக்கிறது நிலவின் நினைவுகள்.

இரவுகள் விழித்துகொண்டு நினைவுபேய்கள்
இங்குமங்குமாய் அலைந்துகொண்டிருக்க

இதயத்தில் ஒழுக ஆரம்பிக்கிறது
காதலின் வாசத்தோடான குருதி..

குருதியின் வாசத்தை நிலவில்
நுழைக்க திட்டம் தீட்டிகொண்டிருக்கிறோம்..

நானும் என் மனமும்...

Friday, July 25, 2008

செல்லப்பாண்டி கவிதைகள்...

ஆனாலும் உன‌க்கு
கெட்ட‌ எண்ண‌ங்க‌ள்
இவ்வ‌ள‌வு கூடாது!
என் உற‌க்க‌த்தைகூட‌வா
க‌வர்ந்து கொள்ள‌ வேண்டும்?..

என்றெல்லாம் என் நாட்குறிப்பில்
சோக‌ம் இழையோடியுல்ல‌தோ
அன்றெல்லாம்என்னிட‌ம்
நீ முக‌ம‌ல‌ர்ந்திருக்க‌மாட்டாய்
என்று அர்த்த‌ம்!

உனைப் பார்க்க‌ முடிவ‌தென்ன‌வோ
ஒரு சில‌ நிமிட‌ங்கள்தான் என்றாலும்
அது போதும் என் மீத‌முள்ள‌
நேர‌ங்க‌ளையும் ஆக்கிர‌மிக்க!..

புன்முறுவ‌லோடு நீ பூக்கும்
சிறு புன்ன‌கைகூட‌
ஒருவ‌கை போதை‌தான்..
அதிலிருந்து மீண்டெழுவ‌த‌ற்கு
என‌க்கு ப‌ல‌ ம‌ணி நேர‌மாகிற‌து!

சிறு பொய் கூறினேன் என்ப‌த‌ற்காக‌
என்மீது கொப‌ம் கொள்ள‌தே!
இல்லாவிடில் உனை சமாதான‌ப்ப‌டுத்த‌
ஆயிர‌ம் பொய்க‌ளை கூறி விடுவேன்..

உன‌க்கெதிரான‌ என் தீர்மான‌ங்க‌ள்
அனைத்தும் ஒரே நொடியில்
உடைந்து போய்விடுகின்ற‌ன‌..
உன் இத‌ழ்க‌ள் என‌க்காக‌
ஒரு துளி புன்ன‌கையை
உதிர்த்து செல்லும் பொழுது!

உன்மீது கொண்டுள்ள‌ என் அன்பு
என்ன‌வ‌கை என்று தெரிவ‌த‌ற்குள்
அடுத்த‌ க‌ட்ட‌த்திற்கு தாவிவிடுகிற‌து
என் அசுர‌ ம‌ன‌து!

சாத்திய‌மில்லை என்று தெரிந்தாலும்
எல்லாவ‌ற்றையும் என‌க்கு
சாத‌கமாக‌வே எடுத்துகொள்கின்றேன்..
உன்னிட‌மிருந்து ம‌ட்டும்!

என‌க்கே புரிவ‌தில்லை?
எப்ப‌டித்தான் திரும்ப‌ திரும்ப‌
உன்னிட‌மே ஏமாறுகிறேன் என்று!

உன்னை த‌விர்க்க‌ நினைத்து
த‌விர்க்க‌ நினைத்துமுன்பைவிட‌
அதிக‌மாக‌வேநெருங்கி விடுகிறேன்!

என‌க்கு தெரிந்து
அன்பு செய்வ‌தைவெறுக்கும் ஜீவி
உல‌க‌த்தில் நீ ம‌ட்டும்தான்!

சொன்னால் ந‌ம்ப‌மாட்டாய்!
நான் கூறும் பொய்க‌ளைம‌ட்டுமே
நீ ர‌சிக்கின்றாய்!

உன்னிட‌ம் ம‌ட்டுமேபொய்க‌ளை
அதிக‌மாக‌ எடுத்துகொள்கின்றேன்!
என் பொய்க‌ள் ம‌ட்டுமேஉனை
அதிகமாக‌ க‌வ‌ர்கிற‌தென்ப‌தால்!

நீ என்மேல்
எப்போதும் காட்டும் வெறுப்பைவிட,
எப்போதாவ‌து காட்டும் அன்புதான்
என் ம‌ன‌தில்ஆழமாக‌ ப‌திந்து விடுகிற‌து!

உண்மையில் என‌க்கான
க‌விதை சுர‌ங்க‌ம் நீதான்!
வ‌டிவ‌மைக்கும் ப‌ணிம‌ட்டும்
தான் என்னுடைய‌து..

நீ என்மேல் பொழிவ‌து
விஷ அ(ன்)ம்புக‌ள் என்று
என‌க்கு தெரிய‌ப்போவ‌தில்லை..
நான் சாகும் வ‌ரையில்!

என் முன்னால் யாரிட‌மும்
அதிக‌மாக‌ அன்பு காட்டாதே!
இல்லாவிடில் அவ‌ர்க‌ள்
என்னால் ச‌பிக்க‌ப்ப‌டுவார்க‌ள்!

இது தாண்டா போலிஸ்..

கடமை
கண்ணியம்
கட்டுப்பாடு

கருப்பொருள் அறிந்தோ
அறியாமலோ உறுதிமொழி
எடுப்போம் நாங்கள்..

காந்தி ஜெயந்தியாகட்டும்
சுதந்திர தினமாகட்டும்
மது அருந்தலாம்.
கைக்காசு தீர்ந்தால்
கடமை எங்கள் கண்முன்
வந்து நிற்கும்..

லைசன்ஸ் இருந்தாலும் சரி
இல்லையென்றாலும் சரி
எங்களுக்கு கைக்காசு தீரும் போது
நீங்கள் தலைகவசம் அணியாவிட்டாலும்
கடமை கண்முன் நிற்கும்..

கொலைகள் நடக்கட்டும்
கொள்ளைகள் நடக்கட்டும்
கேள்விகள் கேட்கபட்டால் மட்டுமே
கட்டுப்பாடு எங்களுக்குள்
விட்டுகொடுக்காமல் வந்துவிடும்..

அப்பப்பா..எத்துணை
அருமையானது எங்கள்காவலின்
கண்ணியமான சேவை..

அரசியல்வாதி ஒருவனின்
வருகைக்காக காலையிலிருந்து
இரவு வரை வெயிலடித்தாலும்
மழைவந்தாலும் பொம்மை போல
நின்றிருப்பீர்கள்.

இந்த பிழைப்பு பிழைப்பதற்கு
எங்களோடு வரிசையில் நின்று
ரேஷனில் அரிசி வாங்கி
தின்று வாழலாம்....

Thursday, July 24, 2008

அப்படியாப்பா??? இது கவிதைன்னு சொல்ல முடியாது

இந்தியா சுதந்திரம் அடைந்து
விட்டது!!!

"ஆடுவோமே பள்ளு பாடுவோமே"

காந்தி சுட்டு கொல்லபட்டார்!!

"ஐயகோ என்னே கொடுமை"

அரசியலில் முழுக்க ஊழல்

ஆரம்பிச்சுட்டாங்களா??

அதிகாரிகளும் ஊழல் பண்றாங்க

அடப்பாவிங்களா???

நான்கு வயது சிறுமி கற்பழிப்பு

அப்படியா?

அண்ணன் தம்பி சண்டையில்
அரிவாள் வெட்டு அண்ணனுக்கு

அப்படியா?

அடுத்தவன் பொண்டாட்டியோடு
கள்ளக்காதல்..
கணவனின் ஆவேசம்
மனைவி,காதலன் இரட்டை கொலை

அப்படியா?

அணு ஒப்பந்தம் ஆட்சி கவிழ்ப்பாகலாம்
நம்பிக்கை ஓட்டெடுப்பு.
மத்தியில் எம்பிக்களிடம்
பணபுழக்கம்

அப்படியாப்பா?

அசோக்நகர்,வடபழனியில்
தொடர்கொலை-சைகோ யார்?
தேடுதலில் தீவிரமான போலிஸ்.

அப்படியாப்பா?

இந்துமதம் எங்கே போகிறது?
கேள்வியை தலைப்பாக்கி
கட்டுரைதொடர்..

அப்படியாப்பா?

இஸ்லாம் சொல்வதொன்றும்
செய்வதொன்றும்

அப்படியாப்பா?

தாயையே மதிக்காத மகனாய்
இயேசு..இங்கே அவரையும்
வணங்க ஆட்களென ஆதங்கம்

அப்படியாப்பா?

என்னப்பா அப்படியாப்பா?

நீங்களும் தான் காலகாலமாக
நல்லது கெட்டதென செய்திகளாய்
என் காதுகிழிய சொல்கிறீர்கள்.

நல்லது நடந்தது சரி..

தீயவைக்கு முற்றுபுள்ளி வந்ததாகவே
தெரியவில்லை..

இப்படியே போனால் அப்படியாப்பா
"அடப்போங்கப்பா"

எனக்கூட மாறும்..
என் மேல் வருத்தப்படவேண்டாம்.

-இது வரை நான்..இதற்கு மேல் கவிஞர் ருத்ரா...

த‌ணிகைம‌லை மாம‌ணியே
முருகைய்யா.."===============ருத்ரா

ம‌துரை சோமு இன்று
இப்ப‌டித்தான் பாடியிருப்பார்.
பேனாவுக்கு ப‌தில்
ஒரு வேலாயுத‌த்தை வைத்து
கூர்மையாக‌ குத்தி குத்தி
எழுதியிருக்கிறீர்க‌ள்.

உங்க‌ள் "அப்ப‌டியாப்பா?.."
"செய்தீ" வ‌ரிக‌ளில்
அப்ப‌டியும் இல்லாம‌ல்
இப்ப‌டியும் இல்லாம‌ல்
"அலி"ப்பாக்க‌ள் எனும்
ஒருவ‌கை"க‌லிப்"பாக்க‌ள்
அல்ல‌வா எழுதியிருக்கிறீர்க‌ள
ஒரு புதிய‌ யாப்பில‌க்க‌ண‌த்தில்
த‌ர‌வு கொச்ச‌க‌ க‌லிப்பா என்று
இதை சொல்லிக்கொள்ள‌லாம்.

ம‌னித‌முக‌ங்க‌ள்
எத்த‌னை வ‌கையாய் பூத்திருக்கின்ற‌ன‌?
ஒரு நேர‌ம் ரோஜாப்பூ
ம‌று நேர‌ம் எருக்க‌ம்பூ
இன்னொரு நேர‌ம் அல்லிப்பூ.
அப்புற‌ம் பார்த்தால் க‌ள்ளிப்பூ.

இந்த‌ பூக்க‌ள் எல்லாம்
எப்ப‌டி கொலைவாள்க‌ளாய்
மாறின‌?
ம‌னித‌ ஆத்மா தின‌மும்
ப‌டுகொலை செய்ய‌ப்ப‌டுகிற‌து.

இந்த‌ சித்திர‌ங்க‌ளின்
க‌லைடோஸ்கோப் காட்சிக‌ளை
இல்லை இல்லை...
கொலைடோஸ்கோப் காட்சிக‌ளை
நீங்க‌ள் காட்டியிருப்ப‌து
ந‌ம்மை திடுக்கிட‌ வைக்கிற‌து.

க‌விதைக‌ள்
முகில்க‌ள் போலும் உல‌வ‌லாம்.
திகில்க‌ள் ஊட்டியும்
திக் விஜ‌ய‌ம் செய்ய‌லாம்.
உங்க‌ள் எழுத்துக்க‌ளின்
..இந்த‌"திக் திக் விஜ‌ய‌த்துக்கு"
நிச்ச‌ய‌ம் வெற்றி தான்.

வாழ்த்துக்க‌ளுட‌ன்ருத்ரா.

பிரியாத நினைவுகள்...

நிஜங்கள் முடிவுக்கு
வரும்போதெல்லாம்
நினைவுகள் ஆரம்பமாகிவிடுகிறது.
சுகமாகவும் சோகமாகவுமே!
சுகத்தில் மூழ்க நினைத்தால்
சோகம் ஆட்கொண்டு அணைக்கும்.

தனிமையின் அசைபோடுதலில்
வருடும் தென்றலில் கொஞ்சம்
நனைக்கும் மழையில் கொஞ்சம்
வெளிவிடும் புகையில் கொஞ்சமென
நினைவுகள் உதிர்த்துபோகும்..

மறக்கபடகூடாதவைகள் விடுபட்டும்
மறக்கதுடிப்பவைகள் விடுபடாமலும்
நின்று அடம்பிடிக்கும்..

நானும் அடம்பிடித்துகொண்டிருப்பேன்
தேங்காயை உருட்டும் நாயினை போல....

Wednesday, July 23, 2008

தேவையற்ற வெள்ளாமை..

கோபத்தின் வெள்ளாமையில்
பகைமை விளைச்சலில்
தலை கவிழ்தலோ
தவறுகளின் ஆரம்பமோ தான்
முடிவாயிருக்கும்..

ஆசுவாசத்தின் கழிவிறக்கம்
அமைதியின் பலனை
நினைவிருத்தினாலும்
பருவங்களில் வெள்ளாமையெடுக்கும்
கோபம் தணிந்ததாகவே இல்லை..

தேவையற்ற வெள்ளத்தின்
சேதங்கள் மட்டும் அடிக்கடி
அரங்கேறிகொண்டு தானிருக்கும்..

கோபத்துக்கான காரணங்களை
அர்த்தமாக்க முற்பட்டுகொண்டே.......

Monday, July 7, 2008

புணர்தலென்பது.. - சுயம்சொன்னால்



பருவம் முதல் படையெடுக்கும்
காமத்தில் சிக்குண்ட உடல்கள்
எத்தனையோ..

உடல்களின் புணர்தல் பெருகியும்
காமத்தின் உணர்தல் மட்டும்
தணிந்ததாயில்லை..

மனைவியோடு புணர்தலென்பது
பிரேதத்தின் உணர்தலாகவே
இருக்குமெப்போதும்...

~ஆயினும்~

உடல்களின் தேடல்கள் மட்டும்
தொடர்ந்துகொண்டேயிருக்கும்..

கார்த்திகையில் நாயை போலவே..

Friday, July 4, 2008

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் வாணி அக்கா...


எனக்கு இணைய குழுமத்தில் அறிமுகமாகி இதுவரை முகமறியாத என் அன்புக்குரிய அக்கா ..இவர் எனக்கு அதிகம் பரிச்சயமில்லையெனினும் அமெரிக்காவில் வாழ்ந்துவரும் இவர் இரண்டு மூன்றுமுறை அரட்டையில் பேசியிருக்கிறார்.
இவர் தற்போது இந்தியாவின் கோவை பகுதியில் இருக்கிறார் எனதெரிந்ததும் அவரிடம் அலைப்பேசி எண்ணை கேட்டு மடல் அனுப்பியிருந்தேன்..என்னிடம் பேசுவதற்கு இந்த அன்பு அக்கா பூஸ்ட் குடித்து எனர்ஜியோடு நாளை என் அழைப்புக்காக காத்திருப்பதாகவும் திரும்ப மடல் வந்திருந்தது...
வேலை நிமித்தமாய் என்னால் அழைக்க முடியாமல் போய் மாலை நேரத்தில் அழைப்பு விடுத்தேன்..என் அழைப்பை ஏற்று ஹேய் சொல்டா என எனை அன்போடு அரவனைத்த முதல் வார்த்தை..
தொடர்ந்து என்னை பற்றி விசாரிக்க தொடங்கியது முதல் இருவரும் எந்தவொரு புதியவர் என்ற தயக்கமுமில்லாமல் பேசினோம்..
அமெரிக்காவில் தமிழ் பள்ளியில் பகுதிநேர ஆசிரியையாக அ ஆ இ இந்த மூன்றெழுத்து மட்டுமே கற்று தரும் ஆசிரியையாய் இருந்தாலும் அமெரிக்காவில் சென்று தமிழ்பணி செய்வதில் இவர் மீது எனக்கு இன்னும் பற்று அதிகமானது..
இருபது நிமிடம் பேசியிருப்போம் நாங்கள்..தான் ஒரு குழுமசந்திப்புக்கு செல்வதாகவும் பின்னர் அழைத்து பேசுவதாகவும் பை சொல்லி கொண்டே பத்து நிமிடம் பேசிகொண்டிருந்தோம்..இருவருக்குமே அழைப்பை துண்டிக்க மனமில்லை..
என்னக்கா பை என்று நாம் பேசிகொண்டிருக்கிறோம் என்று சொன்ன கணம் எனக்கு இதுவரை நானாக அழைப்பை துண்டித்ததில்லை என என் பழக்கத்தையே சொல்லி என் தோழி கதீஜா பேகமை நினைவுக்கு கொண்டுவந்துவிட்டார்..
பின்னர் தான் தெரிந்தது..இன்று அவருக்கு பிறந்தநாள் என்று..நேற்றே அவரிடம் அரட்டை பகுதியில் வாழ்த்து சொல்லிவிட்டு ட்ரீட் கேட்ட போது நான் இங்கே இருக்கும் அனாதை இல்லத்தில் தான் என்னுடைய பிறந்தநாளை கழிக்க விரும்புகிறேன்..நீயும் வரியாடா என்று என்னையும் அழைத்ததொரு நல்லுள்ளம்...
இது போல் இன்னும் பல பிறந்தநாள்கள் உங்கள் வாழ்க்கையில் வரவேண்டும்..நீங்கள் இதே போல எந்நாளும் சந்தோசமாய் வாழ வேண்டும் என வாழ்த்துகிறேன்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
என் அன்பு அக்கா...

Wednesday, July 2, 2008

நான் நானாக இருந்ததே இல்லை..



சிலநேரம் அழுதிருப்பேன்
சிலநேரம் சிரித்திருப்பேன்
சிலநேரம் மௌனமாயிருந்திருப்பேன்
சிலநேரம் பேசிகொண்டேயிருந்திருப்பேன்
சிலநேரம் கோபங்களை கக்கியிருப்பேன்
சிலநேரம் வேசம் போட்டிருப்பேன்

தேவைக்கேற்றோ அல்லது
தேவைகளின்றியோ

எல்லா தருணங்களிலும்
எல்லா உணர்வுகளும் மாறி மாறி
என்னுள் பயணித்திருக்கும்.

நான்
நானாக இருந்ததே
இல்லை எப்போதுமே..

நான்
விரும்பியவைகள் நிலைக்காமலோ
விரும்பாதவைகள் நின்றுகொண்டோ
அடம்பிடித்துகொண்டிருக்கும்..

~ஆயினும்~

விருப்பங்களோ வெறுப்புகளோ
இல்லாமல் இருந்ததே இல்லை..

காற்றின் அசைவுக்கெல்லாம் இசையும் மரத்தினை போல....

Tuesday, July 1, 2008

நான் கடவுளாகி விட்டேன்..

திடீரென ஒரு மாற்றம்
என் தலையைசுற்றி
ஒளிவட்டம் சுற்றுகிறது..

எல்லா உணர்வுகளையும்
உள்ளடக்கி தேவையானதருணங்களில்
வெளிபடுத்த தயாராகிவிட்டேன்..

எதையும் மாற்றியமைக்க
முடிகிறது என்னால்- ஆம்
நான் இப்போது கடவுளாகிவிட்டேன்.

என் சக்தியை வெளிபடுத்த
தொடங்கிவிட்டேன் இப்போது..

இலேசான தென்றலாய் ஆரம்பிக்கிறது
எனது சக்தி..திடீரென மேலெழும்பி
குளிர்காற்றாய் மாறி தூரலில்
கீழறங்கும் போது அசுரமழையாய்
முடிகிறது..

யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை..
எல்லாரும் பரிசுத்தமாய் மாறினர்.
மனிதம் ஜனனமெடுக்கிறது..

ஆணும் பெண்ணும் சமத்துவமாய்
பேணுகிறார்கள் குடும்பத்தை..

கையேந்திய குழந்தைகளெல்லாம்
பூங்காவில் விளையாடிகொண்டிருக்க

அடுத்தவனின் மரணநாள் குறிப்பவன்
அவனுக்கு பிறந்தநாள் வாழ்த்தனுப்ப

அரசியலெங்கும் சந்தனம் வீசுகிறது
அவரவர் பணிமட்டுமே செய்கிறார்கள்

எங்கோ கால் இடறியவனை ஓடிப்போய்
எல்லாரும் தாங்கமுற்படுகிறார்கள்..

புற்றுநோயாய் புரையோடிய இலஞ்சம்
என்ற பேரையே மறந்துவிட்டிருக்கிறார்கள்..

போர்களோ பொருட்சேதமோ உயிர்சேதமோ
எதுவும் காணவில்லை பூமியில்..

தெரியாமல் இடித்துவிட்டால் கூட
பணிவோடே மன்னிப்புகள் கேட்பதும்

இதெற்கெல்லாமா என்று தட்டிகொடுத்து
சகஜமாய் மானுடர்கள் மகிழ்ச்சியாய்..

-ஆம்

மனிதம் தழைத்து விட்டது..
மனங்களில் மகிழ்ச்சி மட்டுமே..

கடவுளுக்கு நன்றி சொல்ல
கடமைபட்டுள்ளதாய் மக்கள்
குழுமிவிட்டார்கள்..

என்னை பூஜிப்பதாய் எனக்கு
படையல்கள் வந்த வண்ணம்..

யார் முதல் செய்வதென்று மீண்டும்
பிரிவினை வரவே என்னையும்
பிரிக்க வந்துவிட்டனர்..

ஐயகோ!!!
மீண்டும் ஏன் மானிடனே?
இதற்காகவா
நான் ஜனனமெடுத்தேன்?

கதறிகொண்டே ஓட
ஆரம்பிக்கிறேன்..

தரையில் விழுந்த என்னை
என்னவாயிற்று என அன்னை
தழுவுகிறாள்..

அப்பப்பா இதுவும்
கனவு தான்..

கனவில் கூட மனிதனின்
பிரிவினை முன்னிற்பதை
நொந்துகொண்டு

அலுவலகத்தில் மூழ்குகிறேன்..

தினசரியாய்
நடக்கும் நிகழ்வுகள்
நடந்துகொண்டே இருக்கின்றன!!

காற்றும் காலகாலமாய் வீசிகொண்டிருப்பதாய்.....

தனிமைகள்.




சில வெறுப்புகளுக்காகவோ
சில விருப்பங்களுக்காகவோ
சில தோல்விகளுக்காகவோ
சில தேடல்களுக்காகவோ
சில மகிழ்ச்சிக்காகவோ
சில நிம்மதிக்காகவோ
சில கொலைபிண்ணனிக்காகவோ
சில தற்கொலைகளுக்காகவோ

என வாழ்வின் ஒவ்வொரு
தருணங்களிலுமே

காரணங்களேயன்றியும்
காரணங்களை உட்நுழைத்தும்

தனிமைகணங்கள்
பின்னப்படுகின்றன..

சிலவற்றில் தீர்வுகள் கிடைத்தும்
பலவற்றில் தீர்வுகள் கிடைக்காவிடினும்

காரணங்களை உட்நுழைத்து
தனிமைபூக்கள் மலர்ந்துகொண்டே இருக்கும்..

கரையை நோக்கியே அலையின் தேடல் போல...

Friday, June 27, 2008

பாக்கெட் சாராயம்

சிவா தாங்க என்னோட ஒரே பிரண்டு..ரெண்டுபேரும் தான் எப்பவுமே கில்லியாட போறதிலிருந்து பள்ளிகூடத்துக்கு போறவரைக்கும் எப்பவுமே ஒன்னா தான் போவோம்..இன்னிக்கு நான் பள்ளிக்கு கெளம்பி சிவாவை போய் பார்த்தா இன்னும் கிளம்பாம அழுதுட்டு இருந்தான்..

இன்னாடா சிவா அழுதுகினு இருக்கன்னு கேட்டா எங்க அப்பா அடிச்சிட்டாருடான்னு ஹிரும்பவும் தேம்பி தேம்பி அழ ஆரம்பிச்சுட்டான்..உள்ள பாத்தா சித்திரை அண்ணன் அதான் சிவாவோட அப்பா அவுங்கம்மாவவயும் போட்டு அடிச்சிகிட்டு இருந்தாரு..

பாவி மனுஷா காலங்காத்தால குடிச்சிட்டு வந்து இன்னும் இப்படி போட்டு அடிக்கிறியே ..அந்த பள்ளிகொடத்துக்கு போற புள்ள இன்னாயா பாவம் பண்ணுச்சு..என் வயித்துல வந்து பொறந்ததுட்டு இப்படி எங்கூட அதுவும் இப்படி சாவுதேன்னு அழுதுட்டு இருந்துச்சு..

பஞ்சாயத்துபண்றதுக்குன்னே பக்கத்துல இருந்த பெருசுங்க ஏண்டா இந்த மாதிரி பண்ணிட்டிருக்கன்னு கேட்க எதுவுமே காதுல வுழாதமாதிரி சித்திர அண்ணன் டேய் போங்கடா என் பொண்டாட்டி இன்னா வசியம் காட்டி வரவெச்சாளா தேவிடியான்னு திரும்ப போய் எட்டி உதைச்சாரு அந்தண்ணிய..

இவன்லாம் என்ன சொன்னாலும் திருந்தமாட்டான்யான்னு வந்த பெருசுங்க திரும்ப போயிடுச்சு..தெருவில இருக்க பொம்பளைங்கல்லாம் வேடிக்க பாத்தகதியா நின்னுட்டு இருந்ததுங்க.டேய் சிவா அழுவாதடா ன்னு அவன் கண்ணை தொடச்சிவிட்டு மூஞ்ச கழுவிட்டு வாடான்னு தண்ணிமொண்டு கொடுத்து பையை எடுத்துகிட்டு கூட்டிட்டு போனேன்..

பள்ளிகுடமுடிச்சு வரவரைக்கும் சிவா அழுதுட்டே தான் இருந்தான்..பாதிவழியில கல்லுமோட்டு பக்கமா சித்தரண்ண லுங்கி இல்லாம வெரும் டவுசரோட மண்ணுல கிடந்தாரு..தூக்கமுயற்சி பண்ணி பாத்தோம் ரெண்டுபேரும் முடியலை..அதுக்கப்புறம் வுட்டு தள்ளுடா இந்தாளு வூட்டுக்கு வராம இருந்தாலே நிம்மதிடா எங்களுக்குன்னு முன்னாடி போயிட்டிருந்தான்..

இன்னாடான்னு கேக்க வூட்ல சோறு பொங்கி ரெண்டுநாளாச்சுடா..நாய்க்கர் வீட்டாண்ட ஊத்துன பழைய கஞ்சிய மிச்சம் வெச்சுதாண்டா நேத்துவரைக்கும் குடிச்சோம்..இந்தாளுக்கு மட்டும் எப்படிதான் குடிக்கறதுக்கு காசு வருதுன்னே தெரியலைன்னு புலம்பனான்..

டேய் யாருடா அங்க வாங்கடா இந்த வெறகு கட்ட தூக்கி தலையில வைங்கடான்னு நாராயனந்தாத்தா கண்ணசுருக்கிகின்னே கூப்புட்டாரு..சரின்னு போய் எங்க தாத்தா போற வூட்டுக்கா நானே தூக்கிட்டு வரேன்னு சிவா தூக்கிகிட்டான்..டேய் வூட்டுக்கில்ல இப்பை கல்லுமோட்டு பக்கமா வான்னு வேலிக்காத்தா பொதருக்காகூட்டிட்டு போனாரு ..

பின்னாடியே போய் பாத்தா பாக்கெட்டுல அங்கதான் சாராயம் வித்துகினு இருந்தானுவ.இன்னா தாத்தா இங்க கூட்டியாந்துகீறன்னு நான் கோவமா கேட்டா மடைபயமவனே காசுக்கு நான் எங்கடா போவேன் அதான் வெறகு வெட்டியாந்து குடுத்தா மூனு பாக்கெட் குடுப்பானுவன்னு அதுபக்க ஞாயத்தை அது சொல்லுச்சு..

தலையிலிருந்த வெறக தொப்புன்னு போட்டுட்டு போயாகிழவான்னு வேகமா சிவா நடக்க பின்னாடியே நானும் போனேன்,,டேய் எங்கப்பனும் இப்படி தான் குடிக்கிறான்போலன்னு ஏதோ யோசிச்சுகிட்டு வீட்டுக்கு போனான்.மறுநா காலையிலெழுந்து டேய் வாடான்னு என்னையும் கூட்டிகிட்டு காட்டுபக்கமா போனாக்கா வெறக வெட்டிவெச்சிட்டு வேலி ஓரமா திரும்பி ஒன்னுக்கு போயிட்டிருந்தாரு சித்தரண்ன,,

என்னடா பண்ண போறன்னு கேட்க வெறகதூக்கிகினு இன்னைக்கு எப்படி குடிக்கிறபாருய்யான்னு ஓட ஆரம்பிச்சுட்டான்..அவரு கண்ணுக்கு அப்பால ஓடி வந்தா நாராயணந்தாத்தா எதிர வந்துச்சு ..தாத்தா வெறகு ஓனுமின்னா எடுத்துக்கோன்னு அவருகிட்ட குடுத்துட்டு வீட்டாண்ட வந்தோம்..பாத்தா அங்க கையில கொம்போட அவுங்கப்பா கோவமா நின்னுட்டு இருந்தாரு..

திரும்ப எந்தபக்கமா ஓடுரதுன்னு தெரியாம பயத்துல ஓட ஆரம்பிச்சோம்..பின்னாடியே தொரத்திட்டு ஓடியாந்தாரு அவரும்..டேய் கல்லுமோட்டு பக்கமா பொதார்ல ஓடிரலாம் வாடான்னு இழுத்துட்டு ஓடுனேன்..

பாத்தா அங்க சாராயம் விக்குற இடத்துல சனமெல்லாம் கூடி எல்லாத்தையும் அடிச்சு நொறுக்கிட்டு இருக்குங்க..உள்ள நுழைஞ்சு பாத்தா நாராயணந்தாத்தால இருந்து பதினஞ்சு பேருக்கு வாயில நுரைதள்ளிட்டு கிடந்தாங்க..

பொம்பளைங்கெல்லாம் ஓன்னு அழுதுட்டே இருந்ததுங்க..என்னன்னு புரியாம திரும்பி பாத்தா பின்னாடி அவுங்கப்பா .பயத்தில நடுங்க அவரோ கொம்ப போட்டுட்டு திரும்ப போயிட்டிருந்தாரு..

டைமிங் கிராஸ்

என்னடா வாழ்க்கை இது? எப்பபாத்தாலும் வேலைக்கு போ வேலைக்கு போன்னு உயிரெடுக்கிறாரு அப்பா..வேலை கொடுத்தா நான் என்ன போக மாட்டேன்னா சொன்னேன்..நல்லா தான் படிச்சேன்..பர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணி பைலை தூக்கிட்டு அலைஞ்சா போன மூனு கம்பெனிக்கே வாழ்க்கை வெறுத்துட்டு
படிச்சப்ப வாங்கி கொடுத்த சைக்கிளெடுத்துகிட்டு சைட்டடிக்க பஸ்ஸ்டாண்டு பக்கமா மணி நாலாச்சுன்னா
போயிடறது தாங்க நம்ம வாழ்க்கை..

என்னடா புலம்பிட்டே போறான்னே யாரு இவன் பேரு என்னன்னு யோசிக்கறீங்களா? பேரு சிவாவே தான். மூனு வருசமா வேலை தேடுற வேலைய விட்டுட்டு இங்க பஸ்ஸ்டாண்டுல தான் ஆட்டோ காரனுங்களை பிரண்டா பிடிச்சுகிட்டு போற வர குஜிலிங்களையெல்லாம் லேசா கலாய்ச்சுகிட்டு இருந்தாலும் இது வரைக்கும் ஒன்னுமே மடியல..சரி இன்னைக்கு கொஞ்சம் மெருகேத்திகிட்டு போலாம்னு யோசனை..

மணி மூனாச்சு..எழுந்து பாத்ரூம் போனவன் அரைமணிநேரம் குளிச்சுட்டு வெளிய வந்தா இவரு பாக்கற வேலைக்கு இது ஒன்னும் குறைச்சலில்லன்னு அம்மா கத்திட்டே இருந்துச்சு..அடிக்கிற காத்தோட காத்தா அம்மாவோட பேச்சையும் துரத்திவிட்டு மேக்கப் போட ஆரம்பிச்சு 3.50 ஆயிடுச்சு..இப்பவே கிளம்பினாதான் பஸ்ஸ்டாண்டுக்கு போகமுடியும்னு சைக்கிள் எடுத்துட்டு கிளம்பி போயிட்டேன்.

இந்த ஆட்டோகாரனுங்க கூட உக்காந்தா தான் ஒரு சப்பை பிகரு நம்மளை பாக்கலை சைக்கிள்லேயே இருந்து சைட் அடிப்போம்னு தள்ளியே நின்னுட்டேன்..ப்பா புதுசா ஒரு பொண்ணு ..இன்னைக்கு தான் பாக்குறேன்.இவ்ளோ அழகா நம்ம ஏரியாவிலயா..எப்படீயாச்சும் பிட்ட போட்டுடனும்டா ன்னு என் மனசு சைக்கிளை உந்த ஹாய் பிரியான்னு ஒருத்தன் நல்லா அழகா பைக்கை கொண்டாந்து நிப்பாட்டி ஏத்திட்டு போயிட்டான்..

இப்ப தான் எனக்கு புரிஞ்சது காலத்தோட வேகம்..அதே வேகத்தோட வீட்டுக்கு போய் தூக்கி போட்ட சர்டிபிகேட் பைலை தேடதொடங்கினேன்..

Wednesday, June 25, 2008

கல்லெறியபட்ட மகிழ்ச்சி




அலுவல்களின் அழுத்தங்களில்
மீண்டெழுந்து அமைதிக்காய்
வீட்டுதோட்டத்தின் வெறித்தலில்.

நிழலினை குரைத்து
விளையாடி கொண்டிருக்கும்
நாய் குட்டியினை சமாதானம்
செய்வதாய் தூக்கி செல்லும்

மகளினிருந்து கொஞ்சநேர
மகிழ்ச்சியிலும் கல்லெறிந்ததாய்
வெளியேற எத்தனிக்கும்
குட்டியின் மனதினோடே
எழுந்துபோகிறேன்
மனைவியின் அவசரகுரலுக்கு...


காமம் தலைதூக்கும் கணத்தில்.....



மனைவியை சலித்து
அடுத்தவளையெல்லாம்
அம்புதொடுக்கும் என்
காம கனைகளுக்கு
அவ்வப்போது குறுக்கிடும்
அறிவுரைகள் தவறென
சொல்லி செல்லும்..

~இருப்பினும் ~

கம்பத்தினை கண்ட நாயாய்
காலைதூக்கும் என் காமத்தில்
கல்லெறிந்து போகும்
காமுகனொருவனின் என்
மனைவியின் மீதான வெறித்தல்..

Saturday, June 21, 2008

உண்மைகாத‌ல்-மீள்பார்வை

உண்மைகாதலொன்றுக்கு
உதாரணம் கேட்டார்கள்.
உன்னுடனான என்காதலையே
மீள்பதிவாக்குகிறேன்..

அடிகள்ளி!!!
முதன்முதலாய்
எப்படியடி என்னுள்
நுழைந்தாய் நீ!

எதிர்பாராத தருணமொன்றில்
எனக்கானவளாய்
என்னெதிரே நின்ற‌
முதல்கணத்திலே
முடிவாக்கினேனே!

வாழ்ந்தால் அது
வஞ்சி உன்னுடன்
தானென்று!!

அன்றிரவு முதல்
இமைகளிலெல்லாம்
இனிமைகனவுகளாய்
இனியவள் நீ மட்டும் தான்!

கனவுகாண்!முயற்சிசெய்
கலாமின் வார்ப்புகள்
காதலில் பிரயோகிக்கிறேன்!

முயற்சியின் பால்
முடிவும் கிடைத்தது.
நீ என் காதலியென்று!!

கனவில் கைகோர்த்த‌
கடற்கரைகள் இன்றுநம்
கால்தடங்களை பதிக்கிறது..

எந்தலை வலிக்காக நீயும்
உன் காய்ச்சலுக்காக நானும்
வலிகண்ட அழுகைகளும்

தோல்விக‌ளுக்கான
தேற்றுத‌ல்க‌ளும்
வெற்றிக‌ளுக‌ளுக்கான‌
வாழ்த்துக‌ளும்

ப‌றிமாற‌லாய்
அர‌ங்கேறிய‌ க‌ண‌ங்க‌ள்
என் வாழ்வின்
விமோட்ச‌ன‌ங்க‌ளென்று
இருவ‌ரும் சொல்லிகொண்டோமே!!

அப்பப்பா!!
எத்துணை அழ‌கான‌
நினைவுக‌ள் அத்த‌னையும்
நினைத்து நினைத்து
சிரித்திருப்போமே!!

நான் எதையாவ‌து
சொல்ல‌ சின்ன‌குழ‌ந்தையாய்
சினுங்கிகொண்டு
பேச‌மாட்டேனென‌
சொல்லிவிட்டு

அடுத்த‌ ஐந்துநிமிட‌ங்க‌ள்
ந‌ம‌க்குள் அழைப்புக‌ள்
அர‌ங்கேறுமே
அப்ப‌டிதான‌டி
இந்த‌முறையும் செய்வாய்
என‌ இருந்தேன்.

ஆறுமாத‌ம் க‌ழித்த‌ உன்
அழைப்பில் வ‌லியோடே
நான் க‌ண்ட‌ சுக‌த்தை
அப்போதே
அடித்துநொறுக்கினாயே உன்
திரும‌ண‌சேதி சொல்லி

பிரேத‌மாக‌வே பேசிமுடித்தேன்
நாளை நாம்
வ‌ழ‌க்க‌மாக‌ ச‌ந்திக்கும் இட‌த்திலே
ச‌ந்திப்போம் என‌!!

செக்க‌செவேலென‌ நிற‌ம்
சென்னைக்கு ப‌க்க‌த்தில்
ஆறு ஏக்க‌ர் நில‌ம்
நிச்ச‌ய‌த்துக்கே இருப‌தாயிர‌ம்
ரூபாயில் ப‌ட்டுபுட‌வை என‌


நான் ந‌க‌ர்ந்துவிட்டாதாகஎண்ணி
உன்தோழியிட‌ம்நீ பித‌ற்றிய‌
பெருமைக‌ள்சொல்லிசென்ற‌து..

வ‌ர‌வ‌ழைத்த‌ க‌ண்ணீரோடு
வ‌ற்புறுத்தினார்க‌ள்
ம‌றுக்க‌முடியா சூழ்நிலை என‌
ம‌ன‌ங்கூசாம‌ல் நீ சொன்ன பொய்களை!!!


இப்போதாவ‌து சொல்வாயா
உன்னுட‌னான‌ என் காத‌லும்
ப‌ண‌ம்மீதான‌ உன் காத‌லும்
உண்மைதானென்று..

Saturday, June 14, 2008

ஒரு சுயத்தின் உளறல்..

என் பேரு சிவா.வயசு 25 ஆகுது.நல்ல கம்பெனில வேலை செய்றேன்..போன வருசம் தான் கல்யாணமும் ஆச்சு.அழகான பொண்டாட்டி..எனக்குன்னு பாத்து பாத்து செய்வா..இந்த ஒரு வருசத்தில சின்னதா எப்பவாச்சும் கசப்பு வந்தா கூட அவளோட சிரிப்பும் விட்டுகுடுக்கும் தன்மையும் என்னை அதை மறக்கவெச்சுடும்..நல்லாவே இருந்தோம் ஒரு வருசம் வரைக்கும்..படுக்கையறையிலிருந்து எல்லாத்திலயும் அவளுக்கு பிடிச்ச மாதிரி நானும் எனக்கு பிடிச்ச மாதிரி அவளும் இருந்தோம்..

ஒன்பதாவது மாசம் சீமந்தம் முடிச்சு புள்ள பெத்துட்டு வரேன்னு அம்மா வீட்டுக்கு போயிட்டா..பொண்டாட்டி இல்லாம ரெண்டு நாள் ஏதோ போச்சு..மூனாவது நாளென்னோட தனிமை என்னை என்னமோ புரட்டி போட்டுச்சு..அவ ஞாபகமாவே இருந்துச்சு..லீவ் போட்டுட்டு அவளை பாக்க போயிட்டேன்..ரெண்டு நாள் அங்கிருந்தா ஆபிஸிலிருந்து போன் பண்ணி சீக்கிரம் வாங்கன்னு குரல்..வேலையை பாருங்கன்னு அவளும் துரத்திட்டா..

ஆபிஸ் முடிஞ்சு வீட்டுக்கு வந்தா அம்மாக்காரி எப்பவும் கஸ்தூரியில ஆரம்பிச்சு லட்சுமி வரைக்கும் அழுதுட்டு இருக்கா..சாப்பாடு கூட நேரத்து போட மாட்டா..உம்முன்னு மூஞ்சை வெச்சுகிட்டு போய் படுக்கையில இழுத்து போத்திகிட்டு படுத்தா பக்கத்தில படுத்திருந்த பொண்டாட்டி காரி தான் ஞாபகத்து வர்ரா...அதோடு அந்த லீலைகளும்..உடம்பு நெருப்பா கொதிக்க ஆரம்பிச்சுது..மண்டை காஞ்சு போய் ராத்திரிக்கெல்லாம் தூக்கம்வரமா காலையில எந்திரிச்சு கழுவின மூஞ்சும் சூம்பிபோன கண்ணுமா ஆபீஸ் போனாக்கா பக்கத்து சீட்டு பழனி என்ன மச்சி பொண்டாட்டி இல்லாம வாடிட்ட போலன்னு வெறுப்பேத்தினான்..

அடபோடா நீவேறன்னு சொல்லிட்டு திரும்பினா டேய் 150 ரூவாய் தான் ..காலேஜ் போற பொன்னு ஒன்னு இருக்கு..ஓகேன்னா சொல்லு சாயங்காலம் நேரா போயிடலாம்..எட்டு மணிக்கெல்லாம் அவளை திருப்பி அனுப்பிடலாம்..

போடா இவன...நான் எம்பொண்டாட்டிக்கு துரோகம் பண்ணமாட்டேன்னு சொல்லிட்டு வேலை முடிச்சு வீட்டுக்கு வந்து திரும்பவும் அம்மா காரியோட பாவக்கண்ணீர பாத்துபுட்டு ரூம்ல அடைஞ்சா மனசு பழனி சொன்ன காலேஜ் பொன்னுக்கா திரும்பிச்சு..நாளைக்கு போலாமா வேணாவான்னு மாறி மாறி போட்டி போட்டு சுத்துது..எப்படியோ போலாம்னு முடிவு பண்ணி தூங்கிட்டேன்.காலையில எழுந்து ஆபிஸ்க்கு கிளம்பி போய் பழனிக்கிட்ட கேக்கலாம்னு நினைச்சு நினைச்சே ஏதோ ஒன்னு தடுக்குது..கடைசி வரைக்கும் கேக்க மனசே இல்ல..வீட்டுக்கு வந்து ரூமுக்குள்ள போவாம மேயக்காட்டு பக்கமா காத்தாட உக்காரலாம்னு
அப்படியே போனேன்..

அப்ப தான் இந்த பிரியா பொன்னு அந்த பக்கமா வந்துச்சு..பாவம் கல்யாணம் ஆகி ஆறுமாசத்தில் புருசங்காரன் ஆக்ஸிடெண்ட்ல செத்துட்டான்..திரும்ப அம்மாவூட்டுக்கே வந்துட்டா..எப்பவும் அண்ணான்னு தான் கூப்பிடுவா..என்னங்கண்ணா தனியா உக்காந்துட்டு இருக்கீங்கன்னு கேட்டுபுட்டா..எங்கிருந்து வந்தது தைரியம்னு தெரியலை..எங்க பொண்டாட்டி இல்லை..தனியா கட்டில்ல படுக்க கூட முடியலைம்மான்னு பட்டுன்னு சொல்லிட்டேன்..அந்த பொன்னு சுதாரிச்சுகிட்டு சரி நான் போய்ட்டு வரேன்னு சொல்லிட்டு போக முயற்சி பண்ண பட்டுன்னு அவளை கட்டி புடிச்சுகிட்டு பிச்சை காரன் மாதிரி கெஞ்சிட்டு இருந்தேன்,,

எதோதோ பண்ண கடைசியில அந்த புள்ளயும் மடியில சாய்ஞ்சுடுச்சு..எங்க பழக்கம் அடுத்தநாளும் வந்துச்சு..இப்படியே பொண்டாட்டிய மறந்துட்டு அந்த புள்ளை மிரட்டி மிரட்டி என்கைகுள்ள போட்டுகிட்டு என் ஆசையெல்லாம் தீத்துகிட்டு என் இஸ்டத்துக்கு இருந்தேன்.இதை ஒரு நா மேயக்காட்டு பக்கமா வந்த ஆத்தா காரி பாத்து தொலைச்சுட்டா..

புள்ள பெத்தலட்சணம் போதும்னு ஊருக்கு போய் பொண்டாட்டிகாரிய இழுத்துட்டு வந்துட்டா..ஒரு மாசகுழந்தையோட பொண்டாட்டியும் வந்து சேர்ந்தா.புள்ள தறிட்கெட்டு திரியறான்னு எப்படி என் ஆத்தாகாரி என் பொண்டாட்டிகிட்ட சொல்லுவா..

அடியே அந்த பிரியா பொன்னு ஊர்ல இருக்கறவனையெல்லாம் வெச்சுகிட்டு திரியறா..வெக்கங்கட்ட சிரிக்கி..அவளுக்கு நல்லசாவே வராது..உம் புருசனையாச்சும் பத்திரமா பாத்துக்கோடி ன்னு சூசகமா சொல்லிட்டா...

என் பொண்டாட்டியும் அதையே மனசுல வச்சுகிட்டு ஏங்க சத்தியமா என்னை தவிர நீங்க யாருகிட்டயும் போகமாட்டீங்களேன்னு அழுதா..எதுவுமே தெரியாத மாதிரி ஏம்மா திடீர்னு இந்த மாதிரி கேக்குறன்னு நான் கேக்க பிரியா சண்டாளி ஊர் மேயறாளேமேன்னு அவளை திட்டுறா..

சத்தியாமா உன்னை தவிர ஒருத்தியவும் தொடமாட்டேன்..அவ அப்படி திரிஞ்சா உம்புருசனை நீ நம்பமாட்டியான்னு பொறந்த குழந்தை மேல சத்தியம் பண்ணிட்டு மனசாட்சியே இல்லாம படுத்துட்டேன்..
இப்பவும் என் பாழாபோன மனசு பிரியாவை தான் கேக்குது...சே என்னால தான் அந்த பொன்னுக்கு இப்படி ஒரு பட்டம்ன்னு நொந்துகிட்டாலும் இனிமே எப்படி பிரியாவை பாக்குறதுன்னு மனசுக்குள்ள திட்டம் ஓடிட்டிருக்கு...

நீங்க சொல்லுங்க நான் நல்லவனா ? கெட்டவனா?

Thursday, May 29, 2008

எழுதப்படாமலே.....

தேர்விற்கு படிப்பதாய் சொல்லிவிட்டு
பக்கங்கள் புரள்கிறது நேற்றுவரை
புன்னைகையை மட்டுமே சிந்தியவள்
இன்று வார்த்தைகளை உதிர்த்த நினைவுகளோடு..

மௌனஓடையின் அலம்பலில் கண்ட
உதடு சுழித்தல்களை வர்ணிக்க
வார்த்தைகள் தேடும் என் எழுதுகோல்....

கற்பனையில் மிதந்து கவிதை
தேடும் என் சிந்தனை மேல்
எச்சத்தை உமிழ்ந்து போகிறது

எதிர்பார்ப்புகளோடு பால்கொடுக்க சொல்லும்
தந்தையின் வார்த்தைகளின் முடிவில்
பாலோடுநிற்கும் தாயின் அன்பு...

வார்த்தைகள்....

துயிலுரித்த கணங்களிலிருந்து
துரத்தும் வார்த்தைகள் வணக்கங்களாகும்
விசாரிப்புகளாய் உருவெடுக்கும்
தருணங்களில் காரணமில்லாமல்
தேவையற்றதாய் போகும் சில..

உதட்டோடு நின்றுபோகும் புன்னகையை
பதிலுக்கு கக்கிவிட்டு இடம் பெயர்கையில்
கோபத்தொனியில் தொற்றிகொள்ளும்
வீம்புகளுக்கு முறைத்தலையும்
கோபத்தையும் கனையாக்கி திரும்புகையில்

எதிர்பார்ப்புகளினூடான விமர்சனங்கள்
விருவிருப்பாக்கும் பொழுதுகள்
நன்றிகளை நவின்று நகரும்..

அஸ்தமிக்கும் பொழுதோடு சேர்ந்து
முடியும் மீண்டும் வணக்கங்களாய்
இரவின் தனிமையின் வெறிக்கும்
பொழுதின் வார்த்தைகளானது
உதிரும் மயிர்களாகவும்
ஊன்றும் விதைகளாகவும்
கலந்தே விழுகிறது ....

இன்ப துன்பத்தை போல....

Friday, May 2, 2008

தேடலில்....

தொடரும் தோல்விகளின் இறுக்கத்தில்
படும் அவஸ்தைகளில் நொறுங்கும்
மனத்தினூடே வெறுத்துப்போகும் வாழ்க்கை.

எதிர்பார்த்தவைகள் கிடைக்காத கோபத்தில்
தற்கொலையை நாடவிழையும் மனம்
தனிமையை தேடி அலையும் பொழுது

திரவத்தினை கயிறுதிரித்து வலைபின்னும்
சிலந்தியொன்று இடறலினால் கீழுக்கு
தொங்கிகொண்டிருத்தலை நோக்கிய சிந்தைக்கு

கஜினியின் வரலாறு பாடத்தை
நினைவிலிருத்தி போகிறது.
தொடர் சறுக்கலில் முயற்சியூடான
சிலந்தியின் வெற்றி....

Saturday, April 26, 2008

கவிதை????

காதலிக்கான மிகைப்படுத்தப்பட்ட வர்ணனைகளில்
புதுக்கவிதை வேடமிட்டு சிலாக்கித்திருந்த
என்னெழுத்துக்களின் மீதெழுந்த விமர்சனங்களின்
அறிவுறுத்தலில் ஆரம்பித்த யோசனைகள்
கவிதையா??? கவிகொலையா ??? இதுவென

கருவறைக்காதலியென் அன்னையையும்
கார‌ண‌மின்றி நிக‌ழ்த்த‌ப்ப‌டும் துர்ம‌ர‌ண‌ங்க‌ளையும்
உள்ளடக்கிய‌ கவிதை வரிகள் முகத்திலுமிழ்ந்து
உணர்த்துக்கிறது கவிதை இதுவென..

விமர்சனங்களை தாண்டி எதிர்பார்ப்புகளோடு
எடுத்துரைக்கிற‌து ந‌ண்ப‌ரின் குரல்
என்கொலையின் தேவையற்ற அலம்பல்களையும்
சொல்லப்படாத நிதர்சனங்களையும்...

எண்ணக்கடலில் கவிதைமீன்க‌ளிருந்தும்
வெளிக்கொண‌ர‌ வார்த்தைவ‌லைக‌ளின்றி
தவித்தகணத்தில் வலைகளை கொடுத்து
காத்திருக்கும் தோழமை....

நானுமே வலைவீசி காத்திருக்கிறேன்
மீன்கள் வ‌லையேறுமென‌...

Thursday, April 17, 2008

புரிய முற்படுகையில்...

அமைதியாகதான் விடிகிறது
ஒவ்வொரு காலைபொழுதும்
அலுவல்களின் சுமூகமான ஆரம்பங்கள் கூட
அதிகபட்சமான கோபங்களால்
அலையடித்து சின்னாபின்னமாகிறது

அறிவுரைகள் குவியத்தொடங்கி
அதிகமாகிப்போகிறது இயலாமையின்
கோபத்தினூடே உளைச்சல்களும்
அதனூடான சிகரெட் எண்ணிக்கையும்.
தோழனின் தோள்தட்டல்களூடான
ஆசுவாசத்தின் கழிவிறக்கம்
தனிமையை நாட விழைகிறது

விரலுக்கிடையில் அக்னிகக்கும்
சிகரெட்டுடன் விசாலமான பூங்காவை
தாண்டுகையில் விரிந்து படர்ந்திருந்த
விலாமரமானது எதையோ உணர்த்தியபடி
உதிர்க்கிறது அதன் பழுத்த இலைகளை
தென்றலது முகம் வருடியதை சுகித்தப்படி
தாண்டிசெல்ல கோடை வெம்மையின்
புழுதிக்காற்று முகத்தில் அறைந்து
எதையோ உணர்த்த யத்தனிக்கிறது

புரியாமல் ஆழ்கடலில் முத்துக்கள் தேடுபவனாய்
யோசிக்கையில் விரல் சுட்டு புரியவைத்து
சாம்பலாகிறது சிகரெட் துண்டு..

மூன்றையும் ஒன்றாய் திணித்து
எண்ணுகையில் தெளிவாகி திரும்புகிறேன்
வாழ்க்கை வாழ்வதற்கென்று...

Wednesday, April 16, 2008

ஞாயிறொன்றில்....

அரசு உத்தியோகத்தவனின் வருகையாய்
விடியலெடுக்கிறது இந்த ஞாயிறும்
மெதுவான கசக்கலுக்குபின் தெளிவாகிறது
ஜன்னலூடன வெளிச்சமும் ஓடாத
என் கட்டிலறை கடிகாரமும்...

நேரவிசாரிப்பின் முனகலில் அன்னையின்
அர்ச்சனைகள் நினைவுபடுத்துகிறது
புதுவருட எண்ணைகுளியலையும்
அப்போதைய பத்து மணியையும்..

கட்டிலில் சாய்ந்தபடியே ஜன்னலூடே
தலைதூக்கும் எண்ணங்களை வருடிசெல்கிறது
நிழலின் தன்மையை ஏந்திவந்த தென்றலும்
மாட்டுதொழுவத்தின் புதுவரவும்

மடிமுட்டி பாலருந்தும் கன்றதனை
புதியவனா?புதியவளா ?புதிரோடு
ரசிக்கும் நினைவுலகை கலைக்கிறது
அண்டைவீட்டு மழலைப்பசியின் அழுகை

ஏனென்ற கேள்வியோடே வெளியேறும்
எரிச்சலூடான வார்த்தைகளுக்கிடையில் நுழைகிறது
அண்டைவீட்டாரின் அர்த்தமற்ற சண்டையும்
தங்கையின் குழந்தைக்கான தாலாட்டும்...

Friday, April 11, 2008

தப்பித்தும் மரணிக்கிறேன்...

அர்த்தராத்திரியொன்றில் முடிகிறது எனக்கான
அலுவல் வேலைகளும் அதனூடான உளைச்சல்களும்
கயிறவிழ்த்து தாயின் மடிநோக்கியோடும் கன்றைபோல
கண்களின் தூக்கத்தினூடே பயணிக்கிறேன்..

அரசின் நெடுஞ்சாலைதிட்டம் வேக வேகமாய்
அரங்கேறிகொண்டிருக்கிறது சாலையில் இருபுறமும்
உணவுக்காய் கண்விழித்து இரைதேடும் ஆந்தையாய்
உழைத்துகொண்டிருக்கும் மனிதர்கள் சுறுசுறுப்பாய்

சாலைப்பணிகள் விரைவாகுதையெண்ணி மகிழ்ச்சி
சாப்பாட்டுக்காய் உழைக்கும் இவர்களையெண்ணி கவலை
மாறி மாறி மனதினுள் படையெடுத்துகொண்டிருக்க
காதை கிழிக்கும் காற்றொலிப்பான் பின் தொடர

அதிர்ந்து போய் திரும்பிபார்த்தேன்
நிலைதவறி வரும் கனரகவாகனமொன்று
என்னை நோக்கி வேகமாய் வரவே
திடுக்கிட்டு சாய்க்கிறேன் சாலையோர பள்ளத்தில்..

தப்பித்த மகிழ்வோடு எழுந்து நிற்க அடுத்தநொடி
அலறலோடு அழைக்கிறது நிறைய குரல்
தூக்குகண்ட கைதியாய் பதறிப்போய் பார்க்கையில்
தூக்ககூட நாதியின்றி பாதைசமைத்தவர் சிதறிபோய் கிடக்கையில்

உயிர் தப்பியும் மரணித்தேன் மறுபடியும்.....

Wednesday, April 9, 2008

விதிவிலக்கா???

உலக காதலர்களின் மத்தியில்
விதிவிலக்காய் இருப்போமென
பேசிமுடித்தே ஆரம்பித்தோம்-நம்
இனிய காதல் பயணத்தை

தொலைபேசியின் தொடர்தலின்
தொட்டுபேசும் அளவுக்கு நெருக்கமானோம்
அடிக்கடி காத்திருக்கும் கடற்கரைசந்திப்புகள்
அமுதமென மாறும் ஐஸ்கிரீம் பகிர்தல்
அருவருப்பென சொல்லிய முத்தபறிமாறல்
அனைத்துமே அரங்கேறியது நமக்குள்ளும்

விதிவிலக்காய் ஆரம்பித்த நம் காதல்
விதியை விலக்கி தான் போனதின்று.
முத்தத்தின் வெம்மையில் தாளாமல்
முகம் நிமிர்கிறேன் நான்.

தலையிலடித்துகொண்டு தாண்டிசெல்லும்
நம் பெற்றோரின் வயதொத்த பெரியவரும்
நம் தங்கையின் வயதொத்த சிறுபெண்ணும்
உணர்த்தினார்கள் வரம்புமீறிய இழிசெயலை...

Friday, April 4, 2008

நள்ளிரவொன்றில்.....

பின்னேரபணியெனதில் இன்று தாமதாகி
நள்ளிரவில் முடித்து கிளம்பினேன்
ஆழ்ந்ததூக்க நேரத்தில் கசக்கிய கண்களுடனே
ஆரம்பித்தேன் வீடு நோக்கிய பயணத்தை..

விசாலமான நெடுஞ்சாலையின் இருபுறமும்
விருட்டென சீறிப்பாயும் கனரக வாகனங்கள்
பயத்துடனே தொடர்கிறது சாலையோரத்தில்
என் பயணமானது...

சிலதூரம் சென்றதும் சாலையொட்டிய
புதரிலிருந்து முகத்திலறைந்த வெளிச்சம்
புரியாது திரும்பி பார்க்கிறேன் ஆங்கே
புதுப்பெண்ணாய் வேடமிட்ட விலைமாதங்கே
பிழைப்புக்காய் காத்திருக்க கனத்த மனதோடே பயணித்தேன்

பயணத்தின் தொடர்தலில் தொடர்ந்தது
பணத்துக்கான விலைமாதுக்களின் வெளிச்சமும்
பரிதாபத்தோட பயணித்த சில நொடியில்
படார் சத்தம் பயத்தோடே நின்றதென் வாகனம்

முகம்தெரியா அளவுக்கு சிதைந்து போய்
குருதியொழுகிய நிலையில் துடிக்கிறது
அவனது கால்கலோடு என் மனதும்
புரிதலின் தாமதத்தில் நிலைக்கு வருவதற்குள்
நின்று விட்டது துடிப்பும் உயிருமே..

எதுவுமே செய்ய முடியா இயலாமையின்
கோபத்தில் மீண்டுமே தொடர்ந்தது
என் வீடு நோக்கிய நள்ளிரவின் பயணம்.

அதிர்ச்சியினோடே படுக்கையில் சாய்கிறேன்
அடுத்தடுத்து வந்து போகிறது என்னில்
விலைமாதுகளின் வெளிச்சமும்
முகம்தெரியா மரணத்தின் இருட்டும்......

Wednesday, March 26, 2008

அசந்தர்ப்பம்...

நான் அலுவலகத்துக்கு தினமும் பைக்கில் தான் பறந்து கொண்டிருந்தேன்.ஒரு நாள் கூட ப்ரியாவை பார்க்காமல் சென்றதில்லை.அவள் தினமும் காத்திருக்கும் ரயில் நிலையத்தில் அவள் ஏறும் முன் சென்று ஒரு ஹாய் சொல்லிவிட்டாவது செல்வேன்.இன்றும் ப்ரியாவுக்காய் அங்கே செல்ல திட்டமிட்டிருந்தேன்..
ப்ரியா என்னுடைய 3 வருட தோழி..ரொம்ப நல்லபெண்.பார்க்க அழகும் பேச்சில் அவளின் அறிவும் நமக்கே விளங்கும்..எதார்த்தமான உலகில் எல்லாவற்றையும் நல்லனவாய் பார்க்க எனக்கு கற்றுகொடுத்தவள் அவள்..எனக்கே தெரியாமல் எனக்குள் அவள் காதலியாய் விஸ்வரூபமெடுத்திருந்தாள்..
ஆனால் அவளிடம் என் காதலை சொல்ல பயமும் குழப்பமும் மாறி மாறி உந்தி தள்ள ஒரு காதலனாய் அவள் முன் நிற்க வலிமை இழந்து தான் இத்தனை நாள் கடத்திவிட்டேன்..வீட்டில் திருமணம் பற்றி தினம் தினம் தொல்லை..அதனால் ப்ரியாவிடம்இன்று காதலை தெரியபடுத்தி அவளிடம் சம்மதம் வாங்கும் நோக்கோடு தான் இன்றைய என் பயணம் ஆரம்பமானது..
"எப்படி ஆரம்பிக்கிறது.
ச்சே ஏன்டா நீ இப்படி இருக்க?,ப்ரியா வோடு மணிகணக்கா பேசிட்டு இருப்ப.இப்ப என்ன ஆச்சு?போய் சொல்லுடாப்ரியா உன்னை கல்யாணம் செய்துக்க ஆசைபடுறேன்னு கேளு
ம்ம் ஒரு வேளை சொன்ன‌துக்க‌ப்புற‌ம் அவ‌ என்னை வெறுத்துட்டா?
இல்ல‌டா ப்ரியா உன்னை வெறுக்க‌மாட்டா..நீ சொல்லி தான் பாரேன்
இல்ல‌ அவ‌கிட்ட‌ சொல்லி அவ‌ளை நான் பிரிஞ்சுட்டா நான் ...ம்ம் முடியாது..
ஏன்டா எப்ப‌வும் நெக‌ட்டிவாவே திங்க் ப‌ண்றே..பாசிட்டிவ் திங்கிங் ப‌ண்ணேன்டாநீ சொல்லு..அப்ப‌டி அவ‌ மாட்டேனு சொன்னாள்னா பேசி புரிய‌வெப்போம்.."
நானும் என் ம‌ன‌தும் பேசிக்கொண்டே சென்றோம்..
மனதின் குழப்பங்களோடு ரயில் நிலையத்தை அடைந்துவிட்டேன்..இன்னமும் ப்ரியாவை காணவில்லை..
ஹலோ ப்ரியா என்ன இன்னைக்கு ஆபிஸ் போகலையா"செல்போனில் அழைத்தேன்
ம்ம் 5 மினிட் அங்க இருப்பேன்"
ஓகே ப்பா" ஏதோ காதலையே சொல்லிவிட்ட திருப்தியோடு போனை அணைத்தேன்.
ஹே ஹேய் என்ன பண்றான் அவன் ..ஹேய் தம்பி நில்லுடா " திடீர்னு ஸ்டேசன்ல கூச்சல்..
பதட்டத்தோடு திரும்பி பார்த்தேன்..ஒருவன் ரயிலின் முன் ஓடி கோண்டிருந்தான்..நான் வேக வேகமாய் எழுந்து அவன் பின் ஓடினேன்..
டேய் தம்பி நில்லுடா ...ஏன்டா இப்படி ..ஹலோ ப்ளீஸ் நில்லுப்பா..." கத்திகொண்டே ஓடினேன்
ரயில் அருகில் வந்து விட்டது.இதற்கு மேல் என்னால் எதுவும் முடியவில்லை கண்ணை மூடிகொண்டு ஹய்யோனு கத்திவிட்டேன்
என்னை விடுங்க ப்ளிஸ்" அவனின் குரல் கேட்டது
அதன் பின் ரயிலின் சத்தம் மட்டுமே காதில் விழுந்தது..
அந்த ரயிலின் சத்தத்தின் காதையும் கண்ணையும் மூடிக்கொண்ட நான் மெதுவாய் ஒரு பயத்தோடே மெதுவாய் கண்ணை திறந்தேன்..முழுதாய் திறப்பதற்குள் நான் இன்னொரு பிறப்பும் எடுத்தேன்..
ஹப்பா அந்த பையன் முழுதாய் ஓரமாய் விழுந்து கிடக்க அவன் பக்கத்தில் ப்ரியாவும் அதிர்ச்சியில் உறைந்து கிடந்தாள்..
ஹைய்யோ ப்ரியா உனக்கொன்னும் ஆகலையே"
இல்ல தணிகை டோன்ட் வொர்ரி..ஐ ஆம் ஆல் ரைட்"
ம்ம்ம்..தேங்க்ஸ் ப்ரியா இவனை காப்பாத்தினதுக்கு"
ம்ம்ம்ம்"
பேசிமுடிப்பதற்குள் சாவதற்கே பிறந்தவன் போல எழுந்து ஓட முயற்சித்தவனை பிடித்து அறைந்தே விட்டேன்..எல்லாரும் எங்களையே பார்க்க அவனோ கண்களில் நீர் ததும்ப சாய்ந்தான்..
"ஏன் சார் ஏன் எனக்கு மட்டும் இப்படி .நான் நினைக்கரது எதுவுமே நடக்க மாட்டேங்குது"
"ஹலோ ஏன் தம்பி இங்க வா ஒன்னும் பேசவேண்டாம் ..உட்கார்" அப்படின்னு சொல்லிட்டு
"ப்ரியா நான் போய் வாட்டர் பாட்டில் வாங்கிட்டு வரேன் வெயிட் பண்னு" ஓடி போய் நொடியில் திரும்பினேன்
அவனுக்கு தண்ணீர் கொடுத்து முகத்தை கழுவிவிட்டு
"உன் பேர் என்ன‌ப்பா ? ஏன் இப்ப‌டி?""என் பேர் சிவா ,நான் பிர‌பா ந்னு ஒரு பொண்னை ல‌வ் ப‌ண்ணேன் சார்""ச‌ரி அதுக்கு ஏன் அவ‌ ஏமாத்திட்டாளா என்ன‌ ?""இல்ல‌ சார் நானும் அவ‌ளும் ரொம்ப‌ ப்ர‌ன்ட்ஸா இருந்தோம் சார்" அவ‌ன் ஆர‌ம்பிக்கும் போதே ப்ரியா பாப்கார்ன் வாங்கி கையில் வைத்துகொண்டு ஸ்டேச‌ன் கூரையை நோக்கி அச‌ட்டு சிரிப்பு சிரிப்பு சிரித்துகொண்டு இருந்தாள்.
"ச‌ரி என்ன‌ ஆச்சு?"
"என‌க்குள்ள‌ கொஞ்ச‌ கொஞ்ச‌மா அவ‌ காத‌லியா நுழைஞ்சுட்டா..அவ‌கிட்ட‌ சொல்ல‌ணும்னு எத்த‌னையோ முறை நினைச்சிருக்கேன்ஆனா அவ‌ காலேஜ் முடிச்ச‌தும் சொல்லிட‌லாம்னு நான் இருந்தேன்..நினைச்ச‌ மாதிரியே க‌ல்லூரி க‌டைசி நாள் அவ‌கிட்ட‌ காத‌ல் சொல்ல‌ போன‌ப்ப‌ அவ‌ என்கிட்ட‌ அவ‌ளோட‌ திரும‌ண‌ இன்விடேச‌ன் கொடுத்துட்டா,என்னால‌ எதுவும் சொல்ல‌ முடியாம‌ வ‌ந்திட்டேன்..ஆனா அவ‌ என் ம‌ன‌சு பூராவும் நிறைஞ்சிருக்கா..என்னால‌ ம‌ற‌க்க‌ முடிய‌லை..அவ‌ளை வேரொருத்த‌ரோட‌ க்கூட‌ நினைச்சு பார்க்க‌ ம‌ன‌சு ஒத்துக்க‌லை...என்னால் அதை பாத்துக்கிட்டு இருக்க‌ முடியாது...நாளைக்கு அவ‌ளுக்கு க‌ல்யாண‌ம் ...என்னால‌ வாழ‌வே முடியாது...அவ‌ கிட்ட‌ காதலை சொல்ல‌போன‌ நேர‌ம் தான் அச‌ந்த‌ர்ப்ப‌ம் மின்னு பார்த்தா சாவ‌க்கூட‌ முடிய‌லை..என‌க்கு எல்லாமே அச‌ந்த‌ர்ப்ப‌மா இருக்கு" தோளில் சாய்ந்தே அழ‌த்தொட‌ங்கினான்..
"இங்க‌ பாரு சிவா ...இதுக்கெல்லாம் த‌ற்கொலை ப‌ண்ணிகிட்டா யாருமே வாழ‌முடியாது..என்ன‌வோ பெருசா அச‌ந்த‌ர்ப்ப‌ம் நு சொல்றியே இதுவும் யாருக்காச்சும் கிடைக்கிற‌ ஒரு ச‌ந்த‌ர்ப்ப‌மா தான் இருக்கும்...அச‌ந்த‌ர்ப்ப‌மும் ஒரு ச‌ந்த‌ர்ப்ப‌மே" ஞானி மாதிரி பேசி முடித்தேன்.."இல்ல சார் என்னால இனிமே இருக்க முடியாது சார்" அவன் எத்தனிக்க முயற்சித்தான்"ஹா ஹா ஹா ஹா "க‌ண்க‌ளில் நீர் வ‌ரும‌ள‌விற்கு பெரிதாய் சிரித்தாள் ப்ரியா..ஸ்டேச‌னில் எல்லாரும் எங்க‌ளையே பார்க்க‌
"பிரியா ..ப்ரியா என்ன‌ ஆச்சு ந்ன்னு க‌த்தி அவ‌ளை நிலைக்கு கொண்டு வ‌ர‌
"சிவா என்னை ப‌த்தி தெரியுமா ?உங்க‌ளை மாதிரி தான் நான் கூட‌ இதே ர‌யில் நிலைய‌த்தில் த‌ற்கொலைக்காக‌ வாழ‌ வ‌ழிதெரியாம‌ல் வ‌ந்த‌வ‌ள் தான்..இதோ இந்த‌ த‌ணிகை தான் இன்னைக்கு நான் உயிரோட‌ இருக்க‌ர‌துக்கு கார‌ண‌மே வாழ‌முடியும்னு ந‌ம்பிக்கை கொடுத்த‌து எல்லாமே. வாழ‌முடியும் சிவா வாழ்ந்து தான் பாரேன்"அதிகார‌ தோனியோடு அழ‌காய் அவ‌ள் பேசிய‌து ர‌சிக்க‌ வைத்த‌து..
"இல்ல‌ங்க‌ நான் அவ‌ளை ரொம்ப‌வே ல‌வ்பண்ணேன்..ம‌ன‌சார‌ ம‌னைவியா வாழ்ந்திருக்கேன்..அவ‌ இல்லாம‌ என்னால‌ இருக்க‌ முடியாது"விடாப்பிடியாய் அவ‌ன் எண்ண‌த்திலே இருந்தான்..
"சிவா நான் ஒன்னு கேக்கிரேன் உன்னால் முடியுமா?" ப்ரியா ஏதோ புது உக்தி க‌ண்ட‌வ‌ளாய் பேச‌
"ம்ம்ம் சொல்லுங்க‌" அவ‌ன் ஏதோ ஒப்புக்கு ப‌தில் சொன்னான்.
"நீ அந்த‌ பொண்ணுமேல‌ வெச்ச‌ அதே காத‌லை முழுமையான‌ அன்பை என் மேல‌ வெக்க‌ முடியுமா? நான் உன்னை க‌ல்யாண‌ம் ப‌ண்ணிக்கிறேன்..நீ என்னை க‌ல்யாண‌ம் ப‌ண்ணிக்கிறியா? சொல்லு சிவா?"கேள்விக‌ளோடு ப்ரியா
உல‌க‌மே இருண்டு விட்டதாய் என‌க்குள் அந்த‌ க‌ண‌ங்க‌ளில் நான் முழுவ‌துமாய் உடைத்தெறிய‌ ப‌ட்டேன்..நிலைகுலைந்து எழுந்த‌வ‌ன் அப்ப‌டியே அந்த‌ சேரில் சாய்ந்தேன்...என்ன‌ ந‌ட‌க்கிற‌தென்று புரிய‌வில்லை என‌க்கு..க‌ண்க‌ளில் நீர் த‌தும்ப‌ வெளிக்காட்ட‌ முடியாம‌ல் குனிந்து கொள்கிறேன்.
"அவ‌னோ எதுவுமே பேச‌முடியாம‌ல் திகைத்து போய் நின்றான்
"சிவா என‌க்குன்னு த‌ணிகை த‌விர‌ யாருமில்ல‌..எல்லாம் அவ‌ர் தான்..அவ‌ருக்கும் என்னோட‌ இந்த‌ முடிவுல‌ ச‌ம்ம‌த‌மா தான் இருக்கும்..உன்னை மாதிரி ஒரு உண்மையான‌ காத‌ல் வெக்க‌ற‌வ‌ன் க‌ண‌வ‌னா கிடைச்சா நான் ச‌ந்தோச‌மா தான் இருப்பேன்..இது உன்னோட‌ உயிர‌ காப்பாத்த நான் எடுத்த‌ முடிவில்ல‌...ந‌ல்லா யோசிச்சு என்னோட‌ வாழ்க்கைக்காக‌ எடுத்த‌ முடிவு தான்"
"த‌ணிகை என்ன‌ அமைதியா சொல்லுங்க‌ ?உங்க‌ளுக்கு ச‌ம்ம‌த‌ம் தானே?"
ப‌தில் சொல்ல‌ முடியாம‌ல் த‌லையை ம‌ட்டும் ஆட்டிவிட்டு குனிகிறேன்..
த‌ணிகை என்ன‌ ஆச்சு உங்க‌ளுக்கு சிவா கிட்ட‌ பேசி ச‌ம்ம‌த‌ம்னு சொல்ல‌ சொல்லுங்க‌"
மெதுவாய் க‌ண்க‌ளில் வ‌ந்த‌ க‌ண்ணீரை துடைத்துவிட்டு " சிவா சொன்னேன் இல்ல‌ அச‌ந்த‌ர்ப்ப‌மும் ஒரு ச‌ந்த‌ர்ப்ப‌ம்னு .ப்ரியா ரொம்ப‌ ந‌ல்ல‌ பொண்ணு ..உங்க‌ வீட்டு அட்ரெஸ் கொடு ..நானே இந்த‌ க‌ல்யாண‌த்தை பேசி ந‌ல்ல‌ப‌டியா முடிச்சு வெக்குறேன்.உன்னோட‌ ச‌ம்ம‌த‌ம் ம‌ட்டும் சொல்லு" என்றேன்
"சிவா ஏதோ யோசித்து குழ‌ம்பிய‌வ‌னாய் த‌லையை ம‌ட்டுமே ஆட்டினான்..ச‌ரி அட்ரெஸ் சொல்லு சிவா ந்னு கேட்க‌" என‌க்கு தெரியும் த‌ணிகை..என் பிளாட்டுக்கு எதிர்த்தாப்ல‌ தான் சிவா வீடு"ஆர்வ‌மாய் ப‌தில‌ளிக்கிறால் ப்ரியா..
அவ‌ளின் ஆசைக‌ளை புரிந்த‌வ‌னாய் என்னுடைய‌ அச‌ந்த‌ர்ப்ப‌ம் நினைத்து வ‌ருந்திகொண்டே "நான் நாளைக்கு வீட்டுக்கு வ‌ந்து பேசுரேன் சிவா, பை ப்ரியா டோன்ட் வொர்ரி நான் ந‌ல்ல‌ப‌டியா முடிச்சுவ‌க்கிறேன்"ன்னு சொல்லிட்டு கிள‌ம்பினேன்..
எங்கிருந்தோ அச‌ந்த‌ர்ப்ப‌மும் ஒரு ச‌ந்த‌ர்ப்ப‌ம் தான் என்ற‌ குர‌ல் கேட்ட‌ மாதிரி தோன்றிய‌து
........................................................................முற்றும்

Friday, March 14, 2008

நான் - மெரினா - அவள் -வானவில் - மழை

ஹைய்யா ஹைய்யா எனக்குள்ள திரும்பவும் ஒரு அழகான காதல் பிறந்துடுச்சு..இனிமே பிறக்காதுன்னு தான்
நினைச்சிருந்தேன்..ஆனா என் கனவு புலம்பல்களை கேட்டு எனக்காக ஒரு தேவதையை அனுப்பிவெச்சிருக்கார்
அந்த பிரம்மா..

அட ஆமாங்க எப்பபாரு அழகான பொண்ணு கனவுன்னு சொல்லி உளருவேன் இல்ல..இப்ப உண்மையிலே ஒரு தேவதை வந்தா..உங்க கிட்ட சொல்லாம இருக்கமுடியுமா...பாசக்கார மக்களே உங்களை விட்டா எனக்கு
யாரை தெரியும் சொல்லுங்க?

ம்ம்.கதைக்கு போலாமா ஹைய்யோ இல்ல அது ஒரு அழகான கவிதைன்னு கூட சொல்லலாம்..ஏன்னா அவ ஒரு கவிதை மாதிரி தான் இருக்கா..

போன வாரம் மெரினாவுக்கு போயிருந்தேங்க..வழக்கமான என்னோடு எப்பவும் இருக்கும் என் டைரியோட..கடல் அங்க வர மனிதர் இப்படின்னு எதாச்சும் கவுஜ என்ற பேர்ல கிறுக்கி வெச்சுக்குவேன்.அதுக்கு தான் அந்த டைரி.

போய் அங்க பீச்சில் இருந்த சிமெண்ட் பென்ச் ல உக்கார்ந்துகிட்டு கடலையே தனித்து வெறித்திருந்தேன். அங்க ஒரே காதல் ஜோடி கூட்டமும் ரசிக்கும் குழந்தைகளும் குடும்பத்து ஆசாமிகளும் குவிந்து கொண்டே இருந்தாங்க.. மனசு கடலை பார்த்துகிட்டே ஒரு கேள்வியை என் டைரியில் கை எழுதிட்டு இருந்தது..

அலையே நீயும் நானும் ஒன்றுதான் போல
நீயும் யாரைத்தேடி தான் அலுக்காமல் வந்து போகிறாய் என்னை போலவே.
கவலைப்படாதே என்னவள் வருவாள் அவள் பாதம் தொட்டால் உன் தோஷம் தீரும்..நீ எதிர்பார்த்தவை கிடைக்கும்.

என்று எழுதிவிட்டு சில நேர அமைதிக்கு பின் யாருமே தனியாய் தென்படவில்லை..ச்சே கனவுலயாச்சும் நல்ல பொண்ணு நமக்கு வாய்க்கும் என்று அப்படியே டைரியை பக்கத்தில் வைத்து சாய்ந்துவிட்டேன்..நல்ல தூக்கம் கருமம் கனவு தான் வரலை..சில நேரத்திற்கு பின்

"ஹலோ தணிகை " ஒரு மெல்லிய குரல்.குரலை கேட்டவுடன் வாயில் வழிந்து கொண்டிருக்கும் ஏதோ ஒரு திரவத்தை துடைத்தவாறே எழுந்தேன்.
அட நம்ம கனவுல வர அதே தேவதை மாதிரி ஒரு பொண்ணு.எங்களுக்குள்ள உரையாடல் ஆரம்பமாச்சு..இதோ

என் பேரு எப்படி உங்களுக்கு....."

இது உங்க டைரி தானே.ஒரு குழந்தை எடுத்துட்டு வந்து போட்டுச்சு.நான் உங்களை பார்த்துகொண்டிருந்தேன் அப்போது,அதான் எடுத்துவந்தேன்..பேரை தெரிஞ்சிக்கணும்னு தோணுச்சு பார்த்துவிட்டேன்.மன்னிக்கவும்"

அசட்டு வழிசலோடு "நன்றிங்க,உங்க பே......." ச்சே இந்த அழகான பொண்ணுங்களை பார்த்தா மட்டும் ஏன் தான் நான் திக்குரேனோ தெரியலை

நான் ப்ரியா,இங்க சென்னைல தான் வீடு..எப்பவாச்சும் வருவேன்..தனியா எனக்கு ஒரே ஆச்சர்யம் தனியா உங்க வயசுல ஒரு ஆள் வரதை பார்த்து"

என்ன பண்ணங்க எனக்கு வாய்ச்சதெல்லாம் அப்படி"

அட முன்னாடி அடிபட்டு இருப்பீங்க போல இந்த விசயத்தில்"

தணிகா முத லவ் மேட்டரை எடுத்துவுடாத..அவ மனசுல எப்படியாச்சும் இடம்புடிக்கிற வழியபாருன்னு மனசுல பட்சி சொல்ல

அட அதெல்லாம் இல்லீங்க..உங்க அளவுக்கு மனசுல நிக்குற மாதிரி இன்னும் எந்த பொண்ணையும் பார்க்கல" எப்படிடா பட்டுன்னு சொல்லிபுட்டன்னு ஆச்சர்யமா நானே என்னை குனிந்து பார்க்கிறேன்..

அட என்ன ஐஸா..எனக்கெதுக்குங்க.."

ஐஸ் வாங்கி குடுத்து ஏமாத்திரவன் நான் இல்ல"அப்படின்னு வெகுளியா நடிச்சேன்.

சரி உங்களை பத்தி சொல்லுங்களேன்" அவ

சில நிமிடங்களில் சுயசரிதை எழுதிமுடித்தேன் என் வாய் தமிழால்.ஆனா முதல் காதலியோட மெரினா போன விசயத்தை சொல்லவே இல்ல.

நான்" உங்களை பத்தி சொல்லுங்களேன்"

அழகான உச்சரிப்பு,தெளிவான பேச்சு என அவளை சொன்ன விதமும் எனக்கு ரொம்பவே பிடித்துவிட்டது..அவளின் புருவங்கள் வளைந்து அடிக்கடி ஏவிய பார்வை அம்புகள் எனக்குள் தைத்து சுகமே தந்தது..

பட்டென சொல்லியே விட்டேன்.உங்களை இதுக்கப்புறம் எப்போ பார்ப்பேன்னு தெரியாது.ஆனால் உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குங்க..
காதலிக்குறேன்னு சொல்லதெரியலை..ஆனா கல்யாணம் பண்ணிக்க ஆசைன்னு சொல்லிட்டேன்

பார்த்த ஒரே நாளில் அதுவும் சில மணிநேரங்களில் இப்படி லூசு மாதிரி பேசுறான்னு நினைக்கறீங்களா?.மத்த பசங்க மாதிரி காதல் திடீர்னு வரும்னு டைலாக் விடமாட்டேன்..அவகிட்ட பேசினா கண்டிப்பா வரும்..அவ எனக்கு கிடைச்சது பாக்கியம் எனக்கு..

அப்போ திடீர்னு ஒரே கூச்சல்..ஹை வானவில் வானவில் அப்படின்னு குழந்தைகள் கத்த இருவரது பார்வையும் வானத்தை நோக்கியது.

வானவில் எனக்கு ரொம்ப பிடிக்குங்க.எவ்ளோ அழகு பாருங்களேன்"
அவ தான்

நான் அவளையே பார்த்துகொண்டு வானவில் உங்களை விட ஒன்னும் அவ்ளோ அழகா இல்லை" என்றேன்.

ம்ம்ம் சரி சரி ரொம்ப தான். எனக்கு சம்மதமே உங்களை கல்யானம் பண்ணிக்குறதில்.ஆனா கொஞ்ச நாள் போகட்டும் என்றாள்.

மனதுக்குள் குஷியோடு இனிமே அடிக்கடி வரவேண்டியிருக்கும் மெரினாவுக்கு என்றேன்..

"ம்ம்ம்ம்"

"..........." தாங்கமுடியா சந்தோசங்க எனக்குள்

" வானவில் வந்தா மழை வரும்னு சொல்லுவாங்களே,இப்ப மழை வருமோ" என்றாள்.

" ஆமாம் ப்ரியா..வானம் கூட இருட்டிட்டு வரூது"

"ஹை எனக்கு மழைன்னா ரொம்ப ப்ரியம்"

" நான் கூடத்தானே ப்ரியா"

பேசிட்டே இருக்கும் போது பட்டென முகத்தில் சிலதுளிகள் விழுந்தன.
மழை மழை வாங்க வாங்க என கூச்சல்கள் கேட்க
வேகமாய்.அடித்து பிடித்து எழுந்தேன் சிமெண்ட் பென்ச்ல இருந்து.இவ்ளோ நேரம் என் கூட பேசிட்டிருந்த என் பிரியாவை காணோம்..

அட கருமமே இதுவும் கனவா.ச்சே போங்க இவ்ளோ நேரம் நானும் நிஜமா நடந்துச்சுன்னு இல்ல நினைச்சேன்..என்னவோ போங்க நொந்துகிட்டே ஓடி போய் ஒரு மரத்தடியில் நின்னுட்டேன்..


நான் - மெரினா - அவள் -வானவில் - மழை - கனவு ..

Thursday, March 13, 2008

கனவே கலையாதே

" அம்மா நான் பள்ளிக்கு போறேன்" சிவா சொல்லிவிட்டு வேகவேகமாய் அவனுடைய பையை தூக்கி கொண்டு
தனக்காய் அம்மா செய்து வைத்த மதிய உணவோடு கிளம்பினான்.

இதோ அவனுக்கான ஒரு முன்னோட்டம்:

சிவா ஒரு திறமைசாலி.13 வயதிலே பெரிய ஞானிபோல பேசுவான்.எட்டாம் வகுப்பு படித்து கொண்டிருக்கும் அவன் கேக்கும் கேள்விகளுக்கு ஆசிரியர்களே மிரண்டு போய் நிற்பார்கள்.படிப்பில் படு சுட்டி..விளையாட்டிலும் அவன் தான் முதல்.

எப்போதும் அழகாய் தேய்த்த வெள்ளை சட்டை.அழகான முடிதிருத்தம் என அவன் முகமே அவனுடைய திறமையை வெளிச்சம் போட்டு காட்டும்.

காலையில் எழுந்து தன் அம்மா தரும் பாலை குடித்துவிட்டு சிறிது நேரம் படித்துவிட்டு அவனே எழுந்து கிளம்பி செல்வான் பள்ளிக்கு..பெற்றவர்களுக்கும் பெருமையாய் இருக்கும்.அதே போல் அவன் பள்ளியிலும் அவனை தெரியாத ஆசிரியர்களே கிடையாது எனலாம்..

இலக்கிய மன்ற போட்டிகளில் கூட அவனே முதல் பரிசை தட்டி செல்வான்.கடந்த வருடம் கூட நடந்த மாவட்ட அளவிலான கட்டுரை போட்டியில் முதல் பரிசை தட்டி சென்று பத்திரிக்கைகளில் அந்த மாவட்ட
செய்திகளில் ஜொலித்தான்..

இந்த வருடம் ஆண்டுவிழா விமரிசையாக கொண்டாட முடிவு செய்திருந்தார்கள். பள்ளியில்.


அது தான் இன்று சிவாவின் உற்சாகத்திற்கு காரணம்.ஆண்டுவிழாவை முன்னிட்டு நிறைய போட்டிகள்.பாட்டு,பேச்சு,கட்டுரை,விளையாட்டு போட்டிகள் என நிறைய ..சிவா எல்லாவற்றிற்கும் பேர் கொடுத்திருந்தான்..

பள்ளி சென்றவுடன் ஆசிரியர்கள் சிவாவை முதலில் அழைத்ததில் ஒன்றும் ஆச்சர்யமில்லை.சக மாணவர்கள் சிவாவை பார்த்து பொறாமை படத்தான் செய்திருந்தார்கள்..சிவா வே வழக்கம் போல
எல்லாவற்றிலும் முதலாவதாய் வந்தான்..


ஆசிரியர்கள் எல்லோரும் இது தான் முன்னமே தெரிந்த முடிவாயிற்றே.இரண்டாம் மூன்றாம் இடத்தை தான் நாம் தெரிவு செய்யவேண்டும்..என்று சொல்லி மகிழும் போது தன் தாய் தந்தையை மனதில் நினைத்து கர்வத்தோடு ஒரு துளி கண்ணீர் விட்டான்..

போட்டிகள் முடிவடைந்து ஆண்டுவிழா நாளும் நெருங்கியது. மாணவர்கள் அனைவரும் பெற்றோருடன்
வருமாறு அறிவுறுத்தபட்டிருந்தார்கள் முன்னமே..

இன்று சிவாவின் மனதில் ஏகத்துக்கும் மகிழ்ச்சி..காலையில் எழுந்து குளித்துமுடித்து அம்மாவையும் அப்பாவையும் அவசரபடுத்தி கொண்டிருந்தான்.

"சீக்கிரம் கிளம்புங்க,பாரு எல்லாரும் போறாங்க" என்று ரோட்டில் நடந்து போகும் சகமாணவர்களை காண்பித்தான்..

ஆண்டுவிழாவின் தொடக்கம் இனிதே..ஆரம்பமே சிவாவின் சங்கே முழங்கு நடனத்தோடு ஆரம்பித்தது.

அனைவரின் பாராட்டுக்களை பார்க்கும் போது அவனுடைய பெற்றோரின் கண்களில் இருந்து கட்டுபடுத்தாத
கண்ணீர் வள்ளுவனின் வாக்கை நிருபித்து கொண்டிருந்தது..வழக்கமான எல்லா நிகழ்ச்சிகளும் முடிவடைந்து
பரிசு தரும் நிகழ்ச்சி..ஆரம்பம்..

முதலில் இலக்கிய மன்ற போட்டிகளின் பரிசுகள் சிவா வே அழைக்கபட்டான்.சிவா தன்னுடைய பெற்றோரையும் அழைத்துகொண்டு மேடை அருகே சென்றது தான்..கை தட்டல்கள் விண்னை பிளந்து கொண்டிருக்க சிவாவும் அவன் பெற்றோரும் மேடையிலே இருக்குமாரு கேட்டுகொள்கிறேன்.சிவா வின் பரிசுகள் அத்தனை என்று கம்பீரமாய் தலைமை ஆசிரியரின் குரல் ஒலிக்க..இன்னுமே கைதட்டல் நிற்க வில்லை..

கடைசியாய் சிவா உயரம் தாண்டுதலுக்கான பரிசை வாங்க போகிறான்"

சிவா எந்திரிடா..நம்ம ராஜி அண்ணன் மெக்கானிக் கடையில் வேலைக்கு சொல்லியிருக்கேன்..போய்ட்டு
இந்த மருந்தை வாங்கிட்டு வாடா" என்று பேசமுடியாமல் மெல்லிய குரலில் ஒரு சீட்டை கையில் கொடுத்து விட்டு நகர்கிறாள்..

சிவாவுக்கு இப்போது தான் கண்டது கனவென புரிந்து நிலைக்குள் வருகிறான்.சின்ன வயதில் நன்றாக படித்தவன் போன வருடத்திலிருந்து அவன் அப்பாவின் திடீர் குடிப்பழக்கத்துக்கும் சபலத்திலும் சிக்கி
சின்னா பின்னமான நினைவுகளோடு கனவிலாவது என்னுடைய இந்த படிப்பு தொடரட்டும்..கனவே கலையாதே என்று வேண்டுகோள் விடுத்து அழுக்கு சட்டையை மாட்டிக்கொண்டு பயணமாகிறான்.

இது ஒரு கற்பனை கதை தான்.ஆனால் இது போல் எத்தனை பேர் திறமைகள் இருந்தும் தந்தையின்
தேவையற்ற சகவாசத்தால் சீரழிந்ததை பார்த்திருக்கிறேன்..ஆனால் என்ன என் வீட்டருகில் இருக்கும்
அந்த சிவா என்பவன் வேலைக்கு சென்று அப்பனை போலவே குடித்துவிட்டு வீடு வந்து விழுவான்..
என்னுடன் ஏழாம் வகுப்பு வரை நன்றாய் படித்தவன் தன் தந்தையின் பைத்தியக்காரதனத்தால் வேலைக்கு சென்று தீயவர்களின் சகவாசத்தால் அவனும் இப்படி ஆனதன் பாதிப்பு தான் இந்த கதை..

.

Thursday, February 28, 2008

பிப்ரவரி 17 அறிமுகமானாள் என் கனவு தேவதை..

பிப்ரவரி 17 அட இன்னிக்கு ஞாயிற்றுகிழமை..எப்பவும் போல 10 மணிக்கு எந்திருச்சு காலைகடன் முடிச்சு காலையில சிக்கனோட இட்லி..நல்லா தான் இருந்துச்சு ..சரி என்ன பண்ணலாம்னு யோசிச்சுட்டே இருந்தேன்.
திடீர்னு ஒரு யோசனை ..3 கிலோ மீட்டர் தாண்டினா பிரண்டு வீடு.அவன கூட்டிகிட்டு கோவளம் பீச்சுக்கு போலாம்.அங்க நிறைய கலர் கலரா பிகர்ஸ் வரும்.அப்படியே சைட் அடிச்சமா ன்னு நம்ம பிரம்மா மூணு நாளுக்கு முன்னாடி வந்து சொல்லிட்டு போன அந்த தேவதை மாட்ட மாட்டாளான்னு மனசு மூலையில
சின்னதா ஒரு ஏக்கம்.னு பொய் சொல்ல மாட்டேன் மனசு முழுக்க அவள பத்தி மட்டும் தான் நினைச்சிருந்தேன்..

ஏக்கத்தோடயே வழக்கமா நான் போடற கேஷிவல்ல இருந்து பார்மல் ட்ரஸ்க்கு மாறி கிளம்பலாம்னு முனியம்மாவை ஒரு உதை உதைச்சேன்..

"டேய் அண்ணா, எங்க போற" தங்கச்சிங்க எப்பவுமே இவ்ளோ மரியாதையா தான் கூப்பிடுவாங்க..

"( போவும் போதேவா) என்ன இப்ப"
" அம்மா அப்பாலாம் கிளம்பறாங்க வெளிய போகணுமாம்,அவங்க கூட உன்னையும் வரசொல்றாங்க"

"எதுக்கு எங்க போறாங்களாம்.இருக்கரதே ஒரு நாள் லீவு.அதைக்கூட" அப்படின்னு வண்டிய ஆப் பண்ணிட்டு வீட்டுக்குள்ள போய்

" என்ன எங்க போறீங்க நான் எதுக்கு வரணும்.எப்ப பாரு"

"கீதா அந்த போட்டோவ அண்ணா கிட்ட காட்டு.அதை பார்" அம்மா முடித்தாள்

" என்ன போட்டோ,எதுக்கு நான் பார்க்கணும் தெளிவா எதாச்சும் சொல்லுங்களேன்" டென்சனா முறைச்சேன் தங்கச்சிய

" இந்தாடா எவ்ளோ அழகா இருக்கு பாரு அண்ணி.உனக்கு பொண்ணு பார்க்க தான் போறீங்க எல்லாரும்"
ரகசிய மூட்டை அவிழ்த்தாள் தங்கை.

" எனக்கென்ன அவசரம் கல்யாணத்துக்கு.என்ன வயசாச்சி இப்ப.அதெல்லாம் முடியாது,என்னை விட்ருங்கோ"
வெறுப்பாய் பேசினேன்.

" டேய் எவ்ளோ அழகா இருக்காங்கடா அண்ணி, மிஸ்பண்ணிடாதே போட்டோ மட்டும் பாரு, உனக்கே பிடிச்சுடும்"

" இங்க பாருப்பா உனக்கு இவ்ளோ சீக்கிரம் கல்யாணம் பண்ணிவெக்க ஆசையா என்ன? நல்ல பொண்ணுடா.ரொம்ப அழகா இருக்கா..விசாரிச்சதில் எல்லாம் நல்லவிதமா தான் சொல்றாங்க.அதான் விடமுடியலை.எங்களுக்கும் ரொம்ப பிடிச்சு போச்சு.என்ன வயசாகலை உனக்கு..அதெல்லாம் கல்யாணம் பண்ர வயசுதான்" அப்பா வழக்கம் போல நீண்ட வகுப்பெடுத்தார்..

எனக்கும் ஒரு சின்ன ஆசை என்னோட தேவதையா இவளே இருந்துட்டா..சட்டென்று.

"போட்டோவ காட்டு பாத்துட்டு அப்புறமா முடிவு பண்ணலாம்.ஆனா எங்கிட்ட இவ்ளோ நாள் மறைச்சிவெச்சீங்க" மெதுவா சொல்ல

"திடீர்னு அமைஞ்சது.உன் போட்டொ எல்லாம் குடுத்தனுப்பிச்சு பொண்ணும் சரின்னு சொன்னதுக்கப்புறம் சொல்லிக்கலாம்னு தான்" அம்மா

அவர்கள் அதன் பின் பேசிகொண்டதெதையும் காதில் வாங்காமல் ரசித்துகொண்டிருந்தேன்..பின்ன என்னங்க இவ்ளோ அழகா முகத்திலே தெரியுதுங்க எனக்கு ஏத்த மனைவியா இவ இருப்பாள் என்று..

மூன்றாம் பிறை யளவு நெற்றி.சின்னதாய் ஒரு பொட்டு.அதன் இருபுறங்களும் ஆண்மையை தாக்கும் அம்புகளை எய்தும் வில்லாய் இரு புருவங்கள்.கருப்பு வண்ணமீன் கொண்ட அழகிய குளம் இரண்டு வில்லுக்கு ஏதுவாய் வளைந்து கொண்டீருக்க..

ரொம்பவே மெனகெட்டு பலமாதங்களாய் செதுக்கப்பட்ட சிற்பத்தின் வேலை பாடுகளுக்கு ஈடான ஒரு மூக்கு. பலாச்சுளையின் இதழ்களையும் ரோஜாவின் வண்ணத்தையும் குழைந்தெடுத்த உதடுகள் அழகாய் எனக்கென காதல் சொல்ல ததும்புவது போல் புகைப்படத்திலே உணர்ந்த அந்த நொடிகள். ஹப்பா சந்தனக்கட்டையை குழைத்தெடுத்த வண்ணம் கொண்ட தோல்.இப்படி ஏகத்துக்கும் என்னால் என் மனதுக்குள் வர்ணிக்கபட்டு கொண்டிருந்தாள் என் தேவதை..ஏனோ இன்னும் சிறப்பாய் வர்ணிக்க வார்த்தைகளை தேடி தமிழ் கடலுக்குள் குதிக்கிறேன்..வார்த்தை அலைகள் என்னை அடித்துவிட்டு போகிறதே தவிர அவளுக்கான வார்த்தைகளை என்னால் தான் தேர்ந்தெடுக்கமுடியாமல் சிக்குகிறேன்..

"என்னடா அண்ணா பகல்லயே கனவா' போய் முதல்ல பாத்து பேசி முடிச்சுட்டு வாங்க.அப்புறம் பாத்துக்கலாம்.அம்மா அப்பாலாம் எப்பவோ பாலண்ணா கார்ல போய் உக்காந்தாச்சு ..போடா" இவ்ளோ மரியாதை யும் கிண்டலும் வேற யாரு கீதா தான்.

வேக வேகமா போய் காரில் அமர்கிறேன்.முப்பது கிலோமீட்டர் பயணம் என் பொறுமையை சோதித்து கொண்டிருக்க ஏனோ வாகன நெரிசல்களை வெறித்துகொண்டிருக்கிறேன் கண்ணாடி வழியே..

ஒரு யுகம் கடந்ததை உணர்கிறேன்.தேவதை மாளிகையின் வாயிலை அடைந்ததும்..மனதிற்குள் ஒரு சின்னதாய் வலி ..பரிட்சையின் முடிவை எதிர்பார்க்கும் மாணவன் போல..

வழக்கம் போல இனிப்பு காரம் காபி என முடிகிறது.தேவதையின் அம்மா கையாலே..

என் ஏமாற்ற முகம் கண்ட என் அம்மா " பொண்ணை வரசொல்லுங்க,சம்பிரதாயத்துக்காக பாத்துடலாம்.எங்களுக்கு ஏற்கனவே பிடிச்சுடுச்சு..இருந்தாலும் பையனுக்காக"

(அம்மான்னா அம்மா தான்) மெலிதாய் ஒரு வழிச்சலோடு தலையை குனிகிறேன்.

"பொண்ணை பார்க்கறது என்ன .பேசவே சொல்லுங்க.அவ ரொம்ப வெட்க பட்டுகிட்டு மேலயே இருக்கா" கையை மேலெ காட்டியபடி பொறிந்து தள்ளுகிறார் கம்பீரகுரலில் மாமனார்.

குரலைகேட்ட படி கையின் திசைநோக்கி வேகமாக பயணிக்கிறேன்..மேலே

"ரொம்ப அவசரம் போல மாப்பிள்ளைக்கு" மாமியார் சொல்லி சிரிக்க அறையே சிரிப்பு சத்தத்துடன் ..ஏனோ மெதுவாக கூட போக தோணவில்லை..

வேகவேகமாக மாடியேறி கதவின் அருகே நின்றுவிட்டேன்.மரமண்டை இவ்ளோ தூரம் ரசிச்சு வர்ணிச்ச ..பேர கேக்கலியே என்ன சொல்லி கூப்பிடுறது என்னையே திட்டிகொண்டேன்..

சரி என்ன கெட்டுபோச்சு.தேவதை மாதிரி இருக்கா தேவதான்னு கூப்பிடலாம் தோண

" ஹாய் தேவதா நான் தணிகை வந்திருக்கேன்.உள்ள வரலாமா" வார்த்தைகள் பாம்பின் வாயிலிருக்கும் தவளையின் துடிப்பை போல கொஞ்ச கொஞ்சமாய் காற்றோடு கலந்து பயணிக்கிறது அவளது வளைவுநெளிவுகள் கொண்ட காதுக்கு..

வேக வேகமாய் ஒரு திறவல்.சொர்கத்தின் உள்ளே நின்று தேவதை என்னை அழைப்பதற்காய் மௌனம் மட்டுமே அல்லாது காற்றோடு சேர்ந்த மெல்லிய சத்தம் சைகைகளோடு சேர்ந்து அபிநயங்கள் கொண்டாடும் நாட்டிய பேரொளியாய் அவள் 'வாங்க " என்றாள்.

நானும் மெதுவான ஆனால் மனம் மட்டும் ஒரு புது உத்வேகத்துடனே உள்ளே சென்று கட்டிலில் உட்கார்ந்து நேருக்கு நேராய் அவளை பார்க்கமுடியாத என் கண்களை திட்டிக்கொண்டு சுழலவிடுகிறேன் பார்வையை.அறையின் அவளல்லாத பக்கங்களை..

சுழலும் இடமெங்கும் ரசனைகளின் அரசியென தெரிகிறது என்னவளின் அறையில் மாட்டபட்ட இயற்கை ஓவியங்களின் கண்ணாடி பூட்டப்பட்ட புகைப்படங்கள்.

மெதுவாய் என் அருகில் வந்து என்னை பார்த்தவள் என் கண்களை நோக்க அடுத்த நிமிடம் என்னையறியாமல் ஆடும் என் காலிலை தூக்கி இன்னொரு காலின் மேல் போட்டுகொண்டு "தப்பா எடுத்துகலைன்னா" என்று திக்கினேன்.

"இதையெல்லாம் ஆணாதிக்க போர்வைக்குள் செலுத்தி பார்க்கும் அளவுக்கு நான் இல்லை தாராளமாக" என்று சரளமாக நாட்டியமாடும் இதழ்களை பார்த்துகொண்டிருந்தேன்..

அட என்னடா இது நம்ம குழுமத்தில் இருக்கும் ஏதாச்சும் சைலண்ட் ரீடரா இந்த பொண்ணு ன்னு மனசுக்குள் தோணி "உங்க" முடிக்கிறேன்.

"ஆமா நான் கேக்கணும் உள்ள வரும் போது என்ன பேர் சொல்லி கூப்பிட்டீங்க" என்றாள்.

என்னடா இது நாம நினைச்சா இவ சொல்லிடறாளே.இவ தான் நமக்கு சரியான துணை என்று நினைத்துக்கொண்டே

"தேவதான்னு சொன்னேன்" நான்.

" யார் சொன்னது என் பேர் தேவதா ன்னு ,நான் யார்கிட்டயும் பேர் சொல்லகூடாதுன்னு தானே சொல்லிவெச்சேன்" அவள் மெதுவாய் கதவின் வழி பார்வை செலுத்த.

"இல்லை யாரும் சொல்லலை.நானே தான் பேர் தெரியாம தேவதை மாதிரி யிருக்கரதாலே தேவதான்னு கூப்பிட்டேன்.அதான் உங்க பேரா?" கேள்வியோடு மிகபெரிய சந்தோசகடலில் நீச்சலடிக்கிறேன் நீண்ட வசனம் ஒன்றை பேசியதற்காய்..

"பரவாயில்லையே.நல்ல ரசனையாளர் தான் போல நீங்க,கெஸ்ஸிங் ல யே பேரை கண்டுபிடிச்சிட்டீங்க" இன்னும் நெருக்கமான பார்வையோடு .

"உங்களை பத்தி சொல்லுங்களேன்" ன்னு நான் முடிப்பதற்குள்

"ரெண்டு பேரும் கீழ வரீங்களா.எல்லாம் கல்யாணத்துக்கப்புறம் பேசிக்கலாம்.இப்ப நாள் குறிக்க போறாங்களாம் கல்யாணத்துக்கு"
அவளின் தங்கை..

" நாங்க இன்னும் பேசவே ஆரம்பிக்கலை.நாளெல்லாம் அவங்களே குறிச்சிக்க சொல்லும்மா.நாங்க வரலை" அப்படின்னு அதட்டலும் கெஞ்சலும் சேர்ந்து நான் வழிய.

" எல்லாம் பேசிக்கலாம் காலம் முழுக்க நீங்க ரெண்டுபேரும் தானே பேசப்போறீங்கன்னு" கோரஸா கீழ இருந்து வர

" வாங்க நாம எங்கயாச்சும் வெளிய போய் பேசிக்கலாம்னு" அவ

" இல்ல பார்க் பீச்சுன்னு எங்க போய் பேசினாலும் சாந்தி அக்கா திட்டுவாங்க வேணாம்.நாம உள்ளேயே பேசலாம்" நான் முடிப்பதற்குள்

திரும்பவும் அதே கோரஸ் போடவே நானும் அவளும் ஒன்னா போய் நாங்க பேசணும் எங்களை விட்டுடுங்க ன்னு கோரஸா கத்தலாம்னு முடிவு பண்ணி போய்ட்டு

நாங்க பேசணும் எங்களை விட்டுடுங்க ன்னு கத்துறோம்.

"டேய் அண்ணா என்னடா எப்பவுமே பத்துமணிக்கு எழுந்திருக்கரவன் இன்னிக்கு 12 மணிக்கு வரையும் தூங்கறானேன்னு பார்த்தா கனவு கண்டுட்டு இருக்கியா" ன்னு என் தங்கச்சி சொல்லிட்டு இருந்தா..

ச்சீ இதுவும் கனவா ன்னு எழுந்து நொந்துகிட்டே போக என் அம்மா பாத்த பார்வையிருக்கே அப்படியே தலைய குனிஞ்சுண்டு பிரஷ் எடுத்துட்டு வெளிய வந்துட்டேன்...


என்ன மக்கா எல்லாரும் எதோ இருக்குன்னு தானே உள்ள வந்தீங்க..எனக்கு கனவுல மட்டும் தான் லே இந்த மாதிரி எல்லாம் நடக்கும்..நிஜமா நடக்கும் போது சொல்லவே மாட்டேன் உங்ககிட்ட..வர்ட்டா