CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Sunday, May 17, 2009

அனுதினமும் அவளோடு...1

இப்போதெல்லாம்
நான் கர்வத்தோடே
அலைகிறேன்..

உலகின்
குறிப்பிட தகுந்த அழகியை
மிக அருகில் பார்த்தவர்களில்
நானும் ஒருவன் என்பதால்...

ஆம் ~
ஒருதேடல் பயணத்தில்
ஒன்றை தொலைத்துவிட்டு
திரும்பியிருந்தேன் உன்னிடத்தில்!

முன்பெல்லாம்
எதுவாயினும் தொலைந்துபோயின்
என் மனம் பதறும்..

இந்த முறை
பதறுவதற்கு மனமில்லை
தொலைந்ததே அதுவாயிருக்கையில்...

நீ
என் மனம்
திருடினாய்!
உன் நினைவுகள்
என் தூக்கம் திருடின!

இந்த
இழப்புகள் எவையும்
எனக்கு வலிக்கவே இல்லை!
இதமாகவே இருக்கிறது!

உன்
நினைவு உரத்தால்
என் தனிமைப்பூக்கள்
அதிகமாய் பூக்கின்றன!

என்
தனிமைப்பூக்களை
பறிக்கும் உரிமையை
உனக்கே கொடுப்பதாய்
என் செயற்குழு தீர்மானம்
நிறைவேற்றியாயிற்று!

உன் கண்கள்
எந்த வைரத்தால் செய்தது
என சொல்லேன்!
எனக்கு மட்டும்
இரவுகள்வெளிச்சமாக இருக்கிறது
உன் பார்வையால்!

ஒரு வேளை
உனை மீண்டும்பார்க்க நேர்ந்தால்
உன் கண்களை பார்க்கவே
கூடாதென்று தான் வந்தேன்!

மூடாத
உன் விழிகள்இரண்டும்
தேடுவதெது என்பதைபார்த்துக்கொண்டே
இருக்கும்படிஆகி விட்டதே!

சரி !
இனி நீயே கண்களை மூடிக்கொள்
என்னால் பார்க்கவும் முடியவில்லை
பார்க்காமல்இருக்கவும் முடியவில்லை!

ஒரு குழந்தையிடம்
ஒரேயொருமுத்தம் கேட்டு
கெஞ்சிக்கொண்டிருந்தாய்!

கொஞ்சப்படவேண்டிய
சித்திரம் கெஞ்சிக்கொண்டிருப்பதில்
ஆதங்கம் எனக்கு!

நான் மட்டும்
அந்த குழந்தையாய் இருந்திருந்தால்
உன் கன்னத்திலிருந்து
என் உதட்டை எடுத்திருக்கவேமாட்டேன்!

என்
சீதல உடம்பு இப்போதெல்லாம்
வியர்ப்பதில்லை!
உன் மீதானகாதலால்
உறைந்து போயிருக்கிறது!

உன்
பெயர்கேட்க நினைக்கையில்
நான் உயர்இரத்த அழுத்தத்திற்கு ஆளாகிறேன்!

உன்
அருகில்வர நினைத்தாலோ
அணுக்கள் பிளவுபட்டு
நிலைகுலைந்து போகிறேன்!

(தொடரும்.......

0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..: