CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Tuesday, August 18, 2009




*
உன்
இமைகள் திறப்பதனாலேயே
என்
பொழுதுகள் விடிகிறது!

*
உன்
இதழ்கள் திறப்பதனாலேயே
என்
மொழிகள் பிறக்கிறது!

*
இரவும்
பகலும்
உன் இமைகளால் நிர்ணயிக்கப்படுகிறது!

மொழியும்
மௌனமும்
உன் இதழ்களால் உருவாக்கப்படுகிறது!

*
நீ
எனக்கு கொடுத்த
முத்தத்தின் ஈரத்தை உறிஞ்சிக்கொள்ளவே
சூரியனும் தன் கதிர்களை
நீட்டியிருக்கலாம்!

ஓசோனின்
ஓட்டைக்கு உன் முத்தமும்
காரணம் தான்!

*
என்
உயிருக்குள் புதைக்கப்பட்ட
அந்த முதல் முத்தத்தினை
எதாலும் தொடமுடியாத படி
ஒளித்துவைத்திருக்கிறது காதல்!

*
அந்த
முத்தத்தின் இனிமையை
மாதிரியாய் கொண்டே என்னால்
பலமுத்தங்கள் தரமுடிகிறது!

*
உன்
இதழ்களிலிருந்து
வருபவை போலில்லை என்று
திட்டி தீர்க்கிறது
என் முத்தம்!

*
ஒரு
முறை உன்னிதழிலிருந்து
என்னிதழுக்கு இனிமையை
ஒட்டிக்கொள்ளவா?

*
"ச்சீ போடா"
என்று மெல்லமாய் தலைத்தூக்கி
விழிமூடி கிடக்கையில்
சட்டென திருடிக்கொள்கிறது
என்னிதழ்கள்
உன் இனிமையை!

*
"இவ்ளோ தானா" என்று
நீ உதட்டை பிதுக்கும் போது
ஒரு சில முத்தங்களை
காற்று திருடிக்கொண்டிருக்கலாம்!

*
காற்றோடு
மல்லுக்கட்டி நானே
ஜெயித்துவிடுகிறேன்!
இடைவெளியில்லாமல்
இதழ் பதித்தவாறு........

*
நம்
இருவரின் முத்தத்தையும்
மூச்சிலிருந்து உள்வாங்கி
வீசத்தொடங்கியதால் தான்
காற்றின் பெயர் தென்றல்..

*
நீ
தரும் முத்தங்கள்
தன்னை விட இதமாய் இருக்கிறதென்று
பொறாமையில் வேகமாய்
வீசுவதனால் தான்
தென்றலின் பெயர் புயல்...

*
உலகுக்கே
உயிரூட்டும் காற்றுக்கு
பலப்பரிமாணங்களை தரும்
நம் காதல் கடவுள்!



*

3 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..:

ஒளியவன் said...

எளிமையான வார்த்தைகளில் அருமையான கவிதைகள். வாழ்த்துகள்.

தமிழ் said...

நல்ல இருக்கிறது நண்பரே

rose said...

தம்பி நள்ள இருக்கு பா.:)