CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Tuesday, January 27, 2009

சிதைக்கப்பட்ட இதயத்தின் குறிப்புகள்:02




இரண்டு மாதங்களுக்கு பிறகு நீயும் மேல்நிலைபடிப்பிற்காக வருவாய் என எப்போதுமே சேர்க்கை நடக்கும் மேடையையே பார்த்திருந்தேன்.ஆனால் நீ என் கண்ணில் தென்படவே இல்லை.சேர்க்கை முடிந்தது என தொங்கிய பலகையை பார்த்தபோதுஎன் காதலும் முடிந்ததாய் அழுதுகொண்டிருந்தேன்.அடுத்த நாளில் புதியமாணவர்கள் அனைவரும் வருவார்கள் என அறிவிப்பு கேட்டும் எந்த வித சலனமும் இல்லாமல் சென்றேன்.
இரவு எனக்கு வெறுமையையும் அழுகையுமாகவே முடிந்தது.சோகம் தோய்ந்த முகத்துடனே வழக்கம் போல் வந்தேன் எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி.நான் வளாகத்துள் நுழைந்து நேரே என் அறைக்கு செல்ல முற்படும் போது ஒரு முப்பது அடி தூரத்தில் நீ நின்றிருந்தாய்!

வெயிலின் வாட்டத்தில் வறண்டு போய் வெடிப்புகள் விட்ட ஒரு நிலத்தில் அடைமழைபெய்யும் போது இருக்கும் இனிமையில் நான் !என்ன செய்வதென்று புரியாமல் நான் அப்படியே உன்னையே பார்த்திருந்தேன்.நீயும் புன்னகை மறைத்த இதழோடு விழி விரித்து என்னை நோக்கினாய்!
ஒரு சில நிமிடங்கள் அசையாமல் நின்றவன் நினைவுக்கு வந்து வகுப்பறை நோக்கி நடந்தேன்.திரும்பிய உடலும் திரும்பாத நினைவுமாய்! அறைக்குள் சென்றவன் அடுத்தகட்ட போருக்கு ஆயத்தமாக யோசித்தேன்..

இடைவேளையின் போது உன்னறை நோக்கி வந்தபின்புதான் தெரிந்தது..உன்னுடன் மீண்டும் என் அத்தைமகள் சேர்ந்தே படிப்பது..ஒரு வழியாய் அவளிடமே மீண்டும் என் காதலை தூதனுப்ப முடிவுகட்டி கடிதம் எழுதவா? முன் எழுதிய கவிதையினையே எழுதி தரலாமா ? என்று யோசனைகள் இருநாட்களை கடத்தியிருந்தது..

பின் எதுவுமே இல்லாமல் மீண்டும் ஒரு முறை எனக்காய் அவளிடம் சொல்வாயா? என்று என் அத்தைமகளிடம் கேட்டேன்.அவளும் சரி என்று சொன்னது தான்..நீயே சரி என்று சொல்வதாய் எனக்கு பட்டு வானுக்கும் கீழுக்கும் பறந்தேன். மறுநாள் விடியலை எதிர்நோக்கி காலை ஏழு மணிக்கெல்லாம் வகுப்பறையில் குடிபுகுந்தேன்..மதியவேளை வரை உனை பார்க்கவோ நான் முயற்சிக்கவில்லை..

மதிய உணவையும் மறந்து என் அத்தை மகளிடம் வந்து சொன்னாயா ? என்றேன்.ம்ம்ம்ம்..இது மட்டுமே பதிலாய்.. அவள் உதடு விரியாதா? பதில் தெரியாதா என ஏக்கத்துடன் அவள் என்ன சொன்னாள் என்று கேட்டேன்..
சிலநாழிகை மவுனத்திற்கு பின் ஒரு நாள் நேரம் வேண்டும் அவள் யோசிப்பதற்கு " என்று சொன்னதுமே என் காதல் அலை அவள் மனதில் அடித்து இருக்கும் என்று ஊர்ஜிதம் செய்து கொண்டு சுதந்திரம் பெற்ற போராளியாய் மகிழ்ச்சியோடு மறுநாளினை நோக்கி பயணிக்க தொடங்கிய மனதோடு உன்னை பார்க்க வந்தேன்!

புன்னகை மட்டும் தந்தவளாய் சென்று கொண்டிருந்தாய்!நாளைக்கு நல்லதொரு முடிவும் வருமென்ற நம்பிக்கையில் நானும் நடக்க ஆரம்பித்தேன்......

தொடரும்...............

0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..: