CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Wednesday, January 28, 2009

சிதைக்கப்பட்ட இதயத்தின் குறிப்புகள்:03




நாளை கண்டிப்பாய் அவள் என்னை ஏற்றுக்கொள்வாள் என்ற நம்பிக்கையுடனே என் அந்தி மாலை முடிந்தது.இரவுக்குள் நுழைந்த நான் எழுதுகோலெடுத்து என்னவள் பெயரை என் நோட்டுபுத்தகங்கள் முழுக்க எழுதிகொண்டிருந்தேன்..
எவ்வளவு எழுதியும் என் தாகம் தீர்வதாயில்லை.எனக்கு வயிற்றுபசிதான் எடுத்ததாயில்லை..சாப்பிட அழைத்த அம்மாவிடம் படிக்கவேண்டும் என்றுபொய் சொல்லிவிட்டு உனக்காய் உன் முகம் பற்றிய சிலவரிகளை கிறுக்கினேன்.

பௌர்ணமி நிலவினுள்
ஓர் அமாவாசைஅழகாகவே!

என்னவளின் உதட்டோரமச்சம்!

உன் உதட்டுக்கு கீழிருந்த அந்த மச்சம் எத்தனை அழகாய் இருக்கும்.இதை எழுதிவிட்டு பார்த்தேன்.அந்த ஐந்து வார்த்தைகளிலே நான் கவிதை எழுதிவிட்டதாய் சிலாகித்துகொண்டு இருந்தேன். இப்படியே சிலநேரம் அதை ரசித்து விட்டு அடுத்து ஒரு உதட்டையும் அதன் கீழ் இடது ஓரத்தில் மச்சமும் வரைந்து உன்னையே வரைந்ததாய் நினைத்து வெகுநேரம் பார்த்திருந்தேன்.

நள்ளிரவையும் தாண்டி நான் விழிகளை மூடாமல் கனவு கண்டுகொண்டிருந்தேன்..நாளை அவள் முன் அழகாக தோன்றவேண்டுமென்று அர்த்தராத்திரியில் இஸ்திரி பணியில் இறங்கிய என்னை பார்த்து என் தந்தை என்ன தான் ஆச்சோ இவனுக்கு என்றபோது மனதுக்குள் சிரிப்பு மட்டுமே!
கட்டுரைப்போட்டியில் முதல்பரிசாய் வென்ற அலாரம் எனக்கு அன்று தேவைப்பட ஒரு அரைமணிநேர தேடலுக்கு பின் ஐந்து மணிக்கு அலாரம் வைத்தபோது மணி நான்கினை தொட்டிருந்தது.ஒரு வழியாய் கண்மூடி படுக்கையில் நாளை என்ன நடக்கும் என்ற ஆவலிலே என்னன்னவோ கற்பனை. நீயாகவே என்னிடம் வந்து பேசுவது போலவும் அதன் பின் திருமணம் குழந்தை என ஒரு பத்து பதினைந்து வருடங்களை தாண்டி பயணித்துகொண்டிருந்த மனதை அலாரம் திசை திருப்ப வேக வேகமாய் எழுந்து கிளம்பினேன்.

வழக்கமாய் வெறுப்புடன் நடந்து செல்லும் மூன்றரை கிலோமீட்டர் தூரம் கூட எனக்கு பெரிதாய் தெரியவே இல்லை.ஏழரை மணிக்கெல்லாம் பள்ளிக்கு வந்தவன் உன் வருகைக்காக பேருந்து நிலையம் வரை வந்து காத்திருந்தேன்!
சில நிமிட காத்திருப்பின் பின்னர் இறங்கி வந்த நீ எதையுமே அறியாதவள் போல் நடக்க தொடங்கினாய்.நேற்றைய கனவுகோட்டைகள் எல்லாம் நொருங்கி விடுமோ என்ற பயத்துடனே உன் பின்னே நடக்க ஆரம்பித்தேன்!

கடைசிவரை திரும்பாதவள் உன் வகுப்பறைக்குள் நுழையும் முன் திரும்பி புன்னகைத்து சென்ற கணம் வேரோடு புடுங்கவிருந்த ஒரு மரத்திற்கு கொடுத்த முட்டுகொம்பினை போல் இருந்தது!
பின் மதியவேளை வரை உனை காணும் வாய்ப்பு கிட்டாமல் வகுப்பறையில் தலைவலி என்று சொல்லி ப்டுத்திருந்தேன்.மதியம் ஓடிவந்து அத்தை மகளிடம் கேட்டபோது அவளின் முகத்தில் இருந்த சந்தோசமே சம்மதம் என காட்டியது !
ஆமாடா ! அவள் ஓகே சொல்லிட்டான்னு சொல்லும் போது சில அடி தூரத்தில் நின்றிருந்த உனை பார்க்கையில்இதழ்விரித்து நீ புன்னகைத்தாய் மீண்டும்! ரொம்ப நன்றி சத்யா என்று சொல்லிவிட்டு சிட்டென பறந்து ஓடிப்போய் என் நண்பர்களிடம் மச்சான் சக்சஸ்டா என்று சொன்ன போது வலிகளுக்கு பின்னால் வரமாய் பிறக்கும் குழந்தையினை பெற்ற தாயின் மகிழ்ச்சியை பெற்றிருந்தேன்!

ஒருவழியாய் என் நினைவுகள் பூலோகம் திரும்பி வந்து உன்னிடம் எப்படி பேசுவதென்ற யோசனைக்குள் இறங்கினேன்....
பேசுவதறகான இடம்,பொருள் தேடி...............


தொடரும்....

1 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..:

rose said...

நல்லா இருக்கு உங்கள் சிந்தனை........:)