CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Tuesday, March 17, 2009

மர்மநாவல்

மெல்ல மெல்ல நகரும்
நாவலின் கடைசி பக்கத்தின்
அதிர்ச்சி மர்மத்தையே
நீயும் கொண்டிருந்தாய்!

ஆறாண்டு காலங்கள்
புரட்டிய காதல்பக்கங்கள்
கடைசியில் கண்ணீரில்
நனைந்து அழிந்து போகையில்

நீயும் ஒரு
மர்ம நாவலாகவே
தெரிந்தாய் எனக்கு!

படித்துமுடித்த நாவலின்
சம்பவங்கள் ஆட்கொள்ளும்
நிகழ்வுகள் என்னமோ
சிலகாலம் மட்டுமே!

நீ
நீங்காத வலிதந்த
நீளமான நாவலாகவே
நீள்கிறாய் என் வருடங்களில்!

உனை மறக்கும் யுக்திகளில்
தோற்று தோற்று இப்போது
இறக்கும் யுக்திகளை மேற்கொள்கிறேன்!
அவைகளும்தோற்றுபோகிறது
உன் நினைவுகளால்

வரலாறு எழுதாத நிகழ்வுகளாய்
என் வ‌லிக‌ள் க‌விதைக‌ளாய்!

0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..: