CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Friday, December 18, 2009

தனித்த இரவொன்றின் கனவு....


அந்தக்கனவு
எனக்கு மிகப்பிடித்தமாய் இருக்கிறது!

ஒரு
குழந்தை என்னைப்பார்த்து
புன்னகைத்துக்கொண்டிருந்தது!

ஒரு
இருக்கையை விட்டுக்கொடுத்தற்காக
இயலாமையொன்று
நன்றி நவின்றது!

ஒரு
மற்றும்
இன்னொரு
குரல் காதல்மொழியை
பேசிக்கொண்டிருந்தன!

அதே
பேருந்தில் தான்
அவளென் அருகில்
நின்று புன்னகைத்தாள்!

அந்தக்கனவு
எனக்கு மிகப்பிடித்தமாய் இருக்கிறது!

0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..: