CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Tuesday, December 28, 2010

கனவுகள் விளையாடும் தெருக்கள்

1.
இதழ்களில் நுழையும் ஒரு
மழையிலாடிக்கொண்டிருக்கிறாள்
சிறுமியொருத்தி.
யுவனொருவன் அவனுக்கான
யுவதியோடு கைக்கோர்த்து
நடந்துகொண்டிருந்தான்..
மழைத்துளிகள் தெறித்த
ரோஜா ஒன்றை வாங்கியவனொருவன்
கனவில் பறக்கத்தொடங்கினான்.
நீலநிறக்குடைக்குள்ளொருத்தி
கம்பியிலொழுகும் துளிகளோடு
விளையாடிக்கொண்டே போனாள்.
ஓடிக்கொண்டிருந்த
வெள்ளத்தில் கரைந்துபோன
கனவுகளை கண்டவாறு
உட்கார்ந்திருந்தன இரு கண்கள்....

2.
நீ
சொன்னவாறே
பிறந்துபார்க்கிறேன்
இன்னொருத்தியின் கணவனாக
நீ
பெற்றடுக்காத குழந்தையின் தகப்பனாக
நீ
இல்லாத ஓர் உலகிலும்......

எல்லாப்பிறப்பின்
தெருக்களிலும் விளையாடிக்கொண்டிருக்கின்றன
நீயும் நானும்
சேர்ந்துகண்ட கனவுகள்
வேறு பலர்களோடு..

நீயும் விளையாடலாம்
அதேகனவுகளோடும்
யாரோ ஒருவனோடும்........

0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..: