1.
கடலுக்கு அடியிலிருந்து
பறந்துவந்தது
சில வெந்நிற புறாக்கள்.
அவைகளை
திடீரென தோளில் ஏந்தியவாறு
தோன்றின சில தேவதைகள்
உறக்கமற்ற அவனது
இரவை தாலாட்டுப்பாடி
தூங்கவைத்தது ஒரு அழகிய குரல்.
காதல் உள்ளிறங்கிய
அவன் கனவில் தேவனாக மாறிப்போயிருந்தான்..
2.
வெண்பனிப்புகை சூழ்ந்து ஈரம்
படர்ந்த விடியலில்
மஞ்சளும் சிவப்பும் கலந்த
பட்டாம்பூச்சி சிறகுகள் பல
அவன் காதல் மேல் பறக்கத்தொடங்கின..
மல்லிகைப்பூக்களின் வாசம்
முதல்முறையாய் அவன்
நுகர்வுக்குள் நுழைந்தது..
அவள் இவன் மார்பில் சாய்ந்து
காதலை ஊற்றிக்கொண்டிருந்தாள்..
3.
பின்னொரு இரவில்
அதே கடலுக்கடியிலிருந்து
பறந்துவந்தன கருநிற கழுகுகள்.
அவைகளை கடித்துகுதறியவாறு
தோன்றின சில இரத்தக்காட்டேரிகள்
வழிந்த குருதியில் அழிந்துபோன
அவன் உறக்கத்தினெதிரில்
இன்னொருவனோடு புணர்ந்துக்கொண்டிருக்கிறாள்
அவள்.
இந்த
இரவின் சாபம் பெற்ற
தேவன் இன்னமும்
தேவனாகவே இருக்கிறான்...
அவள்
இன்னதென்று சொல்லமுடியாததாய்
இருக்கிறாள்
Tuesday, December 28, 2010
இரவின் சாபம் பெற்ற தேவன்
எழுதியது parattaionline எண்ணமானநேரம்.. 7:11 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..:
Post a Comment