நிஜங்கள் முடிவுக்கு
வரும்போதெல்லாம்
நினைவுகள் ஆரம்பமாகிவிடுகிறது.
சுகமாகவும் சோகமாகவுமே!
சுகத்தில் மூழ்க நினைத்தால்
சோகம் ஆட்கொண்டு அணைக்கும்.
தனிமையின் அசைபோடுதலில்
வருடும் தென்றலில் கொஞ்சம்
நனைக்கும் மழையில் கொஞ்சம்
வெளிவிடும் புகையில் கொஞ்சமென
நினைவுகள் உதிர்த்துபோகும்..
மறக்கபடகூடாதவைகள் விடுபட்டும்
மறக்கதுடிப்பவைகள் விடுபடாமலும்
நின்று அடம்பிடிக்கும்..
நானும் அடம்பிடித்துகொண்டிருப்பேன்
தேங்காயை உருட்டும் நாயினை போல....
Thursday, July 24, 2008
பிரியாத நினைவுகள்...
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 4:41 AM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
வகை கவிதை
Wednesday, July 23, 2008
தேவையற்ற வெள்ளாமை..
கோபத்தின் வெள்ளாமையில்
பகைமை விளைச்சலில்
தலை கவிழ்தலோ
தவறுகளின் ஆரம்பமோ தான்
முடிவாயிருக்கும்..
ஆசுவாசத்தின் கழிவிறக்கம்
அமைதியின் பலனை
நினைவிருத்தினாலும்
பருவங்களில் வெள்ளாமையெடுக்கும்
கோபம் தணிந்ததாகவே இல்லை..
தேவையற்ற வெள்ளத்தின்
சேதங்கள் மட்டும் அடிக்கடி
அரங்கேறிகொண்டு தானிருக்கும்..
கோபத்துக்கான காரணங்களை
அர்த்தமாக்க முற்பட்டுகொண்டே.......
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 4:40 AM 1 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
வகை கவிதை
Monday, July 7, 2008
புணர்தலென்பது.. - சுயம்சொன்னால்
காமத்தில் சிக்குண்ட உடல்கள்
எத்தனையோ..
உடல்களின் புணர்தல் பெருகியும்
காமத்தின் உணர்தல் மட்டும்
தணிந்ததாயில்லை..
மனைவியோடு புணர்தலென்பது
பிரேதத்தின் உணர்தலாகவே
இருக்குமெப்போதும்...
~ஆயினும்~
உடல்களின் தேடல்கள் மட்டும்
தொடர்ந்துகொண்டேயிருக்கும்..
கார்த்திகையில் நாயை போலவே..
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 2:48 PM 5 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
வகை கவிதை
Friday, July 4, 2008
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் வாணி அக்கா...
அமெரிக்காவில் தமிழ் பள்ளியில் பகுதிநேர ஆசிரியையாக அ ஆ இ இந்த மூன்றெழுத்து மட்டுமே கற்று தரும் ஆசிரியையாய் இருந்தாலும் அமெரிக்காவில் சென்று தமிழ்பணி செய்வதில் இவர் மீது எனக்கு இன்னும் பற்று அதிகமானது..
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 7:10 PM 1 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
வகை வாழ்த்துகள்
Wednesday, July 2, 2008
நான் நானாக இருந்ததே இல்லை..
சிலநேரம் சிரித்திருப்பேன்
சிலநேரம் மௌனமாயிருந்திருப்பேன்
சிலநேரம் பேசிகொண்டேயிருந்திருப்பேன்
சிலநேரம் கோபங்களை கக்கியிருப்பேன்
சிலநேரம் வேசம் போட்டிருப்பேன்
தேவைக்கேற்றோ அல்லது
தேவைகளின்றியோ
எல்லா தருணங்களிலும்
எல்லா உணர்வுகளும் மாறி மாறி
என்னுள் பயணித்திருக்கும்.
நான்
நானாக இருந்ததே
இல்லை எப்போதுமே..
நான்
விரும்பியவைகள் நிலைக்காமலோ
விரும்பாதவைகள் நின்றுகொண்டோ
அடம்பிடித்துகொண்டிருக்கும்..
~ஆயினும்~
விருப்பங்களோ வெறுப்புகளோ
இல்லாமல் இருந்ததே இல்லை..
காற்றின் அசைவுக்கெல்லாம் இசையும் மரத்தினை போல....
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 7:50 PM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
வகை கவிதை
Tuesday, July 1, 2008
நான் கடவுளாகி விட்டேன்..
திடீரென ஒரு மாற்றம்
என் தலையைசுற்றி
ஒளிவட்டம் சுற்றுகிறது..
எல்லா உணர்வுகளையும்
உள்ளடக்கி தேவையானதருணங்களில்
வெளிபடுத்த தயாராகிவிட்டேன்..
எதையும் மாற்றியமைக்க
முடிகிறது என்னால்- ஆம்
நான் இப்போது கடவுளாகிவிட்டேன்.
என் சக்தியை வெளிபடுத்த
தொடங்கிவிட்டேன் இப்போது..
இலேசான தென்றலாய் ஆரம்பிக்கிறது
எனது சக்தி..திடீரென மேலெழும்பி
குளிர்காற்றாய் மாறி தூரலில்
கீழறங்கும் போது அசுரமழையாய்
முடிகிறது..
யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை..
எல்லாரும் பரிசுத்தமாய் மாறினர்.
மனிதம் ஜனனமெடுக்கிறது..
ஆணும் பெண்ணும் சமத்துவமாய்
பேணுகிறார்கள் குடும்பத்தை..
கையேந்திய குழந்தைகளெல்லாம்
பூங்காவில் விளையாடிகொண்டிருக்க
அடுத்தவனின் மரணநாள் குறிப்பவன்
அவனுக்கு பிறந்தநாள் வாழ்த்தனுப்ப
அரசியலெங்கும் சந்தனம் வீசுகிறது
அவரவர் பணிமட்டுமே செய்கிறார்கள்
எங்கோ கால் இடறியவனை ஓடிப்போய்
எல்லாரும் தாங்கமுற்படுகிறார்கள்..
புற்றுநோயாய் புரையோடிய இலஞ்சம்
என்ற பேரையே மறந்துவிட்டிருக்கிறார்கள்..
போர்களோ பொருட்சேதமோ உயிர்சேதமோ
எதுவும் காணவில்லை பூமியில்..
தெரியாமல் இடித்துவிட்டால் கூட
பணிவோடே மன்னிப்புகள் கேட்பதும்
இதெற்கெல்லாமா என்று தட்டிகொடுத்து
சகஜமாய் மானுடர்கள் மகிழ்ச்சியாய்..
-ஆம்
மனிதம் தழைத்து விட்டது..
மனங்களில் மகிழ்ச்சி மட்டுமே..
கடவுளுக்கு நன்றி சொல்ல
கடமைபட்டுள்ளதாய் மக்கள்
குழுமிவிட்டார்கள்..
என்னை பூஜிப்பதாய் எனக்கு
படையல்கள் வந்த வண்ணம்..
யார் முதல் செய்வதென்று மீண்டும்
பிரிவினை வரவே என்னையும்
பிரிக்க வந்துவிட்டனர்..
ஐயகோ!!!
மீண்டும் ஏன் மானிடனே?
இதற்காகவா
நான் ஜனனமெடுத்தேன்?
கதறிகொண்டே ஓட
ஆரம்பிக்கிறேன்..
தரையில் விழுந்த என்னை
என்னவாயிற்று என அன்னை
தழுவுகிறாள்..
அப்பப்பா இதுவும்
கனவு தான்..
கனவில் கூட மனிதனின்
பிரிவினை முன்னிற்பதை
நொந்துகொண்டு
அலுவலகத்தில் மூழ்குகிறேன்..
தினசரியாய்
நடக்கும் நிகழ்வுகள்
நடந்துகொண்டே இருக்கின்றன!!
காற்றும் காலகாலமாய் வீசிகொண்டிருப்பதாய்.....
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 11:18 PM 1 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
வகை கவிதை
தனிமைகள்.
சில விருப்பங்களுக்காகவோ
சில தோல்விகளுக்காகவோ
சில தேடல்களுக்காகவோ
சில மகிழ்ச்சிக்காகவோ
சில நிம்மதிக்காகவோ
சில கொலைபிண்ணனிக்காகவோ
சில தற்கொலைகளுக்காகவோ
என வாழ்வின் ஒவ்வொரு
தருணங்களிலுமே
காரணங்களேயன்றியும்
காரணங்களை உட்நுழைத்தும்
தனிமைகணங்கள்
பின்னப்படுகின்றன..
சிலவற்றில் தீர்வுகள் கிடைத்தும்
பலவற்றில் தீர்வுகள் கிடைக்காவிடினும்
காரணங்களை உட்நுழைத்து
தனிமைபூக்கள் மலர்ந்துகொண்டே இருக்கும்..
கரையை நோக்கியே அலையின் தேடல் போல...
எழுதியது தணிகை எண்ணமானநேரம்.. 11:15 PM 0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..
வகை கவிதை





