CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Friday, July 10, 2009

தனிமையில் உன்னுடன்....


நெரிசல்களோடான
என் பயணத்தில் எனை ஆட்கொண்ட
தனிமையின் நினைவில்
ஏதோ ஒரு பிரதேசத்தில்
கைக்கோர்த்தபடியே நடந்துகொண்டிருந்தோம்!
ஒருகையில் உன் விரல்களை
பின்னிக்கொண்டு
ஒரு கையில் செவ்வானத்தை
இழுக்கமுற்படும் என் மௌனங்களின்
சப்தம் யாருக்குமே கேட்டிருக்கவாய்ப்பில்லை!
உன்னை உரசியபடியே
அதோ தூரத்தில் பறக்கும் அவ்விரு
பறவைகளின் நேசத்தையும்
உனையே சுழலும் என் காதலையும்
என்னுடன் பயணிப்பவர்களுக்கோ
உனக்கோ தெரிந்திருக்கவாய்ப்பில்லை!
ஏனோ உனக்கு தெரியப்படுத்தவும்
எனக்கு தெரியவில்லை!

2 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..:

ஒளியவன் said...

நல்ல உணர்வின் வெளிப்பாடு தம்பி. தொடர்ந்து எழுது.

rose said...

நல்ல உணர்வு பூர்வமாக இருக்கு தணிகாசலம் ..........:) உங்கள் ஒவ்வொரு வரிகளும் என்னையும் அவ்விடத்துக்கு கூட்டிச் செல்கிறது...