CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Monday, June 8, 2009

வழிதெரியா மீன்கள்...

அகலவாய்விரிக்கும் சூரியனின்
பசியில் வற்றிபோகும்
ஏரிக்கு எவ்வித வருத்தமுமில்லை!

மேகக்கருவறைக்குள் குடிபுகுந்து
அடுத்தகணமே அவைகளுக்குள்
கூடலோ கைகலப்போ
ஏற்படின் மீண்டும் உயிர்பெறும்!

நீராடையை உடுத்தி
வாழ்ந்த மீன்களோ
மானம் போனதாய் மரணத்தை
உட்கொள்ளுகிறது!

இப்போது
ஏரியாய் நீயும்
மீன்களாய் உன் நினைவுகளும்.....

0 பேர் எண்ணத்தை பாத்திருக்காங்க..: